Search This Blog

Sunday, December 25, 2011

வாழ்க்கைதுணையைத் (மனைவி / கணவர்) தேர்ந்தெடுப்பது யார்?


தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதிகளில் யாருக்கும் குறை இருக்கத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்களேதான் தேடிக் கொண்டீர்கள். அது எப்படி?

எத்தகு தகப்பனுக்கும் தாய்க்கும் கருவாக அமைந்து.
தன் வாழ்க்கையில் எத்தகு இன்ப துன்பத்தை அனுபோகிக்க வேண்டும் என்ற கரு அமைப்பு இருக்கிறதோ, அத்தகு உடலைத்தான் உங்கள் தாய் வயிற்றில் உங்கள் உயிரானது அடிமன நிலையில் இருந்து கட்டிக் கொண்டது.

அதேபோல, கருமைப்பைக் கொண்டும், பிறந்த பின்னர் இதுவரை நீங்கள் அமைத்துக் கொண்டுள்ள மனத்தின் தரத்தைக் கொண்டும், உங்களுக்கு வாழ்நாளில் என்ன இன்ப துன்பம் வரவேண்டுமோ, அதற்கேற்ப உங்கள் வாழ்க்கைத் துணைவர் வருகிறார்.

அவரை உங்கள் உயிரே - அடிமனமே தேர்ந்தெடுத்து, அது பல பேர் மனத்தில் பிரதிபலித்து, அவர்கள் என்னவோ முயற்சி எடுப்பது போல் சில நடவடிக்கைகள் நடந்தேறி, உங்களுக்கேற்ற அந்த வாழ்க்கைத் துணைவர் வருகிறார்.

எனவே, உங்கள் வாழ்க்கைத் துணைவர் மீது குறைபட்டுக் கொள்ளத் தேவையில்லை. அவரிடம் உள்ள குற்றங்களுக்காக நீங்கள் யார் மீதாவது குறைபட்டுக் கொள்ள வேண்டுமானால் அது உங்கள் மீதேதான்.

எனவே, இந்தத் தத்துவத்தை நீங்கள் தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கைத் துணைக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும். அதை விடுத்து, கணவன் மனைவியர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தால், அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் குணமும் ஊனமுற்று அவர்கள் வாழ்க்கையில் பல குறைகள் தோன்ற ஏதுவாகும்.

வாழ்க்கைத்துணை குற்றத்தை
பெரிதுபடுத்தாமையும்,
பொறுத்தலும்,
மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்.

அதேபோல்,  கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து, ஒதுக்கி விட வேண்டும். அப்போதுதான் அமைதி பிறக்கும்.

தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக் கொள்ள வில்லையேன்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் - ஞானமேயானாலும் - சிறிது காலத்திற்கு, அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை, தள்ளி வைக்க வேண்டியதுதான்.

குடும்ப அமைதியை இழந்து பெறுவது - அது ஞானமேயாயினும் - அதனால் ஒரு பயனும் வராது.

- வேதாத்திரி மகரிஷி

Tuesday, December 20, 2011

சொத்துகள் வாங்கும் போது என்ன செய்ய வேண்டும்


சொத்துகள் வாங்கும் போது என்ன என்ன பத்திரங்களைக் கவனிக்க வேண்டும்?


சொத்துகள் பற்றிய அரசு அலுவலகம் வருவாய்த்துறையின் (Revenue Department) கீழ் வரும் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் நிலத்திற்கான விவரங்கள் இருக்கும். அது ஐந்து வகையான பதிவேடுகளில் குறிக்கப்பட்டிருக்கும்:


1) பட்டா (Patta)
2) சிட்டா(Chitta),
3) அடங்கல் (Adangal)
4) ‘அ’பதிவேடு என்கிற ‘A’ Register
5) நிலத்திற்கான வரைபடம் (FMB)


பட்டா என்றால் என்ன?
=======================
ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது - பட்டா. இப்பட்டாவில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.


சிட்டா என்றால் என்ன?
======================
ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா? என்பதும் தீர்வை (வரி) கட்டிய விவரங்கள் சிட்டாவில் இருக்கும்.


அடங்கல் என்றால் என்ன?
========================
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இருக்கும்.


'அ' பதிவேட்டில் ('A' Register) இருக்கும் விபரங்கள் 
================================================
1.பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2.ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), .நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு
3.பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்
4.நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.


வரைபடம் அல்லது FMB ஸ்கெட்ச் என்றால் என்ன?
===============================================


நிலத்திற்கான வரைபடம் FMB என்பது குறிப்பிட்ட நபரின் இடம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் காட்டும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட நபருக்குச் சொந்தமான சொத்தாய் குறிக்கப்படும் சர்வே எண்ணும் அப்படத்தில் குறிக்கப்பட்டிருக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எல்லைகள் நீள அகலங்கள் குறிக்கப்பட்டிருக்கும். இப்படத்தினை வைத்து நிலத்தின் வடிவம், நீள அகலங்களை அறிந்து கொள்ளலாம்.


ஓகே. பதிவேடுகள் குறித்து அறிந்தாயிற்று. இனி வாங்கும்போது என்னன்ன கவனிக்கவேண்டும்?



நிலத்தின் உரிமையாளர் உயிரோடு இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்தோடு நிலம் விற்கபடுகிறதா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான விஷயம், யாரெல்லாம் வாரிசுதாரர்கள் என்று வாரிசு சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்வது.உரிமையுள்ள வாரிசுகளில் யாரேனும் மைனராக இருந்தால், உயர்நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் (Guardian) மூலம்தான் சொத்து விற்கப்படவேண்டும்.


அதிகாரம் பெற்ற முகவர் (Power of Attorney Holder) மூலம் சொத்து வாங்கும்போது, முகவருக்கு சொத்தை விற்கும் அதிகாரம் இருக்கிறதா என்பதை அதிகார ஆவணத்தை தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், விற்பனை ஒப்பந்தம் செய்வதற்கு மட்டும் கூட அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படிபட்டவரிடம் இருந்து விற்பனை ஆவணம் பதிவு செய்துக்கொள்ள முடியாது. அதிகாரம் கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா? என்று தெரிந்துக்கொள்ளவும். இல்லையென்றால், அதிகாரமும் இல்லை.


மனநலம் பாதிக்கப்பட்டவரின் சொத்தை வாங்குவதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும். நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் போது, உரிமை, உடமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.


முன்பணம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மூல ஆவணத்தை பார்க்க வேண்டும். மூல ஆவணம் இல்லையென்றால், சொத்து அடமானத்தில் இருக்கலாம்.உங்களிடம் கொடுக்கப்பட்ட விற்பனை ஆவணம், மூல ஆவணமா (Original Deed) அல்லது படி ஆவணமா (Duplicate copy) என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். மூல ஆவணம் தான் தேவை.


மூல ஆவணம் நமக்கென்று கிடைக்க வாய்ப்பில்லாத அபார்ட்மெண்ட் ப்ளாட் விற்பனையின் போது, மூல ஆவணத்தை பார்வையிடுவது அவசியம்.அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கும் போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும், நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.அபார்ட்மெண்ட் கட்ட அனுமதி, திட்டத்தின் அனுமதி, வரைபடத்தின் அனுமதி என்று அனைத்து அனுமதியையும் பார்க்க வேண்டும்.அனுமதி பெற்ற வரைப்படத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்க கூடாது.


விற்பனை ஆவண பதிவிற்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்துக்கொள்வது நல்லது.
விற்பனை ஒப்பந்தத்தில், முன்பணம், விற்பனைத் தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.


