Search This Blog

Monday, July 30, 2012

நலமுடன் வாழ சித்தர் அருளிய எளிய 10 வழிகள்


உணவு:
1) சாப்பிடும் போது காய்ச்சிய நீரை அருந்துவது கூடுதல் நன்மை பயக்கும்.
2) பசுவின் பால், மோரையே அருந்த வேண்டும்; புளித்த தயிரை உண்ணலாம்
3) நெய்யை உருக்கி பின் சாப்பிட வேண்டும்
4) முதல் நாள் சமைத்த கறியை உண்ண வேண்டாம்
5) சாயங்கால நேரங்களில் உணவு உண்ண வேண்டாம்

பிற:
6) மலசலங்களை அடக்க வேண்டாம்
7) அடிக்கடியில்லாமல் மாதமொரு முறை மட்டுமே சுக்கிலத்தினை வெளியேற்றுவது நன்மை தரும்.
8) உணவு உட்கொண்ட உடனே உறவு கொள்ள வேண்டாம்
9) எண்ணெய் பதார்த்தங்களைச் சாப்பிட்டால் அந்நாளில் வெந்நீரில் குளிக்கவும்
10) இடது கையை தலைக்கு கீழாக வைத்து வடக்கு திசையைத் தவிர்த்து ஒருக்களித்து உறங்கவும்


Saturday, July 21, 2012

Universe is only empty space?

Answer is: Vast empty space around us that consists of stars, solar system, galaxies etc is called Universe.

Major components are:

1.Solar system- Basically the name solar system is describing the sun’s family. The sun occupies the centered place. Around the sun the remaining nine planets revolve around in different orbits.  As the planets came near to the sun their rotation speed goes on increasing. The motion of all the planets is controlled by the sun’s gravitational pull.

Ordered list of all 9 planets is given below:

1. Mercury

2. Venus
3. Earth
4. Mars
5. Jupiter
6. Saturn
7. Uranus
8. Neptune
9. Pluto


Above list of planets is arranged according to the increasing distances of the planets from sun.

How to recall the list of planets? Remember this:



My Very Educated Mother Just Served Us Nine Pizzas


Lots of other satellites are present in the universe which usually revolves around the planets of the solar system. Moon is also a satellite. It is the natural satellite of earth. Meteors, Asteroids and comets are also part of the solar system.

2. Galaxies: Galaxies are formed by group of starts, gases, and dust particles all are together by strong gravitational forces. Milky Way is one of the galaxies of the universe in which we live. It is also called Akashganga. It appears like an unclear white strip of light elongated across the sky.  

A Milky Way galaxy contains billions of stars, near about -1011. Like Milky Way lots of other galaxies exist in the Universe. The galaxy count is approximately 1011.

3. Stars: Stars are glowing heavenly bodies. Stars emit light due to their high temperatures. The nearest star to us the sun. Stars can be seen on a clear night.   On a clear night at a single time the number of stars we can see is near about 2500. The second brightest star is Alpha Centauri. The approximate distance of the star Alpha Centauri from earth is near about 4.3 light years.

The universe is keep on expanding at the speed of 26.71 lakhs kilometer per hour

Friday, July 20, 2012

வேல செய்றீங்களா? உடம்பு நல்லாருக்கா?



எப்ப பாத்தாலும் வேல வேலன்னே இருக்கீங்களா?  ஜாக்கிரத! வேலை சார்ந்த வியாதிகள்  அதிகரித்து வருகின்றன அப்டீன்னு  ஓர் ஆய்வு சொல்லுது

அது என்ன?

சுமாராக 2 கோடி இந்தியர்கள் வேலையால் ஆரோக்கியமிழந்து இருக்கிறார்களாம். அவர்களில் 1.20 லட்சம் பேர் இறந்து போகிறார்கள் என்கிறது, `பணியிட வியாதிச் சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின்' புள்ளிவிவரம். இது உலக அளவில் 17 சதவீதம்.

அதாவது பணியிடப் பாதிப்பு என்பது:

* கோழிப்பண்ணைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் `பேரட் பீவர்'   

* ஆழ்கடலில் மூழ்கி ஆய்வு செய்வோருக்கு ஏற்படும் காயங்கள், 

*சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் இவற்றுடன்,

ஒயிட்காலர் ஜாப்' எனப்படும் அலுவலகப் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் நோய்கள்:

* உங்களின் இருக்கை முறைப்படி வடிவமைக்கப்படாததாக இருந்து,  6 முதல் 8 மணி நேரம் இருக்கையில் அமர்ந்து வேலை செய்கிறீர்களென்றால் உங்களுக்கு முதுகுவலி, மணிக்கட்டு வலி உள்ளிட்ட பிரச்சினைகள்  வரும்.

