Search This Blog

Tuesday, February 23, 2016

சைவ பேலியோ டயட்டினின் சவால்கள்


னிதனின் ஆரோக்கியம், புலாலில் மட்டுமே கிடைக்கும் சிலவகை வைட்டமின்கள், மினரல்களை நம்பியுள்ளது. சைவ உணவுமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு அசைவர்களுக்கு வராத சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. 
புரதம்
சைவர்களின் முதல் சவாலே புரதம்தான். இந்திய அரசு அளிக்கும் புள்ளிவிவரப்படி 30% இந்தியர்கள் புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த முப்பது சதவிகிதத்தில் 46% பேர் பள்ளிக் குழந்தைகள். இவர்கள் எல்லாருமே சைவர்கள் எனச் சொல்லமுடியாது. இந்தியாவில், அசைவராலுமே முட்டை, இறைச்சி போன்ற புரதம் மிகுந்த உணவுகளை அன்றாடம் உண்ண முடியாது. எனவே புரதக் குறைபாடு இந்தியா முழுவதையும் பாதிக்கும் விஷயம் என்பதை மனத்தில் கொள்ளவேண்டும்.
மற்ற வைட்டமின்களை போல புரதத்தை உடலால் தேக்கி வைக்க முடியாது. அன்றாடத் தேவைகளுக்கான புரதத்தை அன்றாட உணவின் மூலமே அடையவேண்டும். ஏதோ ஒருநாள் இரு மடங்கு புரதம் எடுத்துக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை.
இந்திய அரசின் நெறிமுறைகளின்படி சராசரி ஆண் 60 கிராம் புரதம் எடுக்கவேண்டும். பெண்ணுக்கு 55 கிராம் புரதம் தேவை. கடும் உடற்பயிற்சி, மகப்பேறு, பாலூட்டுதல் போன்றவற்றால் புரதத் தேவைகள் இன்னமும் தேவைப்படும். இதிலும் தாவரப் புரதங்கள் முழுமையாக நம் உடலில் சேர்வது கிடையாது. மிருகப் புரதங்களே நம் உடலில் முழுமையாகச் சேர்கின்றன. உதாரணமாக முட்டையில் இருக்கும் புரதம் 100% அளவில் நம் உடலுக்குள் செல்கிறது. ஆனால், கோதுமையில் உள்ள புரதத்தில் 30% அளவே நம் உடலில் சேர்கிறது. பீன்ஸ், பருப்பு போன்ற சைவ உணவுகளில் புரதம் அதிகமாக உள்ளன. ஆனால், அவற்றில் உள்ள அமினோ அமிலங்கள் முழுமையாக இல்லாததால் பாதிக்கும் மேலான பீன்ஸின் புரதங்கள் நம் உடலில் சேராமல் கழிவாக சிறுநீரகத்தால் வெளியேற்றபடுகின்றன. (அமினோ அமிலங்கள் உடலின் மிக முக்கியமான வகை அமிலங்கள். புரதங்களைக் கட்டமைக்கும் தன்மை கொண்டவை. மொத்தம் 20 அமினோ அமிலங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் சில வகை அமினோ அமிலங்கள் மட்டுமே பீன்ஸ், பருப்பில் உள்ளன.) 