பொதுவாக ஒரு சொத்து வாங்குவதற்கு முன், அதன் உரிமையாளரிடம் வாங்க வேண்டியவை:
1) விற்பனை ஆவணம்
2) தாய் ஆவணங்கள்
3) வில்லங்க சான்றிதழ்
13 ஆண்டுகள் வில்லங்க சான்றிதழ் போதும். 30 ஆண்டுகள் ரொம்ப நல்லது.
4) பட்டா, சொத்து வரி ரசீதுகள்
சொத்தின் உரிமையை (Ownership) ஆராய்ந்து தெரிந்துக்கொள்வது போல், உடமை (Possession) பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும். பட்டா பார்த்து, உடமையை தெரிந்துக்கொள்ளலாம். விவசாய நிலமென்றால், சிட்டா.


நிலத்தை பொறுத்து, உரிமையாளரை பொறுத்து  தேவைப்படும் ஆவணங்கள் கூடும்


Wednesday, December 14, 2011

உடல் ஸ்லிம் ஆக

காலை எழுந்ததும் காலியான வயிற்றில் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சாப்பிடக்கூடிய உணவுகளின் அதிக கலோரிகளை கட்டுப்படுத்தலாம். கலோரிகளை கட்டுப்பாட்டில் வைக்கும் திறன் முட்டையில் இருக்கிறது.


 முடியாதவர்கள், காலை உணவுடன் முட்டை சேர்த்துக் கொண்டால் மதிய உணவு, இரவு டின்னர் மற்றும் இடையே சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகியவற்றால் சேரும் கலோரிகள் தடுக்கப்படும். காலை உணவில் முட்டை சேர்ப்பவர்களுக்கு மதிய உணவை அதிகம் சாப்பிடும் உணர்வு ஏற்படாது. இதனால், எடை மற்றும் தொப்பை கட்டுப்பாட்டில் இருக்கும் என்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு.






Tuesday, December 13, 2011

15 GREAT THOUGHTS BY CHANAKYA


1) "Learn from the mistakes of others... you can't live long enough to make them all yourselves!!"

2)"A person should not be too honest. Straight trees are cut first and honest people are screwed first."

3)"Even if a snake is not poisonous, it should pretend to be venomous."

4)"There is some self-interest behind every friendship. There is no friendship without self- interests.
This is a bitter truth."

5)" Before you start some work, always ask yourself three questions - Why am I doing it, what the results  
might be, and will I be successful. Only when you think deeply and find satisfactory answers to
these questions, go ahead."

6)"As soon as the fear approaches near, attack and destroy it."

7)"The world's biggest power is the youth and beauty of a woman."

8)"Once you start a working on something, don't be afraid of failure and don't abandon it. People who work sincerely are the happiest."

9)"The fragrance of flowers spreads only in the direction of the wind. But the goodness of a person spreads in all direction."
10)"God is not present in idols. Your feelings are your god. The soul is your temple."

11) "A man is great by deeds, not by birth."

12) "Never make friends with people who are above or below you in status. Such friendships will
never give you any happiness."

13) "Treat your kid like a darling for the first five years. For the next five years, scold them. By
the time they turn sixteen, treat them like a friend. Your grown up children are your best
friends."

14) "Books are as useful to a stupid person as a mirror is useful to a blind person."

15) "Education is the Best Friend. An Educated Person is Respected Everywhere. Education
beats the Beauty and the Youth."




Saturday, December 10, 2011

வருமான ஏற்றத்தாழ்வு

வளரும் நாடுகளில் இந்தியாவில்தான் வருமான ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டில் இது 2 மடங்கு உயர்ந்திருக்கிறது. குறைந்த வருமானம் பெறுவோரைவிட, அதிக வருவாய் பிரிவினர் 12 மடங்கு அதிக வருமானம் பெறுகின்றனர். வளரும் நாடுகளில் வருமான ஏற்றுத்தாழ்வு குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு விரிவான ஆய்வு நடத்தியது. அதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1990ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மிக குறைந்த வருமானம் பெறுபவரை விட, மிக அதிக வருமானம் ஈட்டும் நபரின் வருமானம் 6 மடங்கு அதிகமாக இருந்தது. அது சமீபத்திய கணக்கெடுப்பில் 12 மடங்காக உயர்ந்துள்ளது. இது 20 ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயர்வு. அதிக வருமானம் பெறுவோர் & மிக குறைந்த வருமானம் ஈட்டுவோர் இடையே ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிரந்தர பணி மற்றும் குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற இரு பிரிவினருக்கும் இடையே வருவாயில் அதிக ஏற்றத்தாழ்வு உள்ளது.

இந்த விஷயத்தில் வளரும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரப்படி வருமான ஏற்றத்தாழ்வில் தென்ஆப்ரிக்கா மோசமான நிலையில் இருந்தது. இப்போது அந்நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வு 50 சதவீதம் குறைந்துள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்கள், நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் இந்தியாவில்தான் அதிகம். வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள், நடமாடும் வர்த்தகர்கள், துணை ஒப்பந்தம் மூலம் வேலை பெறும் தொழிலாளர்கள் ஆகியவற்றில் நிலையான வருமானம் இல்லாததால் வருமான ஏற்றத்தாழ்வு விரிவடைகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Friday, December 09, 2011

top 10 tips for good snap

A pictorial presentation on how to click a good photo from your existing camera / camera mobile

This is as dictated by Kodak company....

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்.




1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது:
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.


2.மிக அதிகமாகச் சாப்பிடுவது:
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.


3. புகை பிடித்தல்:
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.



4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்:
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.


5. மாசு நிறைந்த காற்று:
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.


6.தூக்கமின்மை:
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.


7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது:
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.


8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது:
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.


9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது:
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருந்தால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாவதில்லை. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆக முடியாமல் போகிறது.


10. பேசாமல் இருப்பது.
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்ளாமலிருந்தால் மூளையின் வலிமை குறைகிறது

Tuesday, December 06, 2011

தொப்பையை குறைக்க


இந்த வீடியோவை பாருங்க இதுல இருக்கற மாதிரி தினமும் செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

ரொம்ப நேரம் தேவை இல்ல.ஒரு இருபது நிமிஷம் அல்லது அரைமணி நேரம் இருந்தால் போதும்.

வெளியே எங்கேயும் போக தேவை இல்லை.வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.எந்த செலவும் கிடையாது.






இதில் உள்ள சில பயிற்சிகள் முதல் ஓரிரு நாட்களுக்கு கொஞ்சம் சிரமமா இருக்கும்.பிறகு எளிதாகிவிடும்.காலையிலோ மாலையிலோ நேரம் கிடைக்கும் போது வெறும் வயிற்றில் செய்து பாருங்கள் ஓரிரு வாரங்களில் நல்ல மாற்றம் கிடைக்கும்.

சிக்ஸ் பேக் இல்லைனாலும் லஞ்ச் பேக் மாதிரி இருக்குற தொப்பையை குறைக்கலாமே.

Sunday, December 04, 2011

கல்யாண அடிமைகள்


In the midst of widespread poverty, fueled by economic inequality and rampant corruption, a new form of slavery - bridal slavery - has flourished in India. Women and young girls are sold for as little as $120 to men who often abuse them.


Friday, December 02, 2011

பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி
கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது
பரோட்டாகடை .,அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடுவிருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.

இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது.
வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது.
இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின;
பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.



இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,
நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல

மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்

இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.
Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .


மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு , நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேழ்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்கள் .

ஷாப்பிங் போறீங்களா, உஷார்!

ஷாப்பிங் போகும் ஆண்களே, ரொம்ப கவனம். அதனால் ஒரு 'இம்பார்ட்டன்ட்' பிரச்சினையை சந்திக்க நேரிடும் - அதுததான் 'இம்பொடன்சி'.
.

