Search This Blog

Showing posts with label இன்சூரன்ஸ். Show all posts
Showing posts with label இன்சூரன்ஸ். Show all posts

Monday, March 05, 2012

இன்சூரன்ஸ் கம்பனிகளை 2011ல் ரூ.30000 கோடி ஏமாற்றியிருக்கிறார்கள்

இன்ஸுரன்ஸ் என்பது ஒருவரின் அசம்பாவித சம்பவ இழப்பீட்டை பகிர்ந்தளிப்பதன் மூலமாக மற்ற அனைவரும் ஏற்பது. அதாவது உங்களுடைய இழப்பை ஒரு சமுதாயத்திலுள்ள மற்ற அனைவரும் ஏற்பது. சுருக்கமாக எளிய முறையில் சொன்னால்  ஒரு அலுவலகத்தில் யாருக்கேனும் மருத்துவ செலவு அவசரமாக ஏற்பட்டால் அங்கு பணிபுரியும் அனைவரும் சிறு சிறு தொகையைச் செலுத்தி மொத்தமாக பாதிக்கப்பட்ட நபரிடம் வழங்குவோம். அதுபோல்தான் இன்ஸுரன்ஸும். இன்சூரன்ஸ் கம்பனி ஒரு முகவராக இதில் செயல்படுகிறது. 

ஆனால் இதில் சிந்திக்க வேண்டிய விஷயம் ரூ.30000 கோடி கடந்த வருடத்தில் இந்தக் கம்பெனிகள் இழந்திருக்கின்றன. குறிப்படத்தகுந்த செய்தி என்ன எனில் அந்தக் கம்பெனியில் வேலை செய்வோரும் இன்ஸூரன்ஸ் கிளைம் வாங்குவோரும் போர்ஜரி டாகுமெண்ட்களைக் கொடுத்து கிளைம் வாங்கியிருக்கிறார்கள். கிளைமுக்கு போலி சாவும் மிக முக்கிய ஒரு காரணம். இந்த 30000 கோடி என்பது இன்சூரன்ஸ் இண்டஸ்டிரியின் மொத்த மதிப்பில் 9% . அதாவது வருட வசூலாகும் ரூ.3.50 லட்சம் பிரிமியத்தில் இது 9%. (IRDA மதிப்பீட்டின்படி) இதில் 86% லைஃப் இன்ஸுரன்ஸ் பிரிவிலும் மீதி பொதுக் காப்பீட்டுப் பிரிவிலும் நடந்திருக்கிறது.

இதன் விளைவுகள்:

1) கிளைம்களின் நம்பகத்தன்மை குறையும்
2) மிகவும் கடினமான நிபந்தனைகள் அமலுக்கு வரும்
3) மிக மிக முக்கியமாக பிரிமியம் தொகை உயரும். அதாவது யாரோ ஏமாற்ற நாம் நமது பாக்கெட்டிலிருந்து அதிகத் தொகை செலவழிப்போம்.
4) சில பிரிவு கிளைமுகளுக்கு இனிமேல் இன்சூரன்ஸே கிடையாது என அறிவிக்கலாம்
5) நமது நாட்டில் பிற இன்சூரன்ஸ் கம்பனிகள் முதலீடு செய்யத் தயங்கலாம். எனவே போட்டி குறையும். இது பிரிமீயம் உயர்வுக்கு வழிவகுக்கும்.

எனவே, உண்மையான இழப்புக்கு காப்பீட்டுத் தொகை கிளைம் செய்யுங்கள்.; மற்றவர்கள் பிரிமியத் தொகையை உயர்த்தாதீர்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...