நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்கள் நமக்கு கருத்தொடராக வந்து விடுகின்றன. வேதாத்திரி மகரிஷி மனிதர்களின் ஒவ்வொரு செயல்களும் அவர்களின் கருமையத்தில் பதிவு பெறும் என்கிறார். நம் முன்னோர்களின் பாவப்பதிவுகளால் நாம் துன்பமடைவதை இளங்கோவடிகள் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்கிறார்.
இந்த மாதிரியான முன்னோர்களின் பதிவுகளை நாம் கருவமைப்புப் பதிவுகள் [சஞ்தித கர்மம்] என்கிறோம்
இந்த மாதிரியான முன்னோர்களின் பதிவுகளை நாம் கருவமைப்புப் பதிவுகள் [சஞ்தித கர்மம்] என்கிறோம்
நம் பிறப்பிற்குப் பிறகு நமது செயல்களால் பெறும் பதிகளை மேலடுக்குப் பதிவுகள் [பிராப்த கர்மம்] என்கிறோம். இவ்விரண்டு பதிவுகளும் சேர்ந்து ஒரு மனிதனின் அறிவாட்சித்தரமாக [Personality] அமைகிறது.
கருவமைப்புப் பதிவுகளும், மேலடுக்குப் பதிவுகளும் இணைந்து நாம் விருப்பப்பட்டு புதிய செயல்களை செய்கொண்டிருப்பது ஆகாம்ய கர்மம் எனப்படுகின்றது