* நாள் முழுவதும் உட்கார்ந்து செய்யும் வேலை, புகைப் பழக்கத்துக்கு இணையானது என்கிறார்கள் மருத்துவர்கள். அது, 
       * `டைப் 2' சர்க்கரை நோய், 
       * இதய நோய், 
       * உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கு இட்டுச் செல்லலாம்.

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, ஓடியாடி வேலை செய்யும் மற்றவர்களை விட அதிக எடை போடும் வாய்ப்பு இரண்டு மடங்கு. 

சரி, வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்தியர்களில் 43 சதவீதம் பேர் பணிபுரிபவர்கள். எனவே அலுவலக பாதிப்புகளை நாம் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும் - 
பி.கே. நாக், இயக்குனர், 
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்குபேஷனல் ஹெல்த் 

என்னிடம் வரும் நோயாளிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் இருக்கையில் 
அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள 
இளம் அலுவலர்கள் -  
மருத்துவர் சஞ்சய் போருடே, பிரீச் கேண்டி மருத்துவமனை, மும்பை 
.
சரி என்ன தீர்வு?
 
`இருக்கைப் பணி' புரிபவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 10 நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். 




இந்தப் படங்களிலுள்ளது போல் எப்போதெல்லாம் இடைவெளி கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படங்களில் உள்ளது போல் செய்யவும். 

இவையெல்லாம் ஒரு ரிலாக்சுக்காகத்தான். ஆனால் தினமும் ஒரு 30 நிமிடங்கள் முறையான உடற்பயிற்சி செய்ய தவறாதீர்கள்.

Above technics are meant for office going peoples. Thanks for doctors, books, internet magazines for their  input. 


அமெரிக்க கார்பொரேட் கம்பனிகளின் இந்திய தாகம்

ஒபாமா இந்தியாவைப் பற்றியும் நம்  அன்னிய மூதலீட்டுக் கொள்கையைப் பற்றியும் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அதில் முக்கியமானது  நம் நாட்டின் முதலீட்டுச் சூழல் நன்றாக இல்லையென்றும் மிகவும் கவலையளிப்பதாகவும் உள்ளது என்பதே.

அமெரிக்க வறட்சியைப் பற்றியும், அதிபர் தேர்தலில் எப்படி ஜெயிக்கலாம், அந் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை, வேலையின்மையை எப்படி சரிசெய்யலாம் என்பதைப் பற்றியும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டிய நேரத்தில்  இந்தியாவைப் பற்றிப் பேச நேரமிருக்கிறதென்றால் அமெரிக்க கார்ப்பொரேட் கம்பனிகள் எப்படி  அந்நாட்டை ஆள்கிறது என்பதைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.

அந் நாட்டின் கம்பெனிகள் இங்கு நுழைந்து நம் பணத்தை வாரிச்செல்ல சில்லறை வணிகத்திலும்  இன்ஸூரன்சிலும் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்பதே அவற்றின் கோரிக்கை. ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி வென்றுவிட்டால் அடுத்து வரும் நிதி அமைச்சர் அமெரிக்காவின் இந்தக் கொள்கைகளை செயல் படுத்த வேண்டும் என்பதே ஒபாமவின் (வேறு வகையில் சொல்வதென்றால் அமெரிக்கா கார்பொரேட் கம்பனிகளின்) விருப்பம். அதற்காகத்தான் ஒரு நினைவூட்டல் கடிதம் போல முதலிலிலேயே சொல்லிவிட்டார். 

ஆனால் ஒபாமா நம் நாட்டு கம்ப்யூட்டர் கம்பனிகளுக்கு அவுட் சோர்சிங் செய்வதை எதிர்க்கிறார். ஏனெனில் அங்கு வேலை வாய்ப்பு குறைந்து விடுமாம். 

இந்தச் சூழ்நிலையில் நாம் நம் அரசியல் வாதிகளை நம்பாமல் (பெட்டி வாங்கிக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்வர்)  எச்சரிக்கையுடன் இருந்து அமெரிக்காவுக்கு அடிமையாவதைத் தடுக்க வேண்டும். 