சைவர்கள் பேலியோ உணவில் தினமும் 100 கிராம் அளவுக்குப் பாதாம் எடுத்தால் 23 கிராம் புரதம் கிடைக்கும். 500 கிராம் பனீரில் 20 கிராம் புரதம் உள்ளது. இந்த இரண்டையும் சாப்பிட்டால் மொத்தம் 43 கிராம் அளவே புரதம் உடலைச் சேரும். தேங்காய், காய்கறிகளில் உள்ள புரதத்தை குத்துமதிப்பாக ஒரு ஏழெட்டு கிராம் என்று வைத்துக்கொண்டாலும் சைவ பேலியோவால் மொத்தம் 50 - 55 கிராம் அளவே புரதம் கிடைக்கிறது. இது அரசு பரிந்துரைக்கும் அளவை விடவும் குறைவு. எனினும் உடல்நலனைப் பாதிக்கும் அளவு பிரச்னைகளை உண்டுபண்ணாது. பேலியோ அல்லாத சைவ உணவில் பலரும் இதை விட குறைந்த அளவு புரதத்தையே அடைகிறார்கள். அப்படிப் பார்க்கும்போது சைவ பேலியோ உணவுமுறை மேலானது.
வைட்டமின் ஏ
தாவர உணவு எதிலும் வைட்டமின் ஏ கிடையாது. இது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம். வைட்டமின் ஏ ஏராளமாக இருப்பதாகப் பலராலும் நம்பப்படும் கேரட், கீரை போன்றவற்றில் துளி கூட வைட்டமின் ஏ கிடையாது என்பதே உண்மை.
வைட்டமின் ஏ-வில் இருவகை உண்டு. ரெடினால் (Retinol) மற்றும் பீடா காரடின் (Beta carotene). இரண்டில் ரெடினாலே உடலில் சேரும் தன்மை கொண்ட வைட்டமின். இதுவே கண்பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் பலன் அளிக்கும் தன்மை கொண்ட வைட்டமின் ஏ ஆகும்.
ஆட்டு ஈரல், மீன் தலை, முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை உண்ணும்போது அதில் உள்ள ரெடினால் எளிதில் நம் உடலில் சேர்ந்து விடுகிறது. பதிலாக கேரட், கீரையைச் சாப்பிட்டால் அதில் உள்ள பீடா காரடினை ரெடினால் ஆக மாற்றியபிறகே நம் ஈரலால் அதை வைட்டமின் ஏ-வாகப் பயன்படுத்தி உடலுக்கு நன்மையளிக்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள், குழந்தைகள், வயதானவர்கள், தைராய்டு சுரப்பியில் பிரச்னை உள்ளவர்கள் போன்றோருக்கு பீடா காரடினை ரெடினாலாக மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனால் அவர்கள் கிலோ கணக்கில் கேரட்டைச் சாப்பிட்டாலும் அவர்களது ஈரலால் அதை ரெடினால் ஆக மாற்ற முடியாது. இதனால் மாலைக்கண் வியாதி, கண்பார்வை குறைபாடுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகின்றன.
ரெடினால் உள்ள உணவுகளான நெய், பால், சீஸ், பனீர் போன்றவை சைவர்களுக்கு உதவும். ஆனால் பாலில் உள்ள கொழுப்பில் மட்டுமே ரெடினால் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால் நம் மக்கள் கொழுப்பு இல்லாத பாலை வாங்குவதில்தான் ஆர்வம் செலுத்துகிறார்கள். பாலில் உள்ள கொழுப்பை அகற்றினால் அதில் உள்ள ரெடினாலையும் நாம் சேர்த்தே அகற்றிவிடுகிறோம். பிறகு பாலில் என்ன சத்து இருக்கும்?
