Search This Blog

Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Thursday, October 04, 2012

சிறு குழந்தை வளர்ப்பு ஒரு வயது வரை...


கால் முளைத்த வானவில் க்ளுக் என சிரிக்கும் தளுக் என முறைக்கும்  உதடுகளால் உதைக்கும் தத்தித் தாவி நடக்கும் இந்த ‘வானவில்’ எதையாவது எடுக்கிறது... கடிக்கிறது... தடுத்தால் முறைக்கிறது. அல்லது ங்கே என அழுகிறது. மெல்லப் புரளும். சுவரைப் பற்றிக்கொண்டு நடக்க முயற்சிக்கும். எழுந்து உட்காரும். சுற்றிலும் இருக்கும் பொருட்களைத் தொட்டு, பிடித்துப் பார்த்து, கடித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கும். உங்களின் அத்தனை பேச்சுக்கும் எதிர்பேச்சுப் பேசும். தண்ணீர் டம்ளரை எடுக்க முயற்சிக்கும். ‘ம்மா’, ‘ப்பா’, ‘தாத்தா’ என தனது மழலை இசையால் மயங்க வைக்கும். பட்டுரோஜாவைப் போல தொட்டிலில் படுத்திருந்த அந்தப் பட்டுக்குட்டி உருண்டு, புரண்டு, தவழ்ந்து, எழுந்து நடக்க முயற்சிக்கும். ஒரு ரோஜாத் தோட்டம் போல கைகளை நீட்டியபடி, ‘அச்சச்சோ விழுந்துடுவானோ’ என நம்மைப் பதற வைத்து, வேகமாக வந்து கழுத்தைக் கட்டிக்கொள்ளும் அழகே அழகு. அப்போது முத்தமிடும் மகிழ்வின் சுகம் தாய்மையின் வரம்.

6 மாதம் முதல் 1 வயது வரை குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கம் தருகிறார் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் உஷா இளங்கோ. ‘‘ஆறாவது மாதத்தில் குழந்தைகள் தாய்ப்பாலில் இருந்து திட உணவுப் பழக்கத்துக்கு மாறுகின்றனர். இடையில் தாய்ப்பாலோ, தேவைப்பட்டால் பசும்பாலோ தரலாம். புரதம், மாவு, கொழுப்பு உள்ளிட்ட அனைத்து சத்துகளும் உள்ள சரிவிகித சத்துணவு அவசியம். குழந்தைக்கு ‘பிகேவியரல் செட்டப்’ அவசியம். சின்னச் சின்ன விஷயங்களில் கூட பழக்கவழக்கத்தை நடைமுறைப்படுத்தும் உத்திகளை கையாள வேண்டும். 

மூன்று வேளைக்கும் உணவாக வெறும் சாதம் அல்லது இட்லி என ஏதாவது ஒன்றை வயிறு முட்ட சாப்பிட வைப்பதற்கு பதிலாக, காலையில் பசிக்கத் தொடங்கும்போது கொஞ்சம் சூப், வேக வைத்து மசித்த காய், மதியம் பருப்பு சாதம், ஏதாவது ஒரு பழவகை என கலந்து கொடுக்கலாம். அப்போதுதான் குழந்தைக்கு வெவ்வேறு சுவைகள் கிடைக்கும். மல்ட்டி வைட்டமின் சத்துகள் கிடைக்கும். அடம் பிடிக்காமல் சாப்பிடவும் பழகுவார்கள். 

குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம், ஏப்பம், சூடு போன்ற பிரச்னைகளுக்கு சீரகம், வெந்தயம் போட்டுக் கொதிக்க வைத்த தண்ணீரைத் தருவதன் மூலம் தீர்வு காணலாம்.  மருத்துவமனையில் தரப்பட்டுள்ள தடுப்பூசி அட்டவணையை சரியாக கவனித்து, குறித்த காலத்தில் குறித்த ஊசியைப் போட்டு விட வேண்டும். 9ம் மாதத்தில் தட்டம்மை தடுப்பூசி போட வேண்டும்.  