Wednesday, July 18, 2012

I know how Sachin got his MP seat!


--I guess you must have heard this from someone you know. Also, try this – “Oh! She? We all know how she got her promotions. After all she is pretty enough to impress the boss..” Sounds familiar?

Now, if the above said is from someone in your close circle, keep a distance then. If it is you who have mouthed it – go on, read further..  


Ask yourself, how do you want to be remembered? A well-wisher? Or a best critic?
If your criticism is intended to help someone to improve, well then. But if you simply drop your words and go, you are filled with nothing more than jealousy! And the payment would come sooner or later. 

The more and more you throw your negativity, more people would be moving away from you. You will invariably end up being the last person to know about your close one’s success. Now, that would be a bitter medicine to swallow (but, who wants to be judged in real life anyway?)

We can try and give our best in whatever we do. But there are no tailor-made situations.. If someone could get better output, let’s learn to accept that too. 

After all, no book is judged by its cover. What we call “lucky” may be the other person’s preparedness in grabbing the right opportunity!

For me, success lies in living a “content” life. Being content doesn’t mean being happy with yourself alone. But being happy for others too..

So, let’s be the first one to appreciate and
Last one to criticize !!

Keep Smiling and make others smile too.. :)
With love,
Vigna

Sunday, July 15, 2012

வள்ளலாரின் வாழ்க்கை

அருட்பெருஞ்சோதி - வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை படம் பிடித்து காட்டுகிறது. ஞான வழியை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த படம் ஒரு வழிக்காட்டியாக இருக்கும். எனக்கு இந்தப்படம் மிகவும் பிடித்திருந்தது. படம் பார்க்கும் நண்பர்களே! படம் பார்த்துவிட்டு உங்களின் விமர்சனத்தையும் எழுதுங்களேன். உங்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

Thanks to  வசந்த்

Tuesday, July 10, 2012

வாங்க நீங்களும்...

This is bilingual portal. Tamil and English are being used to share the knowledge among people. Now you can also write on this blog within a boundary of knowledge sharing. If you are interested please do mail to sarawanan@skygroups.org

து ஒரு இரு மொழி வலைத்தளம், தமிழிலும் ஆங்கிலத்திலும் மக்களிடத்தில் கருத்துகளை எடுத்துச்செல்ல இந்த வலைத்தளம் முனைகிறது. நீங்களும் இம்முயற்சியில் பங்கேற்க விரும்பினால்  sarawanan@skygroups.org என்ற முகவரியில் உங்கள் விருப்பத்தினைத் தெரிவிக்கவும். 

Monday, July 09, 2012

புகைப்பழக்கத்தை நிறுத்த, தொடர்ச்சி...

சென்ற பதிவின்  தொடர்ச்சி...

புகைப்பழக்கத்தினை நிறுத்த என்னென்னவெல்லாம் செய்யலாம் என்ற லிஸ்டில் நிக்கோடின் கலக்காத சிகரட்டும் உள்ளது. இதைப் பற்றி விசாரித்துச் சொல்லுங்கள் என்று நண்பர் சொன்னார். சரியென்று இந்தியாவில் உள்ள நிக்கோடின் கலக்காத சிகரட்டை விசாரித்த போது ஈ சிகரட்டைச் சொன்னார்கள். இந்தியாவில் கிடைக்குமா என்று விசாரித்த போது   இந்த இணையத்தளம் கண்ணில் பட்டது. 

