Search This Blog

Showing posts with label kids. Show all posts
Showing posts with label kids. Show all posts

Sunday, September 13, 2015

குழந்தைப் பிறப்பு ரகசியங்கள்

ஒரு பெண் கருத்தரிக்க மாதத்தில் 3 நாட்கள் உகந்தவை. அவர்களுக்கு பொதுவாக 28 நாட்கள் மாத சுழற்சி [Monthly Period] வரும். இதில் முதல் 4 நாட்கள் மாத விலக்கு. 

5ம் நாளிலிருந்து 14ம் நாள் வரை சினைப் பையிலிருந்து [Ovary] ஒரு முட்டை வளரத் தொடங்கும். நன்கு வளர்ச்சியடைந்த முட்டை சினைபையிலிருந்து பெல்லொபியன் குழாய் [Fallopian Tube] வழியாக கருப்பைக்கு [Uterus] வரும். இவ்வாறு வரும் நாள்தான் Ovulation day எனப்படுகின்றது. [சிலருக்கு மாத சுழற்சி நாள் அதிகமாக இருப்பின் வளர்ச்சியடைந்த முட்டை கருப்பைக்கு வரும் நாள் மாறுபடும்]  

இம் முட்டை 2 / 3 நாட்களுக்கு கருத்தரிக்க ஏதுவாக இருக்கும். கருத்தரிக்க முடியாவிட்டால் முட்டை தளர்ச்சியடைந்து 28 நாட்களான பின் கலைந்து மாத விலக்காக வெளியேறி விடும். இம்மூன்று நாட்களில்  தந்தை தாயின் விந்து நாதத்தின் தூய்மை மற்றும் சக்தியைப் பொறுத்து நல்ல அறிவான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கிறது. மேலும் தாய், தந்தை எண்ணிய எண்ணங்கள், செயல்கள், அனுபவங்கள் அனைத்தும் வித்தின் மூலம் கருவுக்குச் செல்கிறது. இத்தருணத்தில்தான் உயிர் வாழ்க்கை தொடங்குகிறது; ஒரு செல் பல செல்களாக பரிணமிக்கிறது.

கருத்தரிக்கக்கூடிய அந்த 3 நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவரை அப்பெண் என்ன செய்திருந்தாலும் அம்மூன்று நாட்களின் செயல்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. கருப்பையில் விந்து நாதக் கலப்பு ஏற்பட்டு குழந்தை 10 மாதம் வளர்கிறது


  • முதல் மாதம் | போல் கம்பமாகவும்
  • 2வது மாதத்தில் தலையும்
  • 3வது மாதத்தில் கால்களும்
  • 4வது மாதத்தில் மூக்கு, முகம் மற்ற உறுப்புகளும்
  • 5வது மாத்தில் காது, நாக்கு கண்களும்
  • 6வது மாதத்தில் நகமும்
  • 7வது மாதத்தில் நரம்பு, எலும்பு, மூத்திரப்பை, சுவாசப்பை, இதயம் ஆகியவை உருவாகின்றன. மேலும் மூச்சும் விட ஆரம்பிக்கிறது
  • 8வது மாதத்தில் கரு முழுமையடைகிறது
  • 9வது மாதத்தில் குழந்தை வெளியேற வசதியாக திரும்பும்
  • 10வது மாதத்தில் குழந்தை வேறு, கருப்பை வேறாகப் பிரியும். பின்பு குழந்தை பிறக்கும்






Saturday, August 22, 2015

நடைமுறை வாழ்வில் விளம்பரங்களின் தாக்கம்

அம்மா, இன்னிக்கு எங்க ஸ்கூல்ல இந்தியாவின் ரொம்பப்பெரிய சயின்டிஸ்ட்லாம் வர்றாங்க. அவங்கல நாந்தான் இண்டர்வியூ பண்றேன். ஏன்னா…..

உன்னோட ப்ராஜக்ட்தான் பெஸ்டா இருந்திருக்கும்….

என் ரோகன்.   இன்னிக்கு இவன் இண்டர்வியூ பண்றான். நாளைக்கு இவன எல்லோரும் இண்டர்வியூ பண்ணணும்.  

அதுக்கு ஹார்லிக்ஸ் குடுங்க ன்னு ஒரு விளம்பரம்.

பார்ப்பதற்கு இதுல என்ன தப்பு?  இது எல்லா அம்மாக்களும் நினைக்கறதுதான…… என்பது போல இருந்தாலும் இது போன்ற விளம்பரங்கள் மிக மிக ஆபத்தானவை.

நம்பர் 1 பைத்தியத்தை உங்களில் விதைப்பது மட்டுமின்றி, உங்களிடமிருந்து உங்கள் குழந்தைக்கும் அந்தப் பைத்திய மனநிலையை தொற்றிக் கொள்ளச் செய்து, குழந்தையைப் பந்தயக்குதிரையாக்கும் மட்டமான வியாபாரம்.

உங்களிடமுள்ள “நான்” என்ற அகங்காரம் தான் இவர்களின் வெற்றி. அம்மாக்களிடமுள்ள இந்த அகங்காரத்தை அவர்கள் மிகச் சரியாய்ப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

எல்லாவற்றிலும் நம்பர் 1 இடத்தை பெற வேண்டும் என்ற வெறி ஒரு குழந்தையின் மனதில் தொற்றிக்கொண்டவுடனே அது சக மாணவர்களை எதிரியாகப் பார்க்கத் தொடங்குகிறது.  

பொறாமை, கோபம், வஞ்சம் ஆகிய குணங்கள் குழந்தையைத் தொற்றிக் கொள்கின்றன.  இது மிக மிக ஆபத்தான மன நோய்.  குழந்தை மெல்ல மெல்ல தன் வாழ்க்கையை இழந்து விடுகிறது.

குழந்தை குழந்தையாக இருக்கட்டும்.  அது யாராகவும் ஆக வேண்டாம்.  இந்த வாழ்க்கை என்பது உணர்வு பூர்வமாய் வாழ்வதற்கே.

எல்லோரும் பாராட்டக்கூடிய ஒரு நிலைக்கு உயர வேண்டும் என்பதே இந்த உலகில் மிகப்பெரும்பான்மையான மனிதர்களுக்கு உள்ள ஒரு மனோ வியாதி.

அந்த வியாதி உங்கள் வாழ்க்கையை வாழ விடாது. உங்களை இயந்திரமாக மாற்றிவிடும் தன்மை கொண்டது.

தயவு செய்து உங்கள் நடைப்பிணமான உயிர்ப்பற்ற வாழ்க்கையை உங்கள் குழந்தைகளுக்குள் ஊடுருவச் செய்துவிடாதீர்கள்.

குழந்தைகளை இயல்பாய் விட்டுவிட்டாலே அவர்கள் எதுவாக ஆகவேண்டுமோ அதுவாக ஆகிவிடுவர்.
நீ நீயாக இரு.  யாரும் உன்னை கொண்டாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீ விருப்பபட்டு எதை செய்கிறாயோ அதைச் செய் என்பதே குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தரவேண்டியது.

நாளைக்கு எல்லோரும் உன்னை இண்டர்வியூ எடுக்கணும் எனச் சொல்லித் தருவதெல்லாம் அவர்களைப் பரபரப்பாக்கி வாழ்க்கையை வாழவிடாமல் செய்து, அவர்களுக்குள் உள்ள ஆன்மாவைக் கொலை செய்வதாகும்.

#ராகவேந்தர்.
Related Posts Plugin for WordPress, Blogger...