வர்த்தக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவற்றுக்குப் போகும்போது அங்குள்ள கேஷ் கவுன்டர்களில் தரப்படும் ரசீதுகளில், அதாவது அந்தத் தாள்களில் பிஸ்ஃபெனால் ஏ (Bisphenol A (BPA) என்ற ஆபத்தான பொருள் அடங்கியிருக்குமாம். அதை தொடும் ஆண்களுக்கு அந்த பொருள் நமது உடல்மூலமாக ஊடுறுவி, செக்ஸ் ஹார்மோன்களை செயலிழக்க வைத்து விடுமாம்.
இந்த வேதிப் பொருளை பிரின்டர்களில் பயன்படுத்தப்படும் மையில் கலநது விடுகிறார்கள். அதாவது பளிச்சென எழுத்துக்கள் தெரிய வேண்டும் என்பதற்காக இவ்வாறு பிபிஏவை மையில் கலக்கிறார்கள். ஆனால் இது ஆண்களின் பர்ஸை மட்டுமல்ல, எல்லாவற்றையும் காலி செய்து விடும் ஆபத்து இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.

இந்த வேதிப் பொருள் அடங்கிய ரசீதை வாயில் வைப்பது, கையால் தொடுவது உள்ளிட்டவற்றின் மூலமாக நமது உடலுக்குள் இது போகிறதாம்.


ஷாப்பிங் செல்லும் பழக்கம் அதிகம் உடைய ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எழுச்சியின்மை, விறைப்புத்தன்மை குறைவு போன்றவற்றுக்கும் இது இட்டுச் செல்லும்.இது மட்டுமல்லாமல் மார்பகப் புற்றுநோய், இதய நோய்கள், உடல் பருமன், ரத்த அழுத்தம் உள்ளிட்டவையும் கூட வரும் வாய்ப்பு உள்ளது.

இந்த வேதிப் பொருளுக்கு அமெரிக்கா, கனடாவில் தடை செய்யப்பட்டுள்ளது.எனவே ஆண்குலமே, ஷாப்பிங் போகும்போது ரொம்பக் கவனம்

Women keep secrets for only half an hour!

Women are overcome by the desire to gossip and can typically wait no longer than 32 minutes before spilling the beans, a new study has claimed.

According to the study of 3,000 women by facial skincare brand Simple, one in ten admitted to being unable to keep a secret, no matter how personal or confidential the news is, whereas 85% said that they relish hearing gossip from others.

Depending on who the gossip is about, a woman’s husband, mother or best friend is most likely to be the initial recipients of the information.

Almost half of the women questioned said that they often felt the need to offload their secrets to someone while a sneaky 13 percent said they intentionally relayed gossip so that it would spread.

“This poll clearly shows that women really struggle to keep secrets,” the Daily Mail quoted a spokesperson for Simple as saying.

“Spilling the beans in just 32 minutes is very fast work, but with modern technology someone’s juicy secret can be spread to huge amount of people all over the world in a very short space of time.

“We are all guilty of sharing people’s secrets but there is a difference between idle chit-chat and sharing someone’s most sacred secret,” the spokesperson added.

Black-money returning as export receipts



There was a time when exports were given a lot of tax sops — such as duty drawback, cash assistance and income-tax exemption, either full or partial — which tempted unethical businessmen to inflate their exports through over-invoicing or other means. Over-invoicing of imports is done to get a kickback from the obliging suppliers, especially those for whom access to Swiss and other convenient bank accounts is easy and laughably simple. Over-invoicing of sales and its variant, exports, on the other hand, is done to make legitimate the illegal money one has accumulated over the years.

INFLATED OR FAKE EXPORTS

At the height of fiscal indulgence to exports, there was a bizarre story doing the rounds. A crack team of sleuths headed to Dubai on a tip-off and their efforts were amply rewarded when the export consignment to that place from India, worth several crores, turned out to be a heap of rags neatly packed with layers of insulation and other material designed to give it the much-needed verisimilitude, and more importantly to ward off any attempt at opening the boxes!

This was the tip of the iceberg regarding the widespread practice of inflated or fictitious exports with an eye on the hefty tax benefits. Relentless pressure from World Trade Organisation saw the Indian government gradually withdrawing these benefits — sometimes in a phased manner. But the steady weakening of the Indian rupee over the last couple of months coupled with the government's threat to go after those who have salted away their ill-gotten wealth abroad has once again revived the practice of inflated or fake exports. Exports to Bahamas, of all places, has jumped 1000-fold from $2.2 million in 2008-09 to $2.2 billion in 2010-11, bearing out the sneaking suspicion that there is something amiss in the sudden soaring of exports all round.

Export of services lends itself to an easier manipulation of invoices, given the fact that, unlike goods, services are always unknown quantities. Who knows, several Indians may be waiting in the wings ready to proffer advice and consultancy for an exaggerated fee, all designed to bring back, duly laundered, the ill-gotten money stashed away abroad. The Indian government has recently entered into information-sharing agreements on tax matters with several recalcitrant nations allegedly giving sanctuary to crooks and criminals. Bahamas, incidentally, is one of them. India can, therefore, crack the whip and ask to verify whether all these so-called exports were real or fictitious, normal or overstated.

But if it chooses to wink at them, it would appear that it doesn't mind the shenanigans of actual or charlatan exporters in the smug knowledge that, after all, the country is getting precious foreign exchange.

In any case, the revival of the over-invoicing route to money laundering should have dampened sufficiently the enthusiasm of the government in going ahead with Voluntary Disclosure of Income Scheme (VDIS) II that seeks to exclusively address the problem of Indian money stashed away abroad.

Indeed, given this fertile and hassle-free route, no one would seriously consider pressing ahead with VDIS II. Further, a lot of water has flowed down the bridge ever since VDIS 1997 was implemented.

PARTICIPATORY NOTES

The Foreign Institutional Investors' (FII) scheme with its inscrutable Participatory Note (PN) feature enables round-tripping which, shorn of jargon, means Indian black money stashed away abroad coming back in the form of stock market investments, riding piggyback on foreign investors.

Mauritius, too, is a favourite money laundering destination for Indians with black money abroad in view of the tax exemption it confers to a Mauritius resident from tax on capital gains earned in India. With such relatively hassle-free avenues, perhaps not many would take the trouble of availing of the tax amnesty scheme, or its variant, VDIS II, supposedly on the anvil.

Investigation authorities in India have always been stymied in their work when their audit or investigation trail takes them beyond India. But the Indian government should, like the US government, read the riot act to the foreign governments indulging crooks and criminals. Better still, there must be pre-emptory strikes like abrogation of the patently invidious tax treaty with Mauritius and the scrapping of the attractive PN feature of the FII scheme.

The wily captains of industry in India have got for themselves a permanent amnesty scheme by getting written into the Indian income-tax law through the Finance Act, 2011, a hugely concessional tax of 15 per cent on dividend received from foreign companies. The government cannot be seen running with the hare and hunting with the hounds.