குழந்தைகள் தங்கள் கைக்கு கிடைத்த பொருட்களை எல்லாம் வாயில் வைத்து, சுவைத்துப் பார்த்து, ஆராய்ச்சி செய்யும் காலம் இது. அவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். விளையாட்டுப் பொருளை குழந்தைகள் விழுங்கும் அபாயம் உள்ளது. குழந்தைக்கு கிருமித்தொற்று ஏற்படாமலிருக்க, விளையாட்டுப் பொருட்களை கழுவிப் பயன்படுத்த வேண்டும். 

6 மாதத்துக்கு மேல் குழந்தைகளை அடிக்கடி வெளியில் எடுத்து சென்றால் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புண்டு. வெளியில் செல்லும்போதே குழந்தைக்கான உணவையும் பாதுகாப்பான குடிநீரையும் எடுத்துச் செல்ல வேண்டும். வெயில், நெருக்கமான கூட்டத்தில் குழந்தையை நீண்ட நேரம் அழ விடுவது போன்ற செயலைத் தவிர்க்கலாம். மற்றவர்கள் கொஞ்சும் போது கிருமித் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வதிலும் தாய் கவனமாக இருக்க வேண்டும். 

வெயில், மழை, குளிர் என தட்பவெப்ப நிலைக்குத் தகுந்தாற்போல குழந்தைகளுக்கு நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முன் கூட்டியே யோசித்து உடை, உணவு முறை ஆகியவற்றில் தேவையான மாற்றத்தை செய்யலாம். குளிர், மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவுகள் வரலாம். வெயில் காலத்தில் அஜீரணம், வியர்க்குரு ஏற்படும். தொடர் அழுகை, உணவு மந்தம், இருமல், தும்மல், தூக்கமின்மை போன்ற சங்கடங்கள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை கேட்டு மருந்து தர வேண்டும். நாம் தரும் மருந்து காலாவதியாகிவிட்டதா என்பதை கொடுப்பதற்கு முன் சோதிக்க வேண்டும். காலாவதியான எந்த மருந்தையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது.  

தவழ ஆரம்பிக்கும் வயதில் குழந்தைகளை அதன் போக்கில் கீழே விட வேண்டும். நிலத்தில் முட்டியை வைத்து குழந்தைகள் தவழ்ந்தால் அந்த இடத்தின் தோல் பகுதி கருப்பாகி விடும் என்று சிலர் குழந்தைகளைத் தவழ விடாமல் தடுக்கின்றனர். இது தவறு. வீட்டில் குறைவான இடம் இருந்தால்கூட அவர்களைத் தவழ விட வேண்டும். அப்போதுதான் முட்டித் தசைகளில் இயக்கமும் எலும்பில் வலிமையும் உண்டாகும். முட்டியைப் பயன்படுத்தி தவழும்போது வயிறு, முதுகெலும்புக்கான பயிற்சியும் கிடைக்கும். 

குழந்தையின் மூளை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அதற்கான சின்னச் சின்ன பயிற்சிகளைத் தாய் தொடங்க வேண்டும். அடர் வண்ணங்கள் கொண்ட சிறிய அட்டைகளைக் காட்டி விளையாடலாம். உருவங்களைக் காட்டி அவற்றின் பெயர்களை சொல்வது, வெவ்வேறு சத்தங்களை எழுப்பி விளையாட்டுக் காட்டுவதையும் குழந்தைகள் ரசிப்பார்கள்.  

சாப்பாடு ஊட்டுவதை சுலபமாக்க குழந்தைகளை டிவிக்கு முன்னால் அமர வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு விஷயத்தில் சில நிமிடங்கள் மட்டுமே குழந்தைகள் ஈடுபாடு காட்டும். டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டால் குழந்தைகள் உணவின் சுவையை அறிந்து சாப்பிட மாட்டார்கள். அளவுக்கு அதிகமாகச் சாப்பிடவும் வாய்ப்புள்ளது. கார்ட்டூன் பாடல்களைக்கூட அதிகபட்சமாக அரை மணி நேரம் மட்டுமே பார்க்க அனுமதிக்கலாம். 