நெய், வெண்ணெய் போன்ற பேலியோ உணவுகளை அதிகம் உண்ணுவதால் அதில் உள்ள ரெடினாலின் பயனை சைவர்கள் அடைகிறார்கள். அவர்களின் வைட்டமின் ஏ அளவுகள் அதிகரிக்கின்றன. எனவே சைவ பேலியோவைப் பின்பற்ற எண்ணுபவர்கள் தினமும் அரை லிட்டர் பால் அல்லது பனீரை தவறாமல் எடுத்துக்கொள்வதுடன் தினமும் அதிக அளவிலான நெய், வெண்ணெய் போன்றவற்றையும் சமையலில் பயன்படுத்தவேண்டும்.
பி12 வைட்டமின்
பி12 என்பது முக்கியமான பி வைட்டமின்களில் ஒன்றாகும். பி12 வைட்டமின் குறைபாட்டால் நமக்கு மாரடைப்பு, ஆஸ்துமா, மலட்டுத்தன்மை, மன அழுத்தம் போன்ற பலவகை வியாதிகள் ஏற்படுகின்றன.
துரதிர்ஷ்டவசமாக பி12 வைட்டமின் எந்தத் தாவர உணவிலும் இல்லை. பி12 - புலால், மீன், முட்டை, பால் போன்ற மிருகங்களிடமிருந்து கிடைக்கும் உணவுகளிலேயே காணப்படுகிறது. சைவர்கள் பால், பனீர் போன்றவற்றை உண்பதன் மூலம் பி12 தட்டுப்பாடு ஏற்படாமல் காத்துக்கொள்ளமுடியும். அதே சமயம் ஒரு நாளுக்கு தேவையான பி12-ஐ அடையவேண்டும் என்றால் தினமும் ஒன்றே கால் லிட்டர் பாலை அருந்தவேண்டும். இது நம்மால் முடியாது அல்லவா! இதன்படி, பால் மட்டுமே உண்ணும் சைவர்களுக்கு பி12 தட்டுப்பாடு உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம்.
முட்டை சாப்பிடும் சைவர்களால் இதைச் சமாளிக்க இயலும். அவர்களின் புரதத் தேவையும் முட்டை உண்பதால் பூர்த்தி அடையும். ஆனால் பெரும்பாலான சைவர்கள் முட்டையை உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அவர்கள் பி12 அளவுகளை மருத்துவப் பரிசோதனை மூலம் அறிந்துகொள்ளவேண்டும். பி12 அளவுகள் உடலில் குறைவாக இருந்தால் ஒவ்வொரு மாதமும் பி12 ஊசி போட்டுக்கொள்ளவேண்டும்.
பதிலாக பி12 அளவை அதிகரிக்க பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளையோ, வைட்டமின் மாத்திரைகளையோ உண்பதால் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில் மாத்திரைகளில் உள்ள வைட்டமின்கள் செயற்கையாக தொழிற்சாலைகளில் தயாராகுபவை. முட்டை, பாலில் உள்ளதுபோல தரமாகவும், எளிதில் ஜீரணிக்கப்படும் வைட்டமின்களாகவும் அவை இருப்பதில்லை. ஊசி வடிவில் பி12 எடுத்துக்கொண்டால் ஓரளவு அந்த வைட்டமின் உடலில் சேரும் வாய்ப்பு உள்ளது. அது நேரடியாக ரத்தத்தில் கலக்கும் என்பதால்.