Thursday, December 01, 2011

நாம் உண்டு முடித்த பிறகு வெந்நீர் (Warm water - இளஞ்சூடு) குடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது

நமது உணவுப் பழக்க வழக்கத்தில் - உண்ட பின்பு - ஒரு முறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். நாம் உண்டு முடித்த பிறகு வெந்நீர் (Warm water) இளஞ்சூடு உள்ள நீர் (Hot Water) என்றால் கொதிக்க கொதிக்க உள்ள நீர்) குடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது! சாப்பிடும்போது இடையில் குடிக்கும் தண்ணீர் இப்படி இளஞ்சூடு உள்ள நீராக இருப்பது நல்லது. இது மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறதாம்! என்னே வியப்பு! சீனர்களும், ஜப்பானியர்களும் உணவு உண்ட பின்பு சூடாக தேநீர் அருந்துகிறார்கள். ஏன் அரபு நாடுகளில் கூட இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உண்டவுடன் வெறும் குளிர்நீரைக் குடிப்பவர்கள் மாறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இக்கட்டுரை அமையக் கூடும்! வெந்நீர் - இளஞ்சூடு உள்ள நீர் செய்யும் நன்மையை - இந்தக் குளிர் நீர் செய்வதில்லையாம்! குளிர் நீர் குடித்தவுடன், உண்ட உணவினை கெட்டியாக (Solidity) ஆக்குகிறதாம். காரணம் நம் சாப்பாட்டில் எண்ணெய் - கொழுப்புகளும் உள்ளன அல்லவா? இது செரிமானத்தை காலதாமதப்படுத்துகிறது. இந்த உணவுக் கூழ் அமிலத்துடன் இணைந்து செயலாற்றும்போது, அது உடைந்து கெட்டியான உணவை விட வேகமாக குடலினால் உட்கிரகிக்கப்படுகிறது. இது குடலின் ஓரங்களில் திரண்டு, வெகுவிரையில் கொழுப்புகளாக மாறி புற்று நோய்க்கு வழி ஏற்படுத்தி விடும். உணவு உண்ட பிறகு சூடான சூப்போ அல்லது இளஞ்சூடு உள்ள வெந்நீரோ அருந்துவதே மிகவும் சிறந்தது. மாரடைப்புக்கான பொதுவான அறிகுறிகள் மாரடைப்புப்பற்றி ஒரு முக்கியமான குறிப்பு: மாரடைப்பு ஏற்படும் ஒவ்வொரு நேரத்திலும் இடது கையில் வலி ஏற்படாது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தாடைப் பகுதியில் கடுமையான வலி இருக்கும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். மாரடைப்பு ஏற்படும்போது உங்களுக்கு முதன்முதலாக நெஞ்சில் வலி ஏற்படாது. குமட்டிக் கொண்டு வாந்தி வருவது போன்ற உணர்வு மற்றும் அதிகப்படியாக வியர்ப்பது ஆகியவையும் மாரடைப்பின் பொதுவான அறிகுறிகளாகும். தூங்கிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்படும்; 60 விழுக்காடு மக்கள் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வதில்லை. தாடையில் ஏற்படும் வலி ஆழ்ந்த உறக்கத்திலிருந்து உங்களை எழுப்பிவிடக்கூடும். நாம் அதனைப்பற்றி நன்கு அறிந்தவர்களாகவும், மிகுந்த கவனம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். இவற்றைப் பற்றியெல்லாம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக நாம் அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இந்தச் செய்தியைப் படிப்பவர்கள் ஒவ்வொருவரும் 10 பேருக்கு இந்தச் செய்தியை அனுப்பினால், குறைந்தது நம்மால் ஓர் உயிரையாவது காப்பாற்ற முடியும் என்று நிச்சயமாக நம்பலாம் என்று ஓர் இதயநோய் மருத்துவர் கூறுகிறார். எனவே இதனைப் படித்துவிட்டு, ஒரு நண்பருக்காவ்து சொல்லுங்கள் ஓர் உயிரை அதனால் காப்பாற்ற முடியும்.

Sunday, November 27, 2011

7 நாளில் 6 கிலோ குறையுங்க...

7 நாளில் 6 கிலோ குறையுங்க... 7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது. அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும். ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும். *** இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் கலந்து சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும். *** நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். ஐந்தாம் நாள் சிறிதளவு (ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர் (மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது. *** ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம். ஏழாவது நாள் ஒரு கப் சாதம் - காய்கறிகளுடன், பழ ஜூஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு. *** இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான். எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம். முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும். *** 3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும். நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. 5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம். *** அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது `ஜெனரல் மோட்டார்ஸ் டயட்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain water harvesting

ராஜஸ்தான் மாநிலம் என்றாலே, பாலைவனத்திற்கு பெயர் பெற்றது. குறைந்த அளவே மழை பெய்யும்; எப்போதும் வறட்சிதான். வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால் கூட பெண்கள் நெடுந்தூரம் செல்ல வேண்டும். இந்த மக்களின் தண்ணீர் தேடல் தொடர்கிறது. இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலத்திற்கே மரகதப் பதக்கம் வைத்தாற்போல பசுமை நிறைந்ததாக மாறி உள்ளது நேமி கிராமம். சமீபத்தில் இங்கு சென்று வந்த நண்பர் ஒருவருடன் பேசிய போது ஆச்சரியமும், சந்தோஷமும் ஏற்பட்டது. அவர் கூறினார்: நேமி கிராமம் மட்டுமல்ல... இதைச் சுற்றியுள்ள கிராமங்களும், தண்ணீர் சேமிப்பும், மழை நீர் அறுவடை போன்ற சிறந்த விஷயங்களை அறிந்து, தக்க சமயத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டது தான் பசுமை அடைந்ததற்குக் காரணம். இப்போது, இந்த பகுதி மக்கள், "தண்ணீர் கஷ்டமா... அப்படீன்னா?' எனக் கேட்கின்றனர். இந்தப் பகுதிகளில் ஆர்வாரி, ரூபரேல் போன்ற ஆறுகள் ஒரு காலத்தில் ஓடின... இப்போது அவை வற்றி, அவற்றின், "தடம்' மட்டுமே காணப்படுகிறது. எப்போதோ வெட்டப்பட்ட குளங்கள், கண்மாய்கள் தூர்ந்து போய் குப்பை கொட்டும் இடங்களாகின. இந்த இடங்களை பல பொது நல தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், கிராம மக்களே சுத்தம் செய்தனர். மழை நீர் ஓடி வந்து இந்த குளங்களில் தேங்கும் அளவிற்கு கால்வாய்கள் வெட்டப்பட்டன. இந்த பகுதிகளில் பெய்யும் ஒவ்வொரு மழைத் துளியையும், சேமிக்கும் அளவிற்கு, கிணறுகள் அமைக்கப்பட்டன; மழை நீர் சேமிப்புத் தொட்டிகள் பல அமைக்கப்பட்டன. இதுபோன்ற விழிப்புணர்வை பல தொண்டு நிறுவனங்கள் கிராம மக்களுக்கு ஏற்படுத்தின. அரசாங்கத்தின் உதவி இன்றி, "நமக்கு நாமே' என்று கிராமத்தினர் செயலில் இறங்கினர். இந்த முயற்சிகளால் நேமி கிராமத்தில் நல்ல பலன் கிடைத்தது. நீர்வளம் அதிகரித்தது. காய்ந்து கிடந்த ஆற்றுப் படுகைகளில் நீர் பாய்ந்து நிலத்தின் அடித்தளம் வரை சென்றது. இதனால், நிலத்தடி நீர் அளவு உயர்ந்தது. இதை கிராமத்தினர் கண் கூடாக உணர்ந்தனர். கிணறுகளில் மிகவும் ஆழத்தில் சிறிதளவு தண்ணீரை கஷ்டப்பட்டு இழுக்கும் நிலை மாறி, கிணற்றின் மேல் மட்டத்திற்கு தண்ணீர் வந்து விட்டது; தண்ணீரும் உப்பு கரிப்பு இல்லாமல் சுவையாக இருக்கிறது. இந்த பகுதிகளில் விவசாயம் பெருகுகிறது. கோதுமை வளர்ச்சி அதிகரித்துள்ளது. பறங்கிக்காய், முள்ளங்கி, முலாம் பழங்கள் அதிக அளவில் இப்போது விளைகின்றன. தினமும் லாரிகளில் ஹரியானாவிற்கும், டில்லிக்கும் இவை விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கிராமங்களின் பொருளாதார நிலை இதன் காரணமாக உயர்ந்து வருகிறது. இப்போது நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நீர்வள ஆய்வாளர்கள் இந்தப் பகுதிக்கு வந்து மழை நீர் அறுவடை மற்றும் நீர் வற்றி வீணாகாமல் சேமிக்கும் முறைகள் பற்றி தெரிந்து செல்கின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களிலும், பெரிய கட்டடங்கள் கட்டும் போதும், அவற்றை சுற்றிலும் சிமென்ட்டால் பூசி விடுகின்றனர்; இது பெரும் தவறாகும். இந்த பெரிய பரப்பளவிலான கட்டடங்களில் பெய்யும் மழை நீர், தரையில் வழிந்து, சாக்கடையில் தான் கலக்கிறது. இதனால் என்ன லாபம்! இதுபோன்ற பெரிய கட்டடங்களில் மழைநீர் சேமிப்புத் தொட்டிகளை அமைக்கலாம். இதற்கு மிகவும் குறைந்த செலவே ஆகும். அந்த கட்டடங்களுக்கான கிணறுகளின் நீர் அளவும் அதிகரிக்கும். கார் நிறுத்தும் இடங்களில் நிலத்தினுள் நீர் போகாத அளவு சிமென்ட்டால் பூசி மெழுகுவதை தவிர்த்து, சிறிதளவு மண் தெரியும் அளவு கற்களைப் பதிக்கலாம். இதனால், நிலத்தினுள் மழைநீர் செல்ல வாய்ப்பு ஏற்படும்; நிலத்தடி நீர்வளம் அதிகரிக்கும். பூமியின் தாகத்திற்கு மழைநீர் செல்ல விடாமல் சிமென்ட்டால் பூசி மெழுகுபவர்களது அறியாமை போக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், இந்த உலகமே தண்ணீர் இல்லாத கான்கிரீட் கட்டடங்களால் ஆன பாலைவனமாகி விடும் என்றார். அவர் சொல்றது முற்றிலும் சரி... அத்தோடு, வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வருடா வருடம் சென்னையில் வந்து செட்டிலாவதை தடுக்க முயல வேண்டும் அரசு. அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்துமே சென்னையையும், அதைச் சுற்றியுமே அமைவதால் வெளி மாவட்ட, "மைகிரேஷன்' ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது... இன்னும், 10 வருடங்களில் தார் பாலைவனமாக தமிழ்நாடு மாறுவதை தடுக்க, இப்போதே அரசு முயல வேண்டும் என்றேன்.