இசை கேட்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். 6 மாதங்களில் அவர்களுக்குப் புரியும்படி கைகள், முகபாவனைகள் மூலம் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லலாம். பொம்மைகளையும் பொருள்களையும் வைத்துக்கொண்டு கதை சொல்லி, நடித்துக் காட்டினால் குழந்தைகள் மகிழ்வார்கள். அவர்களது கற்பனை உலகமும் விரிவடையும். இரவு தூங்கப் போவதற்கு முன்னால், கதை சொல்வதை வழக்கப்படுத்தினால் அவர்களுடைய தூக்கம் இனிமையாகும். தாய், புத்தகம் படித்துக் கதைகள் சொல்லும் போது, அவர்களுக்கும் படிக்கும் பழக்கம் தானாக வந்து விடும். 

நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய காலம் இதுதான். வழக்கமாக குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் பாட்டியைப் பயன்படுத்தி குழந்தைகளை அதில் உட்கார வைத்து சிறுநீர் போக சொல்லித்தர வேண்டும். முதலில் அடம்பிடித்தாலும் பின்னர் பழகிக் கொள்வார்கள். பாட்டியில் அமர வைத்து பழக்கப்படுத்தும் போது படுக்கையை நனைக்கும் பழக்கமும் மாறும். மலம் கழிப்பதையும் பழக்கப்படுத்த வேண்டும். 

வாயில் விரல் சப்புவதைத் தடுக்க, அதற்கான கிளவுஸ் பயன்படுத்தலாம். விளையாடி முடித்தவுடன் அனைத்து பொருட்களையும் சேகரித்து பையில் போட்டு, அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். சாப்பிட வைக்க அம்மா தட்டுடன் சாலையில் நிற்பது தவறு. தினமும் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதைப் பழக்கப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் அடம் பிடித்தாலும் போகப் போகப் பழகுவார்கள். 

குழந்தைகள் துறுதுறுவென இருக்கும் காலம் இது. அதற்காக டென்ஷன் ஆகவேண்டியதில்லை. சுறுசுறுப்பாக விளையாடினால்தான் ‘மோட்டார் டெவலெப்மென்ட்’ நன்றாக இருக்கும். குறிப்பிட்ட மாதத்தில் பார்த்தல், கேட்டல், புரிந்து கொள்ளுதல்,  எதிர்வினையாற்றுவதில் தாமதம் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும். ‘குழந்தையின் மாமா ஒரு வயதில் நடந்தார்’, ‘அப்பா இரண்டு வயதில்தான் பேசினார்’ என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, மருத்துவரிடம் ஆலோசிப்பதைத் தள்ளிப்போடக் கூடாது.

ரெடிமேட் உணவுகள், கலர்ஃபுல் உணவுகள், மூளையை வளர்க்கும் உணவுகள் என விளம்பரங்களை முழுக்க நம்பிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு டம்ளர் பாலில் அத்தனை சத்துகளும் கிடைக்காது. குழந்தைகளுக்கு இரண்டு வேளை மட்டும் பால் கொடுத்தால் போதும். திட உணவு தராமல், பால் மட்டுமே குடித்துக் கொண்டிருந்தால் குழந்தைகளுக்கு சத்துக்குறைபாடு ஏற்படும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையவும் வாய்ப்புள்ளது. சத்துக்குறைபாடு, குழந்தைகளுக்கு நோய் வாய்ப்பை அதிகரிப்பதுடன் வளர்ச்சிக் குறைபாட்டையும் உண்டாக்கும். விளம்பரங்களைப் பார்த்து குழந்தையை சோதனை எலியாக பயன்படுத்தக்கூடாது’’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் உஷா. 

