வாழ்க வளமுடன்!

Wednesday, March 09, 2011

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ...


சிரிப்பு

சிரிப்பு… எதிரே இருக்கும் யாரையும் எளிதில் கவர்ந்து விடும். பன்சால் என்ற இளம்பெண்ணின் மகிழ்ச்சி ததும்பிய நாட்களில் இவளுடைய முகத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை. ஆனால் திருமணத்திற்கு பின்னர் இவளுடைய முகத்தில் கவலை மட்டுமே குடியிருந்தது. இவளுடைய கணவர் ஆர்மியில் பணியாற்றுபவர் என்பதால், முகத்தில் சிரிப்பு என்பதே இல்லை. இதனால் இவளுக்கும் சிரிப்பு மிஸ் ஆனது. இதன் தாக்கம் இவளுடைய உடம்பும் மெலிந்து ஆரோக்கியம் கெட்டுப் போனது. இதை அறிந்த அவளுடைய தோழிகள் அவளுக்கு நன்றாக சிரிக்குமாறு அறிவுரை கூறினர். சிரிப்பு என்பது நம்முடைய உடம்பு, மனதில் ஏற்படும் வலிகளைப் போக்கும் வலி நிவாரணி. இதுவொரு முகத் தசைகளை அழகாக்கும் அழகியல் காரணி என்பதை பன்சாலுக்கு புரியவைத்தனர். சிரிப்பதால் இளமை மெருகேறும். தற்போது பன்சால் நன்றாக சிரிக்கிறாள்.
சிரிப்பு என்பது நமக்கு மட்டுமின்றி, நம்மை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷப்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.

மன்னிப்பு

சிலரது இயல்பே அவர்கள் எத்தனை உயர்நிலையில் இருந்தாலும் அவர்களை எளிதில் அணுகும் விதத்தில் இருக்கும். அதேநேரம் இந்த மனநிலை எல்லாருக்கும் வராது. மேலும் இதே மனநிலையில் தொடர்ந்து வாழ்வதும் மிகவும் கஷ்டமானது. அப்படியொரு மனநிலை உங்களுக்கும் வரும்போது கண்டிப்பாக இந்த வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றமுடியும். தீயவற்றை மறப்பதும், அதனால் ஏற்பட்ட தவறுகளை மன்னிப்பதும் நம் வாழ்க்கையின் சந்தோஷத்திற்கான அடிப்படை காரணிகள்.

உள்வாங்குதல்

நமக்கு எதில் விருப்பம் அதிகம் என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப விஷயங்களை தேடிச் செல்வது, அதற்கான கருத்துக்களை உள்வாங்கி காதில் போட்டுக் கொள்வது, அது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவது என நம்மை நாம் அறிந்து கொண்டால் மகிழ்ச்சியை அதிகரித்துக் கொள்ளலாம்.
நாம் அடிக்கடி கேட்கும் மனதுக்கு பிடித்த ஒலியின் மூலம் நம்முடைய உடலும், மனதும் உற்சாகமாகும் என்பதை ஒப்புக் கொள்கிறார் பிரபல சைக்யாட்ரிஸ்ட். ஹாரன் சப்தம் எரிச்சலை உண்டு பண்ணும். மென்மையான ஒலிகள் நம்மை தாலாட்டும்.

சுவாசத்தின் வாசம்!

நம்முடைய சுவாசம் மிகச் சரியாக இருக்கும்பட்சத்தில் நம்முடைய உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் அடிப்படையில் உருவானதுதான் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி.
ஒவ்வொரு மனிதனும் சுவாசத்தை மிகச் சரியாக செய்யாதபோது, செயல்பாடுகளில் சிறந்த முறையில் கவனம் செலுத்த முடியாது. மூச்சுப்பயிற்சியை மிகச் சரியாக செய்ததால்தான் யோகிகள் தாங்கள் நினைத்த இலக்கை அடைந் தனர். தியானமும் இதன் அடிப்படையில் உருவானதே. ஆனால் இதில் மூச்சுப் பயிற்சியை முறையாக கையாண்டால் மட்டுமே சிறந்த பலன்களை பெற முடியும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்ததாகவும், அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையில் பல மாற்றங்களை சாதிக்க முடிந்ததாகவும் கூறுகிறார் பிரபல மருத்துவர். உடலில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், சீரான மூச்சு விடுதல் மூலம் அதை குணப்படுத்த முடியும். மூச்சு விடுதலை நாம் முறையாக செய்யும்போது மனதை அமைதியாக்கி, நமது குறிக்கோளை கண்டிப்பாக அடைய முடியும்.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதையே பத்துமுறையாக்கும்போது கண்டிப்பாக வித்தியாசமான அனுபவத்தை பெறமுடியும். புத்துணர்ச்சி, அதிக எனர்ஜி, சூழலை எளிதாக கையாளும் திறன் ஆகிய மூன்றும் கிடைக்கும். இதைத் தான் தியானம் மூலம் நாம் பெறுகிறோம்.
தினமும் எட்டு நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் போதும், பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டுப் பாருங்கள்… புது அனுபவத்தை உணர்வீர்கள்!

கனிவு… அன்பு!

மற்றவர்கள் மீது அன்பு செலுத்தினால், நமது ஆயுள் நீடிக்கும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். மற்றவர்கள் மீது நாம் அளவுக்கு அதிகமான அன்பை செலுத்தும்போது நமது உடலில் உள்ள ஹார்மோன் நமக்கு நல்ல உணர்வுகளை கொடுக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் அன்பை வெளிப்படுத்தும்போது ஹார்மோன் பிரச்சினைகள், ரத்த அழுத்தம், மன அழுத்தம் குறைகிறது. ஆரோக்கியமும், மன அமைதியும் அதிகரிக்கிறது.
ஒருவர் மீது அன்பு வைத்தால் போதும், தொடர்ந்து நமக்கு அது சந்தோஷத்தை கொடுக்கும். குறிப்பாக தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து அன்பை செலுத்தும்போது அதற்கேற்ப குடும்பத்தில் இல்லறம் இனிக்கும் என்று கூறுகிறார் பிரபல செக்ஸ் மருத்துவர்.
அன்புக்கு எல்லையே இல்லை. நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது அன்பை செலுத்தும்போது, அந்த பிராணியும் உங்கள் மீது அன்பை வெளிப்படுத்தும். இதனால் நம்முடைய மனது அமைதியாகி, உடல் ஆரோக்கியமாகும்.

Wednesday, March 02, 2011

சர்க்கரையை தவிர்ப்பது அவசியம்


சிகரெட், மது முதலியவற்றைப் போல் சர்க்கரையும் ஆபத்தானது என்றே சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சருமநோய்கள், முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், நீரிழிவு நோய் இப்படி எல்லா நோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது.    குளிர்பானங்கள், செயற்கை உணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. இனிப்பும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து விடுவதால், இதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டு விடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
தினமும் 24 தேக்கரண்டி சர்க்கரை நமது உணவில் சேர்ந்தால் அது 92 சதவிகித வெள்ளை ரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.
உடலில் அதிகஅளவு சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோனுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.
காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சர்க்கரையை பயன்படுத்துங்கள், போதும். நம்முடைய உடம்பின் ஆரோக்கியத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.