நன்றி: நியாண்டர் செல்வன் 

Saturday, February 20, 2016

PCOSம் பேலியோ உணவு முறையும்

 பெண்களைத் தாக்கும் பாலிசிஸ்டிக் ஒவரி சிண்ட்ரோம் (PCOS - Polycystic ovary syndrome) எனப்படும் முக்கிய வியாதியைப் பார்க்கலாம்.


18 முதல் 21 வயது வரை உள்ள பெண்களைத் தாக்கக்கூடிய நோய்களில் இதுவும் ஒன்று. இந்த நோய் பாதிப்பில், இந்தியாவிலேயே தமிழகத்துக்குத்தான் முதலிடம் என்பதையும் கவனிக்கவேண்டும்.
பெண்கள் சிலருக்குப் போதுமான அளவில் கருமுட்டைகள் உற்பத்தி ஆகவில்லை என்றால் அது பி.சி.ஓ.எஸ் என்று அழைக்கப்படும்.
ஹார்மோன் சமநிலை தவறுவதால் பி.சி.ஓ.எஸ் பாதிப்பு இருக்கும் பெண்களின் உடல், ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரானை (Testosterone) அதிக அளவில் உற்பத்தி செய்யும். இதனால் பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களுக்கு மீசை முளைப்பது, தாடி முளைப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படும். காரணம், அவர்கள் உடலில் இன்சுலின் சுரந்து ஹார்மோன்கள் பாதிப்படைந்து ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரான் உடலில் அதிக அளவில் சுரந்து விடும். ஆண்களுக்கு இம்மாதிரி நிகழ்கையில் அவர்களுக்கு ஆண் மார்பகங்கள் முளைக்கின்றன. வெளியே சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு பல ஆண்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இத்தகைய ஆண்/பெண்களுக்கு விந்தணுக் குறைபாடு, கருமுட்டைக் குறைபாடு போன்ற சிக்கல்களும் நேரும்.
இந்த நோய் ஏன் வருகிறது எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் தற்போது அதற்குக் காரணம் இன்சுலின்தான் எனக் கண்டறியபட்டுள்ளது.
தானியம் மற்றும் மாவுச்சத்து உள்ள உணவுகளால் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரித்து ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்பட்டு கருமுட்டைகளும், கருப்பையும் பாதிப்படையும் நிலை உருவாகிறது. இதனால் பி.சி.ஓ.எஸ் வியாதி ஏற்படுகிறது. அதனால் மருத்துவர்கள் இன்சுலினின் ஆட்டத்தைக் குறைப்பதற்காக சர்க்கரை மருந்தான மெட்பார்மினைக்கூட இதற்குப் பரிந்துரைக்கிறார்கள். சர்க்கரை இல்லாமல் மெட்பார்மினை உண்ண வேண்டியதில்லை. ஆனால், நம் மக்களுக்கு வழக்கமான தானிய டயட்டை விட முடியாது. இதனால் இன்சுலின் கட்டுப்பாடும் சாத்தியமாவதில்லை. எனவே மருத்துவர்களுக்கும் வேறு வழி இருப்பதில்லை!
ஹார்மோன் சமநிலை தவறுவதற்கு முக்கிய காரணம் - உணவில் போதுமான அளவு கொலஸ்டிராலும் ஊட்டச்சத்தும் இல்லாததே. இன்னொரு முக்கிய காரணம் - வைட்டமின் டி3 பற்றாக்குறை. கொலஸ்டிரால்தான் ஹார்மோன்கள் அனைத்துக்கும் அரசன். அதை மூலப்பொருளாகக் கொண்டுதான் உடல் போதுமான ஹார்மோன்களைத் தயாரிக்கிறது.
இத்தகைய குறைபாடு உள்ள பலரும் பேலியோ உணவு மூலம் தங்கள் குறைகளைப் போக்கியுள்ளனர். குழந்தைபேறும் அடைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதனால் இதுபோன்ற சிக்கல்கள் உள்ளவர்கள் தானிய உணவைத் தவிர்த்து, இன்சுலின் சுரப்பைக் குறையவைக்கும் பேலியோ உணவுகளை உண்ணுவதன் நிவாரணம் பெறலாம்.
பி.சி.ஓ.எஸ் இருக்கும் சைவப் பெண்கள் குறைந்தபட்சம் முட்டை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், ஹார்மோன்கள் அனைத்தையும் உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள், முட்டையில் உள்ள கொலஸ்டிரால் என்பதால் முட்டை உண்பது நிறைய பலன்களை அளிக்கும்.
இதற்குப் பரிந்துரைக்கப்படும் (முட்டையுடன் கூடிய) சைவ பேலியோ டயட்:
தினமும் 100 கிராம் பாதாம்
கீரை, காய்கறி அடங்கிய குழம்பு. காளிபிளவர் அரிசியுடன்.
சீஸ் 50 கிராம் அல்லது 2 கோப்பை முழுக்கொழுப்பு உள்ள பால்
3 அல்லது 4 ஆர்கானிக்/நாட்டுக்கோழி முட்டை
பசுமஞ்சள் பச்சையாக தினமும் அரை டீஸ்பூன் மற்றும் பச்சைப் பூண்டு
பனீர் டிக்கா, காய்கறி சூப்
அரிசி, கோதுமை, தானியம் போன்றவற்றை அறவே தவிர்க்கவேண்டும். ஹார்மோன்களைச் சீர்குலைய வைக்கும் சோயாபீன்ஸ் கட்டாயம் தவிர்க்கப்படவேண்டும்.
மதிய வேளையில், நேரடி வெயில் தோலில் படும்வண்ணம் 15 - 20 நிமிடம் வெயிலில் நிற்பது நன்று. மதியம் 11 மணி முதல் 1 மணி வரை உள்ள வெயில் இதற்கு உகந்தது. தலைக்கு வெயில் தாக்காமல் இருக்க தொப்பி அணியவும். வெயில் அதிக அளவில் நம் உடலில் படவேண்டும் என்பதால் அதற்கேற்ற உடை அணியவும்.
தானிய உணவு, மாவுச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்த்து பேலியோ டயட்டைப் பின்பற்றுவதன் மூலம் ரத்த சோகை, பி.சி.ஓ.எஸ் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.

