Search This Blog

Saturday, October 20, 2012

காரை மடித்து வைக்கலாம்


நெருக்கம் மிகுந்த நகரங்களுக்கும் அதன் தொல்லை பிடித்த பார்க்கிங் ஏரியாக்களுக்கும் ஏற்றபடி ஒரு வாகனத்தை வெற்றிகரமாக தயாரித்திருக்கிறது ஹிரிக்கோ என்ற ஸ்பெயின் நாட்டு நிறுவனம்.

இரண்டு பேர் பயணம் செய்யக்கூடிய இந்தக் கார், பேட்டரியில் இயங்குகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை ஓடும்; மணிக்கு 100 கிலோமீட்டர் வேகம் வரை பறக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக டிரைவர் ஒரு பட்டனைத் தட்டினால் ஐந்தரை அடி நீளமே உள்ள இந்தக் கார் இரண்டாக மடிந்து, சுருங்கி, ஒரு டூவீலரின் பார்க்கிங் ஏரியாவுக்குள் அடங்கிவிடுகிறது. இன்று நாம் பயன்      படுத்தும் சாதாரண கார் ஒன்றை நிறுத்தும் இடத்தில் இந்தக் கார்கள் மூன்றை நிறுத்த முடியுமாம்.

மேலும் இந்தக் காரை அப்படியே பக்கவாட்டில் 60 டிகிரி கோணத்தில் திருப்பி ஓட்ட முடியும். இதனால் முன்னும் பின்னும் பம்பர் இடிக்கும் அளவுக்கு கச்சிதமாக இடமிருந்தால் கூட, அங்கு சுலபமாக பார்க் செய்ய முடியும். சில இடங்களில் காரை நிறுத்த மட்டும் இடமிருக்கும். ஆனால் நிறுத்திய பின் கதவைத் திறந்து வெளிவர முடியாது. அந்த அளவுக்கு அருகருகே கார்கள் நிறுத்தப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட தருணங்களுக்காகவே இந்த கார் ஒரு சிறு கணினியோடு இணைக்கப்பட்டுள்ளது. இதனால் நமது ஸ்மார்ட் போன் மூலமே இந்தக் காரை நகர்த்தலாம். நாம் வெளியே நின்று கொண்டு ஸ்மார்ட் போன் மூலமாக இதை எந்த பொந்துக்குள்ளும் பார்க் செய்து வெளியேவும் எடுத்துவிட முடியும்.

ஹிரிக்கோ நிறுவனம்  இதன் விலையை 16,400 அமெரிக்க டாலர் என நிர்ணயித்துள்ளது.

Wednesday, October 17, 2012

Reduce 6 Kgs in 7 days

Change your food habits for 7 days and  loose 6 Kgs in a healthy way without affecting metabolism, a study says.

Find below day wise chart:

1st day: Eat only fruits. You can eat any kind of fruits viz., Orange, apple, Pineapple, Pomegranate, Watermelon, Sapota etc etc. Researchers recommend to eat more watermelon owing to its highly nutrient-rich water. But they advised to avoid Banana.

2nd day: Today eat vegetables. You can add salt and make vegetables little spicy for taste. Eat to fill the stomach; morning eat only potatoes. If you eat boiled vegetables  don't add oil and coconut.

3rd day: Third day you can eat both vegetables and as well as fruits. But don't eat potatoes and bananas. 

4th day: Today you have to eat bananas and milk only. Eat maximum of 3 glass of milk and 8 bananas. If you wish you add something to reduce hunger then eat one cup of vegetable soup.

5th day: This day you can add a very little of rice say one cup. To reduce hunger you can eat big 6 tomatoes. Still feel hungry drink only water. You can drink more or less equivalent to 12 glass of water.

6th day: Today also eat little amount of rice with lot of vegetables. You can eat cooked or  uncooked vegetables until hunger.

7th day: Eat one cup of rice added with lot of vegetables. You can drink fruit juice too. 

That's all; check your weight on 8th day.

General conditions:
  • Except 7th day don't consume fruit juice on all other days. 
  • During this period you can drink coffee and tea without sugar. If you add lemon with tea then it is good.
  • Don't add oil on all days. If not possible add only one spoon.
  • To reduce weight further please leave a 3 day break and continue from day one.
How it works:

a)  In the first two days fruits & vegetables provide energy to body.
b)  From the second day onward you can feel fat burning process has been started inside your body. 
c)  The body regains  potassium & sodium from banana 4th day onward which ensures sufficient nutrients are available. 
d)  More amount of  water added during 5th day used to clean  body organs. 
e)  Little rice added during 5th and 6th day helps the body to get enough nutrients. 
f)  From day 7th changes can be felt being active. 

