Search This Blog

Thursday, September 29, 2011

Same news on different papers in different versions

This is one story you can find today on newspapers. 

1.Dinamalar
2.Dinakaran

You can find the difference between their 2 versions on the same story.

This is Dinamalar Version:

பல்லாவரத்தில் நள்ளிரவில் உலா வந்த "பேய்': அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்

 
குறி சொல்பவரின் பேச்சை கேட்டு, பல்லாவரம் மார்க்கெட்டில் இளம்பெண் நிர்வாணமாக சென்றார். அவரை, "பேய்' என நினைத்து பலரும் அலறி அடித்து ஓடினர். துணிச்சல்கார இன்ஸ்பெக்டர் ஒருவர் பெண்ணுக்கு உடை அளித்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றார்.

நேற்று முன்தினம் நிறைந்த அமாவாசை. இரவு 1 மணிக்கு சென்னை பல்லாவரம் பகுதியில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தன், ஜீப்பில் ரோந்துப்பணியில் இருந்தார். பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் சென்ற போது, அங்கிருந்து மிகுந்த பதட்டத்துடன் நால்வர் ஓடிவந்தனர்.ஜீப்பை பார்த்ததும் நின்ற அவர்கள் இன்ஸ்பெக்டரிடம்,"" சார் மார்க்கெட்டில் தலைவிரி கோலத்துடன் பேய் உலா வருகிறது,'' என்று கூறினர். அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர், அவர்களை போகச் சொல்லிவிட்டு, தொடர்ந்து பேய் வந்ததாக கூறிய மார்க்கெட் பகுதியில் தன் ஜீப்பை செலுத்தினார்.

தொடர்ந்து, சென்றபோது, தலைவிரிகோலத்துடன் முகத்தை மறைத்ததுடன், நிர்வாண நிலையில் ஒரு உருவம் எதிரே வந்துள்ளது. இதைக்கண்டு முதலில் பயந்தாலும், பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர், தன்னிடம் இருந்த டார்ச்சை எடுத்து, கால் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தார். அப்போது தான், அது பேயல்ல... இளம்பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து வருகிறார் என்பது புரிந்தது.

உடனடியாக, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்ட இன்ஸ்பெக்டர், அங்கிருந்த பெண் போலீசாரிடம், அவர்களது மாற்று உடையை எடுத்து வருமாறு கூறினார். அவர்களும் உடனே, உடையுடன் ஜீப்பில் வந்திறங்கினர். போலீசை பார்த்ததும் அந்த நிர்வாணப் பெண் அங்கிருந்து ஓடினார். அரை கிலோமீட்டர் விரட்டி, பல்லாவரம் மார்க்கெட் அருகிலேயே மடக்கிப் பிடித்து, அப்பெண்ணுக்கு உடைகளை மாட்டி, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த அந்த பெண், அப்பகுதியில் ஒருவரை காதலித்துள்ளார். நன்றாக பேசிக் கொண்டிருந்த காதலன், திடீரென கம்பி நீட்டிவிட, அவனை மறக்கமுடியாத நிலையில், அங்குள்ள குறிசொல்லும் சாமியார் ஒருவரை அந்த பெண் சந்தித்துள்ளார். அவர், "நிறைந்த அமாவாசை இரவில், குளித்துவிட்டு, உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் ஈர உடலுடன் ஊரைச் சுற்றி வந்தால், நினைத்தது நிறைவேறும்' என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட அப்பெண், திருவண்ணாமலையிலேயே அப்படி செய்தால், ஊருக்கு தெரிந்து விடும் என்று, பம்மலில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அனைவரும் தூங்கியவுடன், 11 மணிக்கு குளித்துவிட்டு, ஈரஉடையுடன் பொழிச்சலூர் - பம்மல் சாலையில் நடந்து வரும்போதே, உடைகளை ஒவ்வொன்றாக களைந்துள்ளார். அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து, நிர்வாணமாக பல்லாவரம் வந்ததாக தெரியவந்தது.

பின்பு பல்லாவரத்தில் இருந்து, குரோம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்து, நேற்று காலை மீண்டும் விசாரித்தபோது, இது போன்று ஊர்வலமாக போனால், எப்படியும் போலீஸ் பிடித்துவிடும். அப்பொழுது போலீசார் காதலனுடன் பேசி சேர்த்து வைப்பார்கள் என்று நினைத்து இப்படி நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.இதையடுத்து, போலீசார் அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரிக்கு தகவல் அளித்தனர். அவர்கள், இப்பெண்ணை ஏற்க மறுத்ததால், மயிலாப்பூர் காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

""பேயென்று நினைத்து அங்கிருந்தவர்கள் பயந்து ஓடியதால் பரவாயில்லை; பெண்ணென்று தெரிந்திருந்தால்... நினைத்து பார்க்க முடியாத விஷயங்கள் அரங்கேறியிருக்குமே'' என்று வருத்தப்பட்டார் பெண் காவலர் ஒருவர்.


----------------------

This is Dinakaran version:
பம்மலில் நள்ளிரவில் பரபரப்பு நடுரோட்டில் இளம்பெண் நிர்வாணமாக நடந்தார்

தாம்பரம் : பம்மல் பகுதியில் நள்ளிரவில் நிர்வாணமாக நடந்த இளம்பெண்ணை, பெண் போலீசார் மீட்டு விசாரித்தனர். காதலன் வேறு பெண்ணை மணந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இவ்வாறு செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (25), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே ஊரை சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன். 

இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். திருமணம் செய்வதாக கூறி சுமதியுடன் ராமச்சந்திரன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் பலமுறை சுமதி கரு கலைப்பும் செய்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணுடன் ராமச்சந்திரனுக்கு திருமணம் நடந்தது. இது சுமதிக்கு தெரியவரவே அதிர்ச்சியடைந்தார். சரியாக சாப்பிடாமல், தூங்காமல் பைத்தியம் பிடித்தவர்போல் காணப்பட்டார். இதனால் பெற்றோர் மனம் வருந்தினர்.

‘வேறு இடத்துக்கு மாறினால் மனநிலை மாறிவிடும்Õ என எண்ணி பல்லாவரத்தை அடுத்த பம்மலில் வசிக்கும் சுமதியின் அக்கா வீட்டுக்கு அவரை பெற்றோர் அனுப்பி வைத்தனர். அப்போதும் அவரது நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. பழைய நிலையே நீடித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்தார் சுமதி. தலையை விரித்து போட்டபடி சாலையில் நடந்துள்ளார். 

பின்னர் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் துணிகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து வீசியுள்ளார். அவ்வழியாக வந்த சிலர், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். 1 கி.மீ. தூரம் நடந்து பல்லாவரம் பஜார் பகுதிக்கு வந்துள்ளார். அந்த நேரத்தில், பல்லாவரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், காரில் ரோந்து வந்தார். நிர்வாண நிலையில் நடந்து சென்ற சுமதியை பார்த்ததும் பல்லாவரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். 

அங்கிருந்து பெண் காவலர்கள் மாற்று உடையை கொண்டு வந்து சுமதிக்கு அணிவித்தனர். பின்னர் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். 
சுமதியின் குடும்பத்தாரை வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பினர்.


Which one you believe?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...