Wednesday, October 26, 2011

அறிய வேண்டிய அரிய செய்தி



பூமியில் இன்றைக்கு 6.8 பில்லியன் பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக் கிறார்கள். 2050 ஆம் ஆண்டில் 9.5 பில்லியன் பேர்களுக்கு சோறு போட வேண்டிவரும். அதற்கு பிரேசில் நாடு அளவுக்குப் புதிதாக வேளாண்மை நிலம் நமக்குத் தேவைப்படும். ஏற்கனவே குடிநீரில் 70 சதவிகிதமும் எரிபொருளில் 20 சதவிகிதமும் உணவு உற்பத்திக்காகவே செலவாகிறது. மேலும் ஒரு 3 பில்லியன் மனிதர்களுக்குத் தேவையான நிலத்திற்கும் நீருக்கும் எரிசக்திக்கும் என்ன செய்வது? எங்கே போவது? இதற்கு கலப்பையில்லாத கட்டட விவசாயம்தான் ஒரே பதில். நிலத்தை உழுது, பாசனம் செய்து, உர மிட்டதால் பூமி நொந்துபோய் மலட்டுத் தன்மை அடைந்துவிட்டன. வேண்டிய அளவுக்குக் காடுகளையும் வெட்டி நாசம் செய்து அவற்றை விவசாய நிலங் களாக்கி விட்டோம். அதன் காரணமாக புவியின் சூடும் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் எதையாவது புதிதாகச் செய்தால்தான் இந்தச் சிக்கலிலிருந்து விடுபடமுடியும். மண் படாத வேர்கள்
முப்பது மாடிக் கட்டடத்தில் ஒவ் வொரு தளத்திலும் மண்ணைப் பயன் படுத்தாமல், பயிர்களை வளர்க்கும் உள்ளரங்க பயிரியல் முறைதான் கட்டட வேளாண்மை.
வில்லியம் எஃப் பெரிக் என்பவர் 1929 இல் மண்ணில்லாமல் தொட்டியில் தண்ணீர் நிரப்பி, அதில் ஊட்டச்சத்து உப்புகளைக் கரைத்து, செடிகளை வளர்த்துக் காட்டினார். ஹைட்ரோ போனிக்ஸ் என்பது இந்த முறையின் பெயர் _  இரண்டாம் உலகப் போரின் போது 8 மில்லியன் கிலோ காய்கறிகளை பசுபிக் தீவுகளில், நேட்டோ நாடுகளின் சார்பில் நிலமில்லாமல் நேரடியாக நீர்த் தொட்டிகளில் வளர்த்துப் பெறப்பட்டது.
வேர்கள் கெட்டியாக மண்ணைப் பிடித்துக் கொண்டுதான் வளரும் என்று பலகாலம் நாம் நம்பிவந்திருக்கிறோம். உண்மையில் மண்ணிலுள்ள தாதுக்கள் தான் அவற்றிற்குத் தேவை. தண்ணீர்த் தொட்டியில் செடியினால் நிற்க இயலாது என்று கருதினால் வெரிமிகுலைட் என்ற ஜடப் பொருளை, (தக்கைபோல இருக்கும்) துருவி தூளாக்கிப் போட்டு பல ஆண்டுகளுக்கு மண்போலவே திரும்பத் திரும்பப் பயன் படுத்தலாம். இது பயிரின் வேர்களுக்குத்  தேவையான பிடி மானத்தை மட்டும் வழங்கும்; மற்றபடி இதற்கு வேறு வேலை ஏதும் கிடையாது.
ஏரோபோனிக்ஸ் என்கிற இன்னொரு முறையில் செடிகள் நூலில் கட்டப்பட்டு காற்றில் தொங்கியபடி வளரும். காற்றில் குறைவில்லாத ஈரம் நிரம்பியிருந்தால் போதும். மார்கழிப் பனிபோல அறை முழு வதும் நீர்த் திவளைகளால் நிரப்பி அதில் ஊட்டத் தாதுக்களையும் கரைத்து கலந்து விட்டால் செடிகள் ஜோராக வளரும்.
யூரோஃபிரெஷ் எனும் காய்கறி நிறு வனம் அரிசோனா பாலைவனத்தில் 318 ஏக்கர் நிலபரப்புக்குச் சமமான விவசா யத்தை அடுக்கு மாடி கட்டடத்தில் செய்து கொண்டு வருகிறது. தக்காளி, வெள்ளிரிக் காய், மிளகு ஆகியவற்றை ஹைட்ரோ போனிக்ஸ் முறையில் பயிர்செய்தது.
செங்குத்து வேளாண்மை அடுக்குமாடி கட்டடத்தில் ஒவ்வொரு தளத்திலும் பல அடுக்குகளில் வரிசையாக தொட்டிகளை நிறுத்தி அவற்றில் பயிர் செய்வது செங்குத்து வேளாண்மை. செங்குத்து வேளாண்மைக்கு பல ஏக்கர் நிலம் வேண்டியதில்லை. எங்கெல்லாம் காய்கறிகள் வேண்டுமோ அங்காங்கே பயிர் செய்து கொள்ளலாம். கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில், விமான தளத்திற்கு பக்கத்தில், என நகரங்களின் நட்ட நடுவே வேளாண்மை செய்யலாம். காடு, கழனிகள் ஓரிடத்திலும், விற்பனை சந்தைகள் ஓரிடத்திலும் இருந்த காலம் போய்விடும்.  அறுவடையான அரிசி யையும் கரும்பையும் ஊர் ஊராக அனுப்பிக்கொண்டு தேவை யில்லாமல் போக்குவரத்துக்கு செலவிட வேண்டியதில்லை. விளைபொருள்களை பதனிட்டு பாது காக்கவும் தேவையில்லை. அவரவர்களுக்கு வேண்டியவற்றை அவர்களிடத்திலேயே விளைவித்து, பறித்த காய்கறிகளைத் தரலாம். மூடிய கட்டடத்தில் சுத்தமான முறையில் பயிர் செய்வதால் காய்கறிகளில் பூச்சி அண்டாது, மண் மூலமாக பயிர்களில் பரவும் கிருமிகளும் இருக்காது. இதனால் பூச்சிக்கொல்லி மருந்து, நோய்க்கிருமிகள் இல்லாத காய்கறி, தானியங்கள் கிடைக்கும்.
பருவகாலம், மழைபொழிவு, புயல், வெள்ளம் என்ற பிரச்சினைகள் ஏது மில்லாமல் ஆண்டு முழுவதும் பயிர் செய்து கொண்டேயிருக்கலாம். தேவை யான மின்சக்தியை பயிர்களின் காய்ந்த குப்பைக் கூளங்களை எரித்து அனல் சக்தியாக்கிப் பெறலாம். சூரிய ஒளிப் பலகைகளிலிருந்தும் காற்றாடிகளி லிருந்தும் பெறலாம்.