எந்தெந்த வகையில் ஈ சிகரட் புகைபிடிப்பதை நிறுத்த(?) உதவுகிறது என்று கீழே வரிசைப்படுத்தி இருக்கிறேன்
  • ஒரே வரியில் சொன்னால் இந்த ஈ சிகரட் பெரிய அளவில் நிக்கோடின் இல்லாதது. ஆனால் புகைக்கும் பழக்கத்தினை நிறுத்தும் கருவியல்ல...
  • பின் எதற்கு என்றால், தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கத்தினால் ஏற்படும் பெரிய அளவிலான உடல் நலக்குறைவை இது சிறிது குறைக்கும்.
  • இது பேட்டரியில் இயங்கும்; சிறு அளவிலான  நிக்கோடினை  கொண்டிருக்கும்.  ஆகவே இதுவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுதான். 
  • மேலும் ஒரு செய்தி என்னவென்றால்  கனடாவிலும், யு கே விலும் ஈ சிகரட் தடை செய்யப்பட்டுள்ளது
சரி வேறு என்ன சிகரட் உள்ளது இந்தியாவில்? இதோ இன்னொரு வகையான இயற்கை முறையிலான சிகரட்:
  • நிர்டோஷ் ஹெர்பல் சிகரெட் - இது இயற்கை முறையிலானது
    • புகையிலை, நிக்கோடின் மற்றும் தாரில்லாது
  • ஹூக்காவும் உள்ளது
  • பேப்பரில் இல்லாததால் தீங்கு விளைவிக்கக்கூடியதல்ல
  • நல்ல மணம் வருகிறது
  • சுவாசம் நாற்றமடிக்காது
எனக்கு புகைக்கும் பழக்கமில்லை எனவே இந்தத் தகவல்கள் நண்பரிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் போதோ அல்லது இணையத்தில் 
உலாவிக்கொண்டிருக்கும் போதோ கண்டறிந்து பதிப்பிக்கப்பட்டது.

Sunday, July 08, 2012

புகைப்பழக்கத்தை நிறுத்த...



புகைப்பழக்கத்தை நிறுத்த சில டிப்ஸ்...

- சிகரெட்டை நிறுத்த நினைப்பவர்களுக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்காத சிகரெட் என்று ஒன்று உள்ளது. எப்படியென்றால் அந்த சிகரெட்டில் புகையிலை அல்லது நிக்கோட்டினுக்கு பதிலாக, ஒரு சில ஃப்ளேவரான புதினா அல்லது ஆசையைக் கட்டுப்படுத்தும் மெத்தனால் என்பவை இருக்கின்றன. இதனால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, மனநிறைவு அடையும் வகையில் இருக்கும்.

- டார்க் சாக்லேட் மிகவும் சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. எப்போது புகைப்பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சாக்லேட்டை சாப்பிட்டால் பசியானது அதிகரிப்பதோடு அதன் சுவையால் சிகரெட்டை மறக்கச் செய்துவிடும்.

- சோம்பு, நட்ஸ் போன்றவற்றை வாயில் போட்டு மெல்லுதல் மிகவும் சிறந்த, ஆரோக்கியமான ஒன்று. நட்ஸில் பாதாம் கொட்டையை வாயில் போட்டு மென்றால் உடலுக்கு மிகவும் சிறந்தது.

- எப்போதெல்லாம் புகைபிடிக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறதொ, அப்போதெல்லாம் 2-3 வாழைப்பழங்களை சாப்பிடலாம். இது புகைப்பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி.

இவற்றையெல்லாம் செய்தால் புகைப்பழக்கம் போவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

Thursday, July 05, 2012

திகைக்க வைக்கும் செக்ஸ் கொடுமைகள்!


அதிர்ச்சியானது.. கவலைக்குரியது.. அனைவரும் அறிந்துகொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டியது.. என்ன விஷயம் தெரியுமா?

- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்ற கொடுமை!

* 53 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

* பாதிக்கப்படுபவைகளில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளின் சதவீதம் அதிகம்.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப குழந்தைகளைவிட மேல்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம்.

* ஒன்று முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இந்த பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள்.

* 5 முதல் 12 வயது வரை பாதிப்பின் உச்சம். பாதிக்கப்பட்டவைகளில் 40 சதவீதம் இந்த வயதுதான். 30 சதவீதம் பேர் 13-14 வயதினர்.

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்கிற வர்கள், பீடோபீலியா (Peadophilea) என்ற வக்கிர புத்தி கொண்டவர்கள். இது ஒரு மனநோயாகவும் கருதப்படுகிறது. 

சிறுவர்- சிறுமியர்கள் மூலம் இன்பமடையும் வக்கிரவாதிகள் மேலைநாடுகளில் அதிகம். `சைல்டு செக்ஸ் டூரிசம்' என்ற பெயரில் அவர்களை சில சமூக விரோத அமைப்புகள் ஆசிய நாடுகளுக்கு அழைத்து வருகின்றன. முன்பு தாய்லாந்து போன்ற நாடுகளில் கால்பாதித்த இந்த பாதகர்கள் இப்போது இந்தியாவில் ஒடிசா, கோவா, மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு ரகசி யமாக வந்து `ஆசைகளை' தீர்த்துவிட்டு போகி றார்கள்.