Friday, February 05, 2016

Vethathiri Maharishi Meditation in Tamil and English



Be Blessed by the Divine
Meditation in Tamil / English
தமிழ்
English
No. of Times
Remarks
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Be bless around the world; be blessed by the divine


குரு வாழ்க குருவே துணை
Greetings to the  Guru & may Guru lead us


இறை வணக்கப் பாடல்  
Song for the Divinity


குரு வணக்கப் பாடல்
Song for the Guru


நாம் அமர்ந்துள்ள இடத்தைச் சுற்றிலும் நல்ல தெய்வீக ஆற்றலே நிரம்பின
May the divine  power purify the atmosphere around us  
3

அருட்பேராற்றல் உடலிலே உயிரிலே அலை அலையாகப் பாய்வதை உணர்கிறோம்
May the divine power descends upon our body and soul
3

அருட்பேராற்றல் இரவும், பகலும், எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாக
May the divine power be helpful, protective, guiding day and night, at all times, at all places  and  all endeavors


அன்னைக்கு வணக்கம் தந்தைக்கு வணக்கம் ஆசான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு குரு வணக்கம்
Salutations to mother, father and Guru 


தவம் : <தவத்தின் பெயர்>
We are going to start meditation


தவத்தை நிறைவு செய்ய இருக்கிறோம். சங்கல்பம்:
அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம், நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வோம்
We are going to conclude our meditation
Auto suggestion:
By the grace of Almighty we all may enjoy good health, long life, prosperity wisdom and peace
3


வாழ்க்கைத் துணையை வாழ்த்துவோம்
Blessings to the life partner

All should say by themselves -  not loudly “Be blessed by the divine”
பெற்ற மக்கட்செல்வங்களை வாழ்த்துவோம்
Blessings to the  children one by one

As above
உடன்பிறந்த சகோதர சகோதிரிகளை வாழ்த்துவோம்
Blessing to brothers and sisters

As above
நெருங்கிய உறவினர்களையும் நண்பர்களையும் வாழ்த்துவோம்
Blessings to close relatives and friends

As above
தொழில் துறையிலே தினசரிக் கடமைகளிலே நம்முடம் நெருங்கிய தொடர்புடைவர்களையும் வாழ்த்துவோம்
Blessings to those who help us in our daily routines and business endeavors

As above
இன்னல் புரிவோர் எதிரிகளாக நினைப்போர் எவரேனும் இருப்பின் அவர்கள் மனம் திருந்தி நல்வாழ்வு பெற அன்பும் கருணையோடும் வாழ்த்துவோம்
Blessings to those who think us as enemies, with love and kindness

As above
ஆசான் அருட்தந்தை அருளிய வேதாத்திரியம்  (வாழ்க வளமுடன் அனைவரும்)
Vethathirism

All should say loudly “Be blessed by the Divine”
உலக சமுதாய சேவா சங்கம்  (வாழ்க வளமுடன் அனைவரும்)
SKY Trust

As above
ஆழியார் அறிவுத் திருக்கோவில்  (வாழ்க வளமுடன் அனைவரும்)
Temple of consciousness, Aliyar

As above
மகானின் மணிமண்டபம்  (வாழ்க வளமுடன் அனைவரும்)
Memorial hall of the Guru

As above
பேங்காக் தவ மையம் (வாழ்க வளமுடன் அனைவரும்)
Bangkok mediation centre

As above
ஸ்ரீரிராச்சா தவ மையம் (வாழ்க வளமுடன் அனைவரும்)
Sriracha mediation centre

As above
AIT தவ மையம் (வாழ்க வளமுடன் அனைவரும்)
AIT mediation centre

As above
இரண்டோழுக்கப் பண்பாடு:
நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கோ மனதுக்கோ துன்பம் தரமாட்டேன் துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன் (அனைவரும்)
Two fold morale:
I will not hurt anybody in body or mind and help those who are in need
3
All should say loudly two fold morale
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
Be blessed by the divine


உலக நல வேட்பு:
உலகிலுள்ள பொறுப்புடைய ..... (அனைவரும்)
World welfare song: May the world leaders understand the dignity of self and attain self realization.

May all of them unite and form powerful One world government to protect the borders of all the countries

May all the people live without fear of war and perform their duties

May the entire world enjoy prosperity, happiness and peace


All should sing world welfare song loudly
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
Be blessed by the divine


மழை வாழ்த்து:
எரி குளம் கிணறு ....
(அனைவரும்)
Rainfall song:
May there be adequate rain water filling to the brims of all the water bodies in the world.
3
All should sing rainfall song loudly
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்
Be blessed by the divine


நம் மனதினுள் அமைதி நிலவட்டும் நம்மைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும் உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்
அமைதி அமைதி அமைதி
May there be peace within us, among us and in this world. PEACE, PEACE, PEACE




Related Posts Plugin for WordPress, Blogger...