நகரத்துக்குள்ளேயே அடுக்கு மாடிகளில் பயிரிடுவதால், உள்ளூர் இளைஞர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மண்ணில் இறங்கி வேலை செய்வதை கேவலமாக நினைத்து பட்டணத்துக்கு வரும் பட்டிக்காட்டு இளைஞர்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். படிப்படியாக மண்ணுக்கு ஓய்வு கிடைக்கும். மீண்டும் அவை பழைய இயல்புநிலையை அடையும். விரும்பினால் அவற்றை அப்படியே விட்டுவிடலாம். இதன் மூலம் இழந்த காடுகளைத் திரும்பப் பெறலாம். அமைதிக்கான நோபெல் பரிசு பெற்ற வங்காரி மாத்தய்  சொன்னது போல் நிலங்களை சும்மாவிட்டு விட்டால் போதும் உலகம் வெப்பமயமாதல் தானா  சரியாகிவிடும். சோற்றுக்கு என்ன செய்வது என்றால், அதற்குத்தான் செங்குத்து வேளாண்மை இருக்கிறதே!
சமன்பாடுகள்
முப்பது அடுக்கு மாடியில் செய்யப் படும் மொத்த விளைச்சலானது, 150 ஏக்கர் நிலப்பரப்பில் செய்யப்படும் வேளாண் மைக்குச் சமம். குட்டை ரக பயிர்களாக இருந்தால், ஒரே தளத்தில் மூன்று, நான்கு அடுக்குகளாக அவற்றைப் பயிர் செய்து, 2400 ஏக்கர் நிலத்திற்குச் சமமான விளைச்சலைப் பெறலாம். கிராமப்புறங்களில் நிலங்களை விட்டுவிட்டு புறநகர் பகுதியிலேயே கட்டடங்கள் கட்டி அவற்றில் அதற்குச் சமமான விளைச்சலை பெறமுடியும். பள்ளிக்கூடங்கள், பெரிய மருத்துவமனைகளின் மேல்தளங்கள் போன்றவற்றில்கூட கூண்டு கட்டி அவற்றில் அவசியமான அளவுக்குக் காய்கறி பயிர் செய்யலாம். நான்கைந்து வாரங்களில் கீரை கிடைத்துவிடும்; கம்பு, சோளம் போன்ற தானியங்கள் 4 மாதங் களில் கிடைக்கும். முயன்றால் எல்லா பயிர்களையும் கட்டடத்திற்குள்ளேயே வளர்த்துக் கொள்ளலாம்.
முப்பது அடுக்குகள் ஒவ்வொன் றிலும் பல வித முறைகளில் பயிர்கள் வளர்க்கப்படும். முனிசிபல் கழிவு நீரே சுத்தம் செய்யப்பட்ட பிறகு பாசனத்திற்கு பயன்படுத்தப்படும். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறப்படும். செயற்கை ஒளி தரும் குழல்விளக்குகள் பயிர்களை வளர்க்கும். குப்பைகள் வெளியேற தனியாக செங்குத்து சாக்கடைகள் இருக்கும். கழிவுகளிலிருந்து வெப்பம் கிடைக்கும். அங்கேயே காய்கறி கடையும் இருக்கும்.
செங்குத்து வேளாண்மை கட்ட டங்களின் ஒவ்வொரு தளத்திலும் பயிர்கள் இப்படித்தான் வளர்க்கப்படும். ஒரு முனையில் நாற்றுகள் உருவாக்கப்படும்; கன்வேயர் பெல்ட் நகர்ந்த படியே இருக்கும், மறுமுனைக்கு வரும் போது அவை கனிந்து அறுவடைக்குத் தயாராகிவிடும். தளத்தின் ஒளி அளவு, ஈரப்பதம் ஆகியவை கட்டுப்படுத்தப்படும்.
கடந்த 10 ஆண்டுகளாக, யூரோ ஃப்ரெஷ் என்ற கம்பெனி (அரிசோனா, வில்காக்ஸ்) 318 ஏக்கர் பரப்பில் தக்காளி மற்றும் மிளகாய்களை உள் அரங்கத்திலேயே நீர்த்தொட்டிகளில் பெருமளவில் வளர்த்துவருகிறது. இது ஹைட்ரோபோனிக்ஸ் வேளாண்மையின் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு.

Friday, October 14, 2011

திருமண உறவு நிலைத்திருக்க




  • கணவன் அல்லது மனைவி இருவரும் தன் துணையின் மேல் ஆளுமை / ஆதிக்கம் செலுத்துவதைவிட்டு அன்பு செலுத்தவேண்டும். ஆளுமை / ஆதிக்கம் ஒரு போதை.

  • சூழ்நிலைக்கு ஏற்ப குடும்ப பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் பொறுப்புக்களை உணர்ந்து உடனுக்குடன் நிறைவேற்றுங்கள். 

  • துணையின் இயலாமையை விமர்சனம் செய்யாதீர்கள். புரிந்துகொள்ளுங்கள்.

  • நாம் மற்ற விசயங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை தன் துணையின் சிறு சிறு உணர்வுகளுக்கும் தரவேண்டும். சிறு விரிசல்கள் தான் ஒரு நாள் மொத்தத்தையும் தகர்த்துவிடும்.

  • எப்போதும் நாம் நம் துணைக்கு மருந்தாக இருக்கவேண்டுமே தவிர ஒரு போதும் பிணியாக மாறக்கூடாது.

  • அல்ப காரணங்களுக்காக திருமண உறவில் இருந்து பிரிந்து செல்வது தற்கொலைக்குச் சமமானது.

  • கணவன் அல்லது மனைவி இருவரும் ஒரு குடும்ப எல்லையை வகுத்துக்கொண்டு அதற்குள் மற்ற உறவுகளின் ஆதிக்கத்தை முற்றிலும் தவிர்த்துவிடவேண்டும்.

  • பேசுங்கள். மனது விட்டு அன்புடன் பேசுங்கள். ஒரு துணை பேச ஏங்கும்போது தவறாமல் பேசுங்கள். நீங்கள் பேசும் விசயம் உங்களின் துணையை காயப்படுத்தும் என்றால் தயவுசெய்து தவிர்த்துவிடுங்கள். நிச்சயம் நீங்கள் பேச விரும்பிய விசயத்தை உங்களின் துணையை காயப்படுத்தாமல் சொல்லமுடியும். கற்றுக்கொள்ளுங்கள்.