இது தொடர்பான சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்களில் 15 சதவீதத்தினர் 15 வயதிற்கும் குறைவானவர்களாக இருக்கி றார்கள். 25 சதவீதத்தினர் 16 முதல் 18 வயதிற்கு உள்பட்டவர்கள். 2005-ம் ஆண்டு இந்தியாவில் 44,476 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார் கள். அவைகளில் 11,008 குழந்தைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவர்கள் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

- குழந்தைகளை எளிதாக ஏமாற்ற முடியும்.

- குழந்தைகள் காட்டிக்கொடுக்காது.

- குழந்தைகளுக்கு விளைவுகளை புரியத்தெரியாது. எதிர்ப்பு தெரிவிக்காது.

- தனக்கு ஏற்பட்ட பாதிப்பை குழந்தைகளுக்கு விளக்கத் தெரியாது. விளக்கினாலும் பெற்றோர் அதை நம்பமாட்டார்கள்.

- வயதானவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சும் பாவனையில் வக்கிர செயலில் ஈடுபடும் போது, பெற்றோருக்கு சந்தேகம் வராது.

இப்படிப்பட்ட பல காரணங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித் துக்கொண்டே போகிறது. கற்பனைக்கு எட்டாதவிதத்தில்கூட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள் அல்லது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், வேலைக்காரர்கள், அம்மாவின்- அப்பாவின் நண்பர்களாக வந்து போகிறவர்கள்.... போன்றவர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். புதிய நபர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு.

பயணங்கள், திருவிழா, திருமணவிழாக்களில் உருவாகும் மக்கள் நெருக்கடியை பயன் படுத்தி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தருபவர்கள் உண்டு. குழந்தை தொழி லாளர்கள், தெருவோரக் குழந்தைகள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவது சாதாரண விஷய மாக மாறிக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள், ஒருசில பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பாலியல் பலாத்காரத்தால் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலா வதாக அவர்களுக்கு பால்வினை நோய்கள் உண்டாவதை குறிப்பிடலாம். குழந்தைகளின் `உறுப்பு' பகுதியில் புண்களோ, கட்டிகளோ, சீழ் வடிதலோ இருந்தாலும் குழந்தையின் தாய்க்கு அது பால்வினை நோயின் அடையாளம் என்ற சந்தேகம் வருவதில்லை. ஒருசில மருத்துவர்களும் அது பால்வினை நோயின் அறிகுறி என்பதை உணராமல், வேறு விதமான சிகிச்சைகள் கொடுத்துவிடுவதும் உண்டு.

நன்றாக தெரிந்தவர்களால் குழந்தைகளுக்கு பாலியல் பாதிப்பு ஏற்படும்போது, அவை களின் உடலில் காயங்களோ, சிராய்ப்புகளோ இருப்பதில்லை. அதனால் பெற்றோரோ, மருத் துவர் றகளோ குழந்தை பலாத்காரத்திற்கு உட்பட்டிருக்கிறது என்று முதலில் நினைப்ப தில்லை. அப்படியே நினைத்து விசாரித்தாலும் குழந்தையால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறமுடியாது.

வெளிநபர்களால் பாதிப்பு ஏற்படும்போது காயம், சிராய்ப்பு, உறுப்பு பகுதியில் ரத்தம் வடிதல் போன்றவை காணப்படும். அவசரத்திலும், பயத்துடனும் அந்த பாதகர்கள் செயல்படுவதால் குழந்தைகள் காயம் அடைந்துவிடுகின்றன.

பலாத்காரத்திற்கு உள்பட்ட குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றன. பால்வினை நோய் மற்றும் காயங்களை சிகிச்சையால் குணப்படுத்திவிடலாம். ஆனால் மனநிலை பாதிப்பால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். வயதுக்கு மீறிய பாலியல் மாற்றங்கள், மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, எதைக் கண்டாலும்- யாரைக் கண்டாலும் பயம், தனிமை மீது விருப்பம், உணவில் நாட்டமின்மை, போதை மருந்துகளுக்கு அடிமையாகுதல், வீட்டை விட்டு ஓடுதல், படிப்பில் ஆர்வமின்மை, பாலியல் தொழில் ஆர்வம் போன்றவை முக்கியமான எதிர்கால பாதிப்புகளாகும்.