நீங்கள் யானை. அவன் யானைப் பாகன். அவனுக்குத் தெரிந்த மொழியில் விரட்டுகிறான். அந்தக் கட்டிவெல்லத்தின் மந்திரக்கோலின் முன் வீட்டில் உள்ள அத்தனை பேரும் சொன்னதைச் செய்யும் சமர்த்து பொம்மைகள்தான். 6 மாதம் வரை குழந்தையை கையில் எடுப்பது, தூங்க வைப்பது என்று அனைத்தையும் அம்மாவே செய்து கொண்டிருப்பார். 6 மாதத்துக்குப் பிறகுதான் குழந்தைக்கும் தந்தைக்குமான நெருக்கம் அதிகரிக்கும். மடியில் கிடத்தி விளையாட்டுக் காட்டுவது, விரல் பிடித்து நடக்க வைப்பது... இப்படி குழந்தையின் மீது, தான் வைத்திருக்கும் அன்பை தந்தை வெளிப்படுத்தலாம். 
உங்கள் செல்லம் அவளாக இருந்தால் அம்மா. அவனாக இருப்பின் அப்பா. 

மனதளவில் மண்டியிட்டு அவர்களிடம் நிறைய கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்துக்கான அழகுகளை முதல் தொடுகை, முதல் வார்த்தை, அடம், அழுகை எல்லாவற்றையும் மறக்காமல் ஏதாவது ஒரு வடிவத்தில் பதிவு செய்யுங்கள். அவர்களின் விரல் பிடித்து நடக்க சம்மதியுங்கள்... உங்களது குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்வார்கள். ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியின் பிரதிநிதி. அத்தனை டென்ஷனும் அந்த குட்டிச் சிரிப்புக்கு முன் பனித்துளி. விளையாடி விளையாடி பறவையாகி, பட்டாம்பூச்சியாகி, கண்ணாடி மொட்டாகி காணாமல் போவீர்கள்! அட... கால் முளைத்த வானவில் இத்தனை ஜாலங்கள் செய்யுமா? செய்யும்! 

Thursday, July 05, 2012

திகைக்க வைக்கும் செக்ஸ் கொடுமைகள்!


அதிர்ச்சியானது.. கவலைக்குரியது.. அனைவரும் அறிந்துகொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டியது.. என்ன விஷயம் தெரியுமா?

- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்ற கொடுமை!

* 53 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

* பாதிக்கப்படுபவைகளில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளின் சதவீதம் அதிகம்.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப குழந்தைகளைவிட மேல்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம்.

* ஒன்று முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இந்த பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள்.

* 5 முதல் 12 வயது வரை பாதிப்பின் உச்சம். பாதிக்கப்பட்டவைகளில் 40 சதவீதம் இந்த வயதுதான். 30 சதவீதம் பேர் 13-14 வயதினர்.

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்கிற வர்கள், பீடோபீலியா (Peadophilea) என்ற வக்கிர புத்தி கொண்டவர்கள். இது ஒரு மனநோயாகவும் கருதப்படுகிறது. 

சிறுவர்- சிறுமியர்கள் மூலம் இன்பமடையும் வக்கிரவாதிகள் மேலைநாடுகளில் அதிகம். `சைல்டு செக்ஸ் டூரிசம்' என்ற பெயரில் அவர்களை சில சமூக விரோத அமைப்புகள் ஆசிய நாடுகளுக்கு அழைத்து வருகின்றன. முன்பு தாய்லாந்து போன்ற நாடுகளில் கால்பாதித்த இந்த பாதகர்கள் இப்போது இந்தியாவில் ஒடிசா, கோவா, மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு ரகசி யமாக வந்து `ஆசைகளை' தீர்த்துவிட்டு போகி றார்கள்.

இது தொடர்பான சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்களில் 15 சதவீதத்தினர் 15 வயதிற்கும் குறைவானவர்களாக இருக்கி றார்கள். 25 சதவீதத்தினர் 16 முதல் 18 வயதிற்கு உள்பட்டவர்கள். 2005-ம் ஆண்டு இந்தியாவில் 44,476 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார் கள். அவைகளில் 11,008 குழந்தைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவர்கள் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

- குழந்தைகளை எளிதாக ஏமாற்ற முடியும்.

- குழந்தைகள் காட்டிக்கொடுக்காது.