  • எப்போதும் எக்காலத்துக்திலும் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஒருவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அப்படி ஒரு நிலை திருமண வாழ்வில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

  • உங்களின் குழந்தைகளின் முன்பு தயவுசெய்து சண்டையிட்டுக்கெள்ளாதீர்கள். மேலும் ஒருவர் மற்றவரின் மேல் உள்ள குற்றம் குறைகளை குழந்தைகளிடம் கூறிக்கொண்டிருக்காதீர்கள். குழந்தைகளுக்கு ஒரு உதாரணமாக நடந்து கொள்ளுங்கள்.

  • உறவுகள் மற்றும் நண்பர்களில் உள்ள கறுப்பு ஆடுகளை அடையாளம் கண்டுகொள்ளவும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

குறிப்பு 1: இங்கு நான் துணை (துணைவி அல்ல) என்று எழுதியிருப்பது ஆண் மற்றும் பெண் இருவரையும் பொதுவாக குறிப்பிடவே.

Tuesday, October 11, 2011

குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டம்; நெருக்கடியில் நெற்களஞ்சியம்


விவசாயத்திற்குப் பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளில், நிலத்தடி நீர் மட்டம் 42 அடி குறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டே ஆண்டுகளில், தரிசு நிலங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த அபாயப் புள்ளி விவரங்கள், தஞ்சை மாவட்ட விவசாயத்தில் ஏற்பட்டு வரும் விரும்பத்தகாத மாற்றங்களின் சில அறிகுறிகள் தான்.
தண்ணீர் கரை புரண்டோடும் காவிரி நதி நீர் கால்வாய்கள், அவற்றில் குளித்துக் கும்மாளம் போடும் பிள்ளைகள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் எனக் காட்சி தரும் வயல்வெளிகள், வயல்வெளிச் சேற்றில் நாற்று நடும் பெண்கள் என, நெஞ்சை அள்ளும் தஞ்சை கிராமங்கள், வளமை போல் இந்த ஆண்டும், சம்பா பருவ நெல் சாகுபடிக்குத் தயாராகி வருகின்றன.அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதே காட்சிகள் கிடைக்குமா என்ற கேள்வியை, புள்ளி விவரங்கள் பின்னால் சென்ற போது சந்தித்த அசுரர்கள் எழுப்புகின்றனர்.

ஆழ்துளைக் கிணறு என்ற அசுரன்:
மத்திய நீர்வள அமைச்சகம், தஞ்சை மாவட்டத்தில், 26 இடங்களில், 2001-2011 ஆண்டுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் நிலத்தடி நீர் மாற்றங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. அதில், நிலத்தடி நீர் மட்டம், சராசரியாக 13.87 மீட்டர், அதாவது 45.5 அடி அளவிற்குக் குறைந்துள்ளது தெரியவந்தது.குறிப்பாக, தஞ்சையின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில், மருங்குளம், குறுங்குளம், திருவோணம், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட கிராமங்களில், 70 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம், 120 அடிக்கு குறைந்துள்ளது. இதை, பொதுப் பணித் துறை அதிகாரிகளும் ஒப்புக் கொள்கின்றனர்.மேட்டூர் அணை நீர்வரத்து மற்றும் பருவ மழையில் நிலவும் மாறுபாடு, பயிர் சுழற்சி முறை கடைபிடிக்கப்படாதது ஆகியவற்றின் விளைவாக, ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் அதிகரித்துள்ளது.இதன் நேரடி விளைவாக, நிலத்தடி நீரும் வேகமாகக் குறைந்து வருகிறது. இதற்கும் மேல் நிலத்தடி நீர் குறைந்தால், நிலைமை, அபாய கட்டத்தை எட்டும் எனத் தெரிகிறது.

நீடாமங்கலத்தை அடுத்த, பைத்தஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி குமாரசாமி, ""மேட்டூரை மட்டும் நம்பி, விவசாயம் செய்த காலம் மாறிவிட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல், எங்கள் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் நடந்து வருகிறது. எங்கள் கிராமத்தில் மட்டும், 22 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இவற்றின் மூலம், விவசாயத்திற்கு நீரை எடுக்க, எடுக்க, நிலத்தடி நீர் மட்டம் நிச்சயம் குறையும்'' எனத் தெரிவித்தார். மேலும், ""இந்நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில், தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. அதன் அறிகுறியாக, இப்போதே எங்கள் பகுதியில், தண்ணீர் லேசாக உவர்க்கிறது'' என்றார்.

ஊடு பயிர்களை"ஊடு' கட்டிய அசுரன் யார்?
தாளடி, சம்பா நெல் சாகுபடிக்குப் பின், உளுந்து, நிலக்கடலை, பச்சைப்பயறு போன்ற ஊடு பயிர்களைப் போடும் முறை, தஞ்சையில் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.இந்தப் பயிர்களில் உள்ள வேர் முடிச்சுகள், இயற்கையாக அமோனியா உரம் தயார் செய்து மண்ணை வளமாக்குகின்றன. மேலும், இந்த வேர்கள் ஆழமாகப் பரவும் தன்மை கொண்டவை என்பதால், மண்ணை மென்மையாக்குகின்றன. இதனால், மண்ணின் மேற்பரப்பு, மழைநீரை உள்வாங்கும் பக்குவத்திற்குத் தயாராகிறது.ஆனால், தற்போது, தஞ்சை விவசாயிகள் ஊடு பயிர்களை புறக்கணித்து விட்டு, நெல் பயிரை மட்டுமே விதைத்து வருகின்றனர்.

இதுகுறித்து, தொப்பன்குடிசையைச் சேர்ந்த, இயற்கை முறை விவசாயி சித்தர், ""ஆழ்துளைக் கிணற்றுப் பாசன முறையால் குறையும் நிலத்தடி நீரை, பயிர் சுழற்சி முறையால் எளிமையாக ஈடுசெய்யலாம். ஆனால், தற்போது பெரும்பாலான விவசாயிகள், ஆண்டு முழுவதும் நெல் பயிரை மட்டுமே விதைக்கின்றனர்'' எனக் கூறினார்.

மேலும், ""இதற்கு இடப்படும் ரசாயன உரங்களும், தன் பங்கிற்கு மண்ணை இறுகச் செய்கின்றன. இதனால், மழைநீர் உறிஞ்சப்படாமல், வீணாகக் கடலில் கலப்பதுடன், நிலத்தின் வளமான மேற்பரப்பு மண்ணும், அடித்துச் செல்லப்படும் அவலம் ஏற்படுகிறது'' என்றார்.

ஆட்களை மாயமாக்கிய அசுரன்:
விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது, குதிரைக் கொம்பைப் பிடிப்பது போன்ற விஷயமாக தஞ்சையில் மாறிவிட்டதால், தற்போது பெரும்பாலும் இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. இயந்திர அறுவடையால், பயிர் சுழற்சி முறையை செயல்படுத்துவதில், நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர்.

புன்னைநல்லூர் அடுத்த, மாரியம்மன் கோவில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மனோகரன், ""தாளடி, சம்பா நெல் அறுவடைக்கு ஒரு வாரம் முன்பே, அதாவது தை முதல் வாரத்தில், வயலின் ஈரப்பதம், ஊடுபயிர் விதைகளை விதைப்பதற்கு ஏற்றதாக இருக்கும். அப்போதே வயலில் பட்டம் பிரித்து, ஊடு பயிர்களுக்கான விதைகளை விதைப்போம்.ஆனால், இயந்திரத்தை வைத்து அறுவடை செய்வதால், வயலை முழுவதும் காயவைத்த பின்தான், இயந்திரத்தைக் கொண்டு அறுவடை செய்ய இயலும். இதனால், ஊடு பயிர்களுக்கான விதைகளை, குறித்த நேரத்தில் விதைக்க முடிவதில்லை. அப்படி விதைத்தாலும், அறுவடை இயந்திரம் அவற்றை நசுக்கிவிடும்'' என்றார்.