மக்கள் விழிப்புணர்வு கொண்டால் மட்டுமே இந்த பாதகத்தை தடுக்கவோ, குறைக்கவோ முடியும். சமூகத்தின் அடிப்படையில் இருந்து இந்த பணியை தொடங்கவேண்டும். பள்ளி கள், கல்லூரிகள், மருத்துவ துறை, தன்னார்வ அமைப்புகள், அரசு அமைப்புகள் ஆகிய அனைத்தும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும். தங்கள் தம்பி, தங்கை களை காத்து கண்காணிக்க மூத்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். குழந்தைகளின் உடலில் எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது நல்ல தொடுதல் என்றும்- எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது தவறான அணுகுமுறை என்றும் சொல்லித்தர வேண்டும். இதை சரியாக சொல்லித்தர அம்மாக்களாலே முடியும்.

மற்றவர்களின் பிரச்சினைக்குரிய செயல்கள் பற்றியோ, பிரச்சினைக்குரிய நபர்கள் பற்றியோ குழந்தைகள் கூறினால் அதை அலட்சியப்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். யாரையும் நம்பி குழந்தைகளை விட்டுச்செல்லக்கூடாது. பொது இடங்களில் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த பாதகத்தில் ஈடுபடு கிறவர்கள் நீதியின் முன்னே நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஒரு தனிநபர் பிரச்சினையோ, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்து பிரச்சினையோ இல்லை. இது சமூக பிரச்சினை. அதனால் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒத்துழைத்து இதை தடுக்கவேண்டும்.

நன்றி: டாக்டர் என்.உஸ்மான் M.D., D.V., Ph.D., 
(பாலியல் நோய் நிபுணர் மற்றும்
உலக சுகாதார நிறுவன ஆலோசகர்) சென்னை.

Tuesday, July 03, 2012

என்றும் இளமை - திருமூலர்



ன்றும் இளமையுடன் வாழ கடுக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

கடுக்காயின் தாயகம் இந்தியா. இது மிகவும் பழமையான மரம். புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென நமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை முறையே அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி, திருவிருதுதம் என்பதாகும். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.

அறு சுவையில் ஒரு சுவையான உப்பு தவிர்த்து துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, எரிப்பு ஆகிய ஐந்து சுவை நிறைந்த கடுக்காயில் வாத-பித்த-கப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது.  இதன் ஓங்கி நிற்கும்சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு 5 கிராம் கடுக்காய் தூள் எடுத்து சூடான நீரில் கலந்து பருகவேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மேலே குறிப்பிட்டதுபோல் உட்கொண்டால் நன்றாக ஜீரணமாகும். ஜீரணம் ஆன பின்பு மலமும் நன்றாக வெளியேறும்.

கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால் அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.

காலையில் இஞ்சி...
நண்பகல் சுக்கு...
மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண
கோலை ஊன்றி குழைந்து நடந்தவர்
கோலை வீசி குலாவி நடப்பரே..
                                    - சித்த மருத்துவ பாடல்

இதன் பயன்கள் :

ஜீரண சக்தி அதிகரிப்பு, இளமை பாதுகாப்பு, புத்தி சக்தி மேம்பாடு, ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல் ஆகியவை உள்ளன. கனமான தொடைப்பகுதியை சுருக்குதல், தோல்வியாதியை குணப்படுத்துதல், மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல், உடல் வீக்கங்களை போக்குதல், சுவாசநோய்களை கட்டுப்படுத்துதல், ரத்த நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களை கடுக்காய் தருகிறது.

நன்றி: சில பகுதிகள் சித்தர்களைப் பற்றிய வலைத்தளங்களிலிருந்தும், தினமலர் பத்திரிக்கையிலிருந்தும் எடுத்தாளப்பட்டுள்ளன 