- குழந்தைகளுக்கு விளைவுகளை புரியத்தெரியாது. எதிர்ப்பு தெரிவிக்காது.

- தனக்கு ஏற்பட்ட பாதிப்பை குழந்தைகளுக்கு விளக்கத் தெரியாது. விளக்கினாலும் பெற்றோர் அதை நம்பமாட்டார்கள்.

- வயதானவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சும் பாவனையில் வக்கிர செயலில் ஈடுபடும் போது, பெற்றோருக்கு சந்தேகம் வராது.

இப்படிப்பட்ட பல காரணங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித் துக்கொண்டே போகிறது. கற்பனைக்கு எட்டாதவிதத்தில்கூட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள் அல்லது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், வேலைக்காரர்கள், அம்மாவின்- அப்பாவின் நண்பர்களாக வந்து போகிறவர்கள்.... போன்றவர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். புதிய நபர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு.

பயணங்கள், திருவிழா, திருமணவிழாக்களில் உருவாகும் மக்கள் நெருக்கடியை பயன் படுத்தி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தருபவர்கள் உண்டு. குழந்தை தொழி லாளர்கள், தெருவோரக் குழந்தைகள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவது சாதாரண விஷய மாக மாறிக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள், ஒருசில பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பாலியல் பலாத்காரத்தால் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலா வதாக அவர்களுக்கு பால்வினை நோய்கள் உண்டாவதை குறிப்பிடலாம். குழந்தைகளின் `உறுப்பு' பகுதியில் புண்களோ, கட்டிகளோ, சீழ் வடிதலோ இருந்தாலும் குழந்தையின் தாய்க்கு அது பால்வினை நோயின் அடையாளம் என்ற சந்தேகம் வருவதில்லை. ஒருசில மருத்துவர்களும் அது பால்வினை நோயின் அறிகுறி என்பதை உணராமல், வேறு விதமான சிகிச்சைகள் கொடுத்துவிடுவதும் உண்டு.

நன்றாக தெரிந்தவர்களால் குழந்தைகளுக்கு பாலியல் பாதிப்பு ஏற்படும்போது, அவை களின் உடலில் காயங்களோ, சிராய்ப்புகளோ இருப்பதில்லை. அதனால் பெற்றோரோ, மருத் துவர் றகளோ குழந்தை பலாத்காரத்திற்கு உட்பட்டிருக்கிறது என்று முதலில் நினைப்ப தில்லை. அப்படியே நினைத்து விசாரித்தாலும் குழந்தையால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறமுடியாது.

வெளிநபர்களால் பாதிப்பு ஏற்படும்போது காயம், சிராய்ப்பு, உறுப்பு பகுதியில் ரத்தம் வடிதல் போன்றவை காணப்படும். அவசரத்திலும், பயத்துடனும் அந்த பாதகர்கள் செயல்படுவதால் குழந்தைகள் காயம் அடைந்துவிடுகின்றன.

பலாத்காரத்திற்கு உள்பட்ட குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றன. பால்வினை நோய் மற்றும் காயங்களை சிகிச்சையால் குணப்படுத்திவிடலாம். ஆனால் மனநிலை பாதிப்பால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். வயதுக்கு மீறிய பாலியல் மாற்றங்கள், மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, எதைக் கண்டாலும்- யாரைக் கண்டாலும் பயம், தனிமை மீது விருப்பம், உணவில் நாட்டமின்மை, போதை மருந்துகளுக்கு அடிமையாகுதல், வீட்டை விட்டு ஓடுதல், படிப்பில் ஆர்வமின்மை, பாலியல் தொழில் ஆர்வம் போன்றவை முக்கியமான எதிர்கால பாதிப்புகளாகும்.