தரிசாகும் விவசாய நிலங்கள்:
ஆள், நீர் பற்றாக்குறையால், தஞ்சையில் 2007-08ம் ஆண்டு 10,145 எக்டேராக இருந்த தரிசு நிலங்கள், 2009-10ம் ஆண்டில் 14,229 எக்டேராக அதிகரித்தது. அதாவது, இரண்டு ஆண்டுகளில், தரிசு நிலங்களின் அளவு, 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து, தஞ்சை, காட்டுப்பாக்கம் வேளாண் இணை இயக்குனர் அலுவலக அதிகாரி கூறுகையில், ""இன்றைய இளம் தலைமுறையினர், விவசாயம் செய்ய விரும்பவில்லை. பாரம்பரியமாக விவசாயம் செய்வோர் கூட, தங்கள் பிள்ளைகள் சில ஆண்டுகளாவது வெளிநாடு சென்று சம்பாதிப்பதையே விரும்புகின்றனர். இதனால், விவசாயத்திற்குப் பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்திலும், தரிசு நிலங்கள் அதிகரித்து வருகின்றன. இவை, நாளடைவில் வீட்டுமனைகளாக மாறிவிடுகின்றன'' என்றார்.மேலும், ""தரிசாகும் விளைநிலங்களால் ஏற்படும் உற்பத்திப் பாதிப்பைச் சரிசெய்ய, நவீன நெல் விதை ரகங்களை, விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கிறோம். இவற்றால், 15 ஆண்டுகளுக்கு முன், 4,000 கிலோ நெல் அறுவடை செய்யப்பட்ட ஒரு எக்டேர் பரப்பளவில், தற்போது, 6,500 கிலோ முதல் 7,000 கிலோ வரை, அறுவடை செய்ய முடிகிறது'' என தெரிவித்தார்.

உயர் ரக விதைகளுக்கு, கூடுதல் உரங்களும், பயிர் ஊக்கிகளும் தேவைப்படுகின்றன. இதுவே ஒரு முடியாத வட்டமாக, கூடுதல் உரம், உரத்தினால் மண் இறுக்கம், அதனால் நிலத்தடி நீர் குறைவு என்ற போக்கில், விவசாயத்தை நலிவடையச் செய்யும்.

அசுரர்களை விரட்டுவது தான் எப்படி?
சில அரசுத் திட்டங்களே, விவசாயத்திற்குப் பாதகமாக உள்ளன. குறிப்பாக, நீலத்தடி நீரைப் பாழாக்கும் இலவச மின்சாரம், வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் செய்யும் 100 நாள் வேலை திட்டம், விவசாயிகளை சந்தையில் இருந்து விலக்கும், கொள்முதல் விலை நிர்ணயம்.

இதுகுறித்து, இயற்கை விவசாயி சித்தர், ""குழந்தைக்கு பொம்மை வாங்கிக் கொடுத்துவிட்டு, அதன் காது கடுக்கனைக் கழற்றுவதைப் போல, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்துவிட்டு, விளை பொருட்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்கிறது. இந்த அணுகுமுறை தவறானது. விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை, விவசாயிகளுக்கே வழங்க வேண்டும்'' என்று கூறினார்.

தொடர்ந்து, பசுமையான தஞ்சையின், நெஞ்சை அள்ளும் காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்றால், மேட்டூர் அணைப் பாசனத்தைச் சீர் செய்து, புள்ளி விவரங்களுக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் அசுரர்களையும் விரட்ட வேண்டும்.

தஞ்சை மாவட்டம்:
தஞ்சை மாவட்டத்தில், தஞ்சை, பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுவாசத்திரம், அம்மாபேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய விவசாய வட்டங்கள் உள்ளன.இவற்றில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் எக்டேர் பரப்பளவில், தற்போது விவசாயம் நடக்கிறது.

தொழிற்துறைக்கும் ஆளில்லை: வர்த்தக கூட்டமைப்பு காட்டம்
"குறைவான வேலைப்பளு மற்றும் அதிக சம்பளம் காரணமாக, பெருமளவு தொழிலாளர்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் நோக்கி ஈர்க்கப்படுவதால், இதர தொழில்துறைகளில் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது' என, இந்திய வர்த்தக கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் விளைவுகள் குறித்து, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

ஆய்வில் பங்கேற்ற பெருமளவு நிறுவனங்கள், "தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் குறைவான வேலைப்பளுவுடன் அதிக சம்பளம் வழங்கப்படுவதால், கனரக தொழிற்சாலைப் பணிகளில் ஈடுபட தொழிலாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, ஒப்பந்தப் பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது. இதில், நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதி மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் தான், பெருமளவு பாதிக்கப்படுகின்றன' என தெரிவித்தன.

இந்நிலை மேலும் தொடர்ந்தால், நாடு முழுவதும் திறன் வாய்ந்த பணியாளர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். இந்த நிலையை சரிசெய்ய, கனரக தொழிற்சாலைப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களையும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் சேர்த்துக் கொள்ளலாம் என்ற கோரிக்கையையும், அவை முன்வைத்தன.
விவசாயம் சார்ந்த தொழில்களும், இனி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் சேர்த்துக் கொள்ளப்படும் என, மத்திய அமைச்சர் சரத் பவார் அறிவித்துள்ளார்.எனவே, இதுபோன்ற உபயோகமான துறைகளிலும், இத்திட்டத்தின் தொழிலாளர்களை ஈடுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்து வரும் மேட்டூர் நீர்
தஞ்சையின் முக்கிய பயிரான நெல், குறுவை, தாளடி, சம்பா என, மூன்று பருவங்களில் பயிரிடப்படுகிறது.இதில், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான குறுவை நெல் சாகுபடிக்கு, இம்மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீரையே பெரிதும் நம்பியுள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளில், 12 ஆண்டுகள், தஞ்சை உட்பட 12 மேட்டூர் அணை பாசன மாவட்டங்களுக்கு, குறுவை நெல் சாகுபடிக்கு பரிந்துரைக்கப்பட்ட 137 டி.எம்.சி., தண்ணீரை விட, குறைவாகவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடைத்துள்ளது. தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் பேரவையைச் சேர்ந்த, கலைவாணன், ""கடந்த நிதியாண்டில், இப்பருவத்தில், மேட்டூர் அணை பாசனப் பகுதிகளுக்கு, பரிந்துரைக்கப்பட்ட தண்ணீர் அளவை விட, 50 சதவீதம் குறைவாகத் தான் கிடைத்தது.இதனால், குறுவை நெல் சாகுபடிக்கு, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை எடுக்கும் அவசியம் ஏற்படுகிறது'' என்றார்.

பருவ மழையும், சம்பா சாகுபடியும்
தஞ்சை மாவட்டத்தில், சம்பா பருவத்தில் தான், அதிகளவு நெல் பயிரிடப்படுகிறது. கடந்த நிதியாண்டில், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 459 எக்டேர் பரப்பளவில், சம்பா நெல் பயிரிடப்பட்டது.ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான இப்பருவத்தில், வட கிழக்குப் பருவ மழை பெய்வதால், இம்மழை நீரைக் கொண்டு, பொதுப் பணித் துறையின் பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் மூலம் பாசனத்திற்குத் தேவையான நீர் கிடைத்து வருகிறது.இந்த காலகட்டத்தில், கடந்த நிதியாண்டில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட, 60.87 டி.எம்.சி., தண்ணீர் குறைவாகவே மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டாலும், விவசாயம் பாதிக்கப்படவில்லை.


Related Posts Plugin for WordPress, Blogger...