Monday, July 02, 2012

மாமியார் ராஜ்ஜியம்


மாமியார் ராஜ்ஜியம் எனப்படும் சர்வாதிகாரப்போக்கு பெண்களிடம் இன்னும் இருக்கவே செய்கிறது. புகுந்த வீட்டிற்கு வரும் மருமகள்கள் என்னதான் சிறப்பாக செயல்பட்டாலும் இப்படிப்பட்ட மாமியார்களிடம் சிக்கிக்கொண்டு தவிக்கவே செய்கிறார்கள். மருமகள்கள், எப்படித்தான் தலைகீழாக நின்றாலும், மாமியாரிடம் மகள் என்ற அந்தஸ்தை பெற முடிவதில்லை.
மாமியார்கள் இப்படி ராஜாங்கம் செய்ய என்ன காரணம்?
மருமகள்களை மாமியார்கள் அன்னிய பெண்ணாக பார்க்கிறார்கள். அவர்களால் தங்கள் அதிகாரம் பறிபோய்விடுமோ என்று அஞ்சுகிறார்கள். தன் மகனை, மருமகள் தன்னிடம் இருந்து பிரித்து-தனக்கு எதிரியாக மாற்றிவிடுவாளோ என்றும் அவர்கள் பதற்றம் அடைகிறார்கள்.
மகன் மீது ஒவ்வொரு அம்மாவும் அலாதியான அன்பு வைத்திருக்கிறார்கள். தன் எதிர்காலமே மகனை நம்பித்தான் இருக்கிறது என்றும் கருதுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு மகன் மாறிவிடுவானோ என்று பயந்து, தன்னுடைய எதிர்காலத்தை நிலைநாட்டி கொள்ளவும், மகன் மீது உள்ள உரிமையை நிலைநிறுத்தி கொள்ளவும் கடுமையான முயற்சிகளை எடுக் கிறார்கள். அந்த முயற்சியில் மருமகள் என்ற உறவு நசுக்கப்படுகிறது.
தன்னுடைய மகன் எப்போதும் தன்னையே பிரதானமாக நினைக்கவேண்டும், தனக்கே முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எண்ணம் எல்லா அம்மாக்கள் மனதிலும் விடாப்பிடியாக இடம் பெற்று இருக்கிறது. அதற்கு தடையாக இருக்கும் ஒரே எதிரி தங்கள் மருமகள்தான் என்று நினைக்கிறார்கள். அப்போது அவர் களை அறியாமலே அவர்களுக்குள் ஒரு மனப் போராட்டம் உருவாகிவிடுகிறது. அதை முறை யாக கையாளத் தெரியாத பெண்கள் மாமி யார்- மருமகள் என்ற புனித உறவை காயப்படுத்திவிடுகிறார்கள்.
உண்மையில் யாரையும் கஷ்டப் படுத்தவேண்டும் என்ற எண்ணம் மாமியார்களுக்கு இல்லை. ஆனால் மகன் மீதுள்ள உரிமை போராட்டத்தால், தங்கள் வீட்டிற்கு வாழ வந்த மருமகள்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர் கள் உணர்வதில்லை. இந்த பாதிப்பு கள் மாமியார்- மருமகள் இடையே உறவு சிக்கல்களை உருவாக்கி, பகையாளிகள் போல் ஆக்கிவிடுகிறது. அப்போது அந்த குடும்பத்தின் வளர்ச்சியும், மகிழ்ச்சியும், எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடுகிறது.
`அனுபவம் என்ற பள்ளியில் மூடன் கற்றுக்கொள்ள மாட்டான்' என்பது பழமொழி. இது சிந்தித்து செயல்படத் தெரியாத மாமியார்களுக்கும் பொருந்தும். மனிதர்கள் தன்னைத்தானே உணர்ந்தாலே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.
ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தில் தனக்கு தரப்பட்டிருக்கும் இடம் என்ன, புதிதாக வந்திருக்கும் மருமகளுக்கு தரப்பட்டிருக்கும் இடம் என்ன என்பதை புரிந்துகொண்டு செயல்பட்டால் அவர்கள் மனதில் தேவையற்ற அகங்காரம் தலைதூக்காது. இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு போராடும் நிலையும் மகனுக்கு ஏற்படாது. மகனுடன் தேவை யற்ற வாக்குவாதம், மருமகளை பற்றி குறை கூறி வெட்டி பஞ்சாயத்து செய்வது இதை யெல்லாம் தவிர்த்தால் அது மன அமைதிக்கும், மகனுடைய நல்வாழ்வுக்கும் வழிவகுக்கும். மகன் மீது வைத்திருக்கும் அன்பை விஷமாக மாற்றி எதிர்காலத்தை இருட்டாக்கும் செயல்களில் அவர்களுக்கே தெரியாமல் சில அம்மாக்கள் இறங்கி விடுகிறார்கள்.
இதற்கு அவர்கள் சொல்லும் பதில் மிக விசித்திரமாக இருக்கும். `திருமணத்திற்கு முன் இருந்த மகன் இப்போது இல்லை. வெகுவாக மாறிவிட்டான் அல்லது மருமகள் மாற்றிவிட்டாள்` என்று சொல்வார்கள்.