மக்கள் விழிப்புணர்வு கொண்டால் மட்டுமே இந்த பாதகத்தை தடுக்கவோ, குறைக்கவோ முடியும். சமூகத்தின் அடிப்படையில் இருந்து இந்த பணியை தொடங்கவேண்டும். பள்ளி கள், கல்லூரிகள், மருத்துவ துறை, தன்னார்வ அமைப்புகள், அரசு அமைப்புகள் ஆகிய அனைத்தும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும். தங்கள் தம்பி, தங்கை களை காத்து கண்காணிக்க மூத்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். குழந்தைகளின் உடலில் எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது நல்ல தொடுதல் என்றும்- எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது தவறான அணுகுமுறை என்றும் சொல்லித்தர வேண்டும். இதை சரியாக சொல்லித்தர அம்மாக்களாலே முடியும்.

மற்றவர்களின் பிரச்சினைக்குரிய செயல்கள் பற்றியோ, பிரச்சினைக்குரிய நபர்கள் பற்றியோ குழந்தைகள் கூறினால் அதை அலட்சியப்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். யாரையும் நம்பி குழந்தைகளை விட்டுச்செல்லக்கூடாது. பொது இடங்களில் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த பாதகத்தில் ஈடுபடு கிறவர்கள் நீதியின் முன்னே நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஒரு தனிநபர் பிரச்சினையோ, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்து பிரச்சினையோ இல்லை. இது சமூக பிரச்சினை. அதனால் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒத்துழைத்து இதை தடுக்கவேண்டும்.

நன்றி: டாக்டர் என்.உஸ்மான் M.D., D.V., Ph.D., 
(பாலியல் நோய் நிபுணர் மற்றும்
உலக சுகாதார நிறுவன ஆலோசகர்) சென்னை.

Saturday, April 21, 2012

கர்ப்ப காலத்தில் தனிமை ஏன்?

சத்குருவிடம் ஒரு கேள்வி:


நம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிப் பெண்களை கர்ப்பக் காலத்தின் பிற்பகுதியில் தனியாக வைத்துப் பராமரித்திருக்கிறார்கள், அது எதனால்?

சத்குரு: புதிதாகப் பிறந்த ஒரு குழந்தையின் மண்டையோட்டைக் கவனித்திருக்கிறீர்களா? மண்டையோடு முழுமையாக இருக்காது. உச்சியில் சிறிய பகுதி தோலால்தான் மூடப்பட்டிருக்கும். பிறந்த குழந்தை மிகவும் மென்மையாகக் கையாளப்படுவதற்கு அதுவும் ஒரு காரணம். அப்பகுதி ‘பிரம்மரந்திரா’ என்று அழைக்கப்படுகிறது. ‘ரந்திரா’ என்றால் சிறிய துளை அல்லது வழி என்று அர்த்தம். பெண்ணின் வயிற்றில் கரு ஒரு பிண்டமாக இருக்கும்போது, இந்த துளை வாயிலாகத்தான் புதிய உயிர் இறங்குகிறது. இந்த உடல் தனக்குத் தகுதியானதுதானா என்று கருவில் புகுந்த உயிரானது கடைசி நிமிடம் வரை தேர்வு செய்யும். அந்த அளவு விழிப்புணர்வு அந்த உயிருக்கு இருக்கிறது. 

WD
ஒரு வேளை இந்த உடல் தனக்குத் தகுதியானதல்ல என்று அந்த உயிர் உணர்ந்தால், தலை உச்சியில் உள்ள அந்த வாயில் வழியாகவே வெளியேறிவிடும். உடலில் வேறு பல வாயில்கள் இருந்தாலும் அதன் வழியாக வெளியேற அந்த உயிர் விரும்புவதில்லை. எனவேதான், விரும்பாத உயிர் வெளியேறுவதற்கு வசதியாக குழந்தை பிறக்கும்வரை அந்த வாயில் திறந்தே இருக்கிறது. இறந்தே பிறக்கும் பல குழந்தைகளைப் பார்க்கும்போது, மருத்துவர்களுக்கே பல நேரங்களில் விந்தையாக இருக்கும். ஏனெனில், அந்த உடலைப் பார்க்கும்போது, மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால், அந்த உடலில் உயிர் இருக்காது. ஏனெனில், உயிர் கடைசி வரையிலும்கூட தேர்வு செய்துகொண்டே இருக்கும். 

அந்த உயிருக்கு என்று ஒரு கர்மா இருக்கும், பிண்டத்துக்கு என்று ஒரு கர்மா இருக்கும். 90 சதவீதம் ஏன் அதற்கும் மேலாகக்கூட அந்த உயிரின் தேர்வு சரியாகத்தான் இருக்கும். சரியான பிண்டத்தைத்தான், கருவைத்தான் தேர்ந்தெடுத்திருக்கும். ஆனாலும் தவறு நேர்ந்துவிடலாம் என்ற விழிப்புணர்வு அந்த உயிருக்கு எப்போதும் இருக்கும். 

இந்தக் காரணத்துக்காகத்தான் நம் கலாச்சாரத்தில், கர்ப்பமடைந்த ஒரு பெண்ணைச் சுற்றி பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. பிறக்கப்போகும் குழந்தையின் அப்பா, அம்மா ஆகிய இருவரையும்விட, சிறந்த உயிர் அந்தக் கருவுக்கு வந்து தங்க வேண்டும் என விரும்பினார்கள். தாங்கள் எந்தத் தன்மையில் இருக்கிறோமோ, அதையும்விட உயர்ந்த தன்மையில் உள்ள உயிர் அந்தக் கருவைத் தேடி வர வேண்டும் என விரும்பினார்கள். அதனால்தான் அவள் ஒரு குறிப்பிட்ட வசதியான சூழ்நிலையில் பராமரிக்கப்பட்டாள். சுமுகமான சூழ்நிலை, நல்ல எண்ணங்கள் என்று அவளின் மொத்தத் தன்மையும் இனிமையாக இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். அவளைச் சுற்றிலும் நறுமணமான சூழ்நிலை, சரியான சப்தங்கள், சரியான உணவு, என மொத்தமும் கண்காணிக்கப்பட்டன. வரக்கூடிய புதிய உயிரை வரவேற்க அவள் முற்றிலும் தகுதியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டனர். குறிப்பிட்ட மாதங்களுக்குப் பிறகு, அவளுடைய கணவன்கூட பல காரணங்களுக்காக அவளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. 

ஆனால், தற்போது கர்ப்ப காலத்திலும் கடைசி வரை ஒரு பெண் வேலைக்குச் செல்கிறாள், சினிமா, டி.வியில் எல்லாவிதமான காட்சிகளும் பார்க்கிறாள். எல்லாப் பொது இடங்களுக்கும் போகிறாள். கர்ப்பம் அடைந்துள்ள பெண்களுக்கான பழைய பராமரிப்பு முறைகள் தற்போது இல்லை. இன்றைய உலகில் அவையெல்லாம் சாத்தியமே இல்லை என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்!

Friday, February 17, 2012

உங்களுக்கு ஆண் குழந்தை வேண்டுமா அல்லது பெண் குழந்தை வேண்டுமா?

வேதாத்திரி மகரிஷி வேண்டிய குழந்தை பிறக்க ஒரு பயிற்சி சொல்கிறார். அந்தப்பயிற்சி இதோ:

கருத்தரிக்கும் நேரத்தில் ஆணின் மூச்சு வலப்பக்கமாகவும், பெண்ணின் மூச்சு இடப்பக்கமாகவும் ஓடிக்கொண்டிருந்தால் பிறக்கும் குழந்தை ஆண். அதுவே மாறினால் பெண் குழந்தை.

பயிற்சி:
தரையில் அமர்ந்து கொண்டு வலக்காலை இடக்கால் மேல் போடவும்.
வலக்கையை வலக்கால் தொடையில் வைக்கவும்.
இடக்கையை தரையில் ஊன்றிய படி அமரவும்

இவ்வாறு தினந்தோறும் பத்து நிமிடம் இருக்கவும்

இப்படிச்செய்தால் மூச்சு வலப்பக்கம் ஓடும். இவ்வாறு 2 - 3 மாதங்கள் பயிற்சி செய்து பழகலாம்.

இடது பக்கம் மூச்சு ஓட மாற்றிச் செய்யவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...