அந்த மகனின் மனநிலையை நினைத்துப்பாருங்கள். அவன் என்ன நினைப்பான் என்றால், `நமது திருமணத்திற்கு பின்பு அம்மா மாறிவிட்டார். நமது வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்கு பதில் தம் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கிறார்' என்று நினைத்து தன் அமைதியை தொலைத்து அம்மாவை எதிரிபோல் பாவித்துக்கொண்டிருப்பார் என்பதை பல அம்மாக்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை.
திருமணம் ஆன புதிதில் வாழ்க்கையை அனுபவிப்பது என்பது மிக அற்புதமான விஷயம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் விஷயம். ஆனால் அதை தொடக்கத்திலே அனுபவிக்க விடாமல் ஆக்கி, காலம் முழுக்க கசப்பை உருவாக்கிவிடுகிறார்கள் சில மாமியார்கள்.
மாமியார் அந்தஸ்து என்பது மரியாதைக்குரிய ஒரு கவுரவமான உறவு. அந்த மரியாதைக்கு தகுதியானவராக அவர் தன்னை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அன்பான அணுகு முறை, பரிவான பேச்சு, விட்டுக்கொடுக்கும் பண்பு, `எதற்கும் கவலைப்படாதே நான் இருக்கிறேன்' என்று மருமகளிடம் காட்டும் நேசம் இவைகள் இருந்தால் போதும் எல்லா மருமகள்களும் வசப்பட்டுவிடுவார்கள். இதுவே வாழ்க்கையின் வெற்றி. இதற்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேண்டும். இதை மனோபலத்தால் மட்டுமே பெறமுடியும்.
மகனுக்கு சரியான துணையை தேர்ந்தெடுத்து கொடுத்து அவனது வாழ்க்கையை பிரகா சிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒவ்வொரு அம்மாவும் மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் அதற்கு தான் செய்யவேண்டியதை செய்ய மறந்துவிடுகிறார்கள். புதிதாக வந்த பெண்ணுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து குடும்ப வாழ்க்கை நன்றாக செல்ல உதவாமல், உபத்திரவம் செய்பவர்களாக மாறிவிடு கிறார்கள்.
ஒரு மாமியார், தனது மருமகளிடம் நல்லுறவை பேண வேண்டும் என்றால், அவர் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அந்த ஒரு விஷயம் அவர், அந்த மருமகளுக்கு தான் மாமியார் என்று கருதாமல் அவளுக்கும் தான் ஒரு தாய் என்ற சிந்தனை இருந்தால் போதும். அதற்கு அவர் செயல்வடிவம் கொடுத்தால் நல்ல மாமியார் ஆகிவிடுவார்.
குற்றங்குறை என்பது மனிதர்களின் இயல்பு. அதனால் அதை ஏற்றுக்கொண்டு பக்குவப்பட முன்வர வேண்டுமே தவிர, அதை மற்றவர்களிடம் சொல்லி பெரிதுபடுத்தி அதற்கு ஒரு பூதாகரமான வடிவத்தை கொடுக்கக்கூடாது.
குடும்பத்தில் தனது முடிவுகள் மதிக்கப்படவேண்டும் என்று மாமியார்கள் விரும்புவது நியாயம் தான். அதற்கு அவர்கள் மருமகளும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பரந்தமனப் பான்மையுடன் முடிவுகளை எடுக்கவேண்டும். அப்படியானால் அந்த முடிவுகளை எல்லோ ருமே ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். மற்றவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத் தும் முடிவுகளை கைவிடவேண்டும்.
ராஜ்ஜியம் செய்யவேண்டும் என்ற மனப்போக்குடன் மருமகள்களுக்கு வேண்டாத கட்டளை கள் இடுவது, வில்லங்கமாக பேசுவது, அவர்களது விருப்பங்களுக்கு இடையூறாக இருப் பது போன்றவைகளை மாமியார்கள் தவிர்க்கவேண்டும். நல்ல வார்த்தைகளை பேசி, நயமான அறிவுரைகளை வழங்கி, அன்போடும், அனுசரணையோடும், ஆதரவோடும் இருந் தால் மருமகள்கள் மனதிலும் மாமியார்கள் நிரந்தரமாக ராஜ்ஜியம் செய்யலாம்.
நன்றி: மெயில் அனுப்பியவர்க்கு..
Related Posts Plugin for WordPress, Blogger...