This study conducted by John Hopkins Research Center of the United States and called as General Motors  Diet.

Note: The diet plan has been revised to suit Indian standards. To read in Tamil (தமிழில் வாசிக்க) click here

Thursday, October 04, 2012

சிறு குழந்தை வளர்ப்பு ஒரு வயது வரை...


கால் முளைத்த வானவில் க்ளுக் என சிரிக்கும் தளுக் என முறைக்கும்  உதடுகளால் உதைக்கும் தத்தித் தாவி நடக்கும் இந்த ‘வானவில்’ எதையாவது எடுக்கிறது... கடிக்கிறது... தடுத்தால் முறைக்கிறது. அல்லது ங்கே என அழுகிறது. மெல்லப் புரளும். சுவரைப் பற்றிக்கொண்டு நடக்க முயற்சிக்கும். எழுந்து உட்காரும். சுற்றிலும் இருக்கும் பொருட்களைத் தொட்டு, பிடித்துப் பார்த்து, கடித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கும். உங்களின் அத்தனை பேச்சுக்கும் எதிர்பேச்சுப் பேசும். தண்ணீர் டம்ளரை எடுக்க முயற்சிக்கும். ‘ம்மா’, ‘ப்பா’, ‘தாத்தா’ என தனது மழலை இசையால் மயங்க வைக்கும். பட்டுரோஜாவைப் போல தொட்டிலில் படுத்திருந்த அந்தப் பட்டுக்குட்டி உருண்டு, புரண்டு, தவழ்ந்து, எழுந்து நடக்க முயற்சிக்கும். ஒரு ரோஜாத் தோட்டம் போல கைகளை நீட்டியபடி, ‘அச்சச்சோ விழுந்துடுவானோ’ என நம்மைப் பதற வைத்து, வேகமாக வந்து கழுத்தைக் கட்டிக்கொள்ளும் அழகே அழகு. அப்போது முத்தமிடும் மகிழ்வின் சுகம் தாய்மையின் வரம்.

6 மாதம் முதல் 1 வயது வரை குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கம் தருகிறார் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் உஷா இளங்கோ. ‘‘ஆறாவது மாதத்தில் குழந்தைகள் தாய்ப்பாலில் இருந்து திட உணவுப் பழக்கத்துக்கு மாறுகின்றனர். இடையில் தாய்ப்பாலோ, தேவைப்பட்டால் பசும்பாலோ தரலாம். புரதம், மாவு, கொழுப்பு உள்ளிட்ட அனைத்து சத்துகளும் உள்ள சரிவிகித சத்துணவு அவசியம். குழந்தைக்கு ‘பிகேவியரல் செட்டப்’ அவசியம். சின்னச் சின்ன விஷயங்களில் கூட பழக்கவழக்கத்தை நடைமுறைப்படுத்தும் உத்திகளை கையாள வேண்டும். 

மூன்று வேளைக்கும் உணவாக வெறும் சாதம் அல்லது இட்லி என ஏதாவது ஒன்றை வயிறு முட்ட சாப்பிட வைப்பதற்கு பதிலாக, காலையில் பசிக்கத் தொடங்கும்போது கொஞ்சம் சூப், வேக வைத்து மசித்த காய், மதியம் பருப்பு சாதம், ஏதாவது ஒரு பழவகை என கலந்து கொடுக்கலாம். அப்போதுதான் குழந்தைக்கு வெவ்வேறு சுவைகள் கிடைக்கும். மல்ட்டி வைட்டமின் சத்துகள் கிடைக்கும். அடம் பிடிக்காமல் சாப்பிடவும் பழகுவார்கள். 

குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம், ஏப்பம், சூடு போன்ற பிரச்னைகளுக்கு சீரகம், வெந்தயம் போட்டுக் கொதிக்க வைத்த தண்ணீரைத் தருவதன் மூலம் தீர்வு காணலாம்.  மருத்துவமனையில் தரப்பட்டுள்ள தடுப்பூசி அட்டவணையை சரியாக கவனித்து, குறித்த காலத்தில் குறித்த ஊசியைப் போட்டு விட வேண்டும். 9ம் மாதத்தில் தட்டம்மை தடுப்பூசி போட வேண்டும்.  

குழந்தைகள் தங்கள் கைக்கு கிடைத்த பொருட்களை எல்லாம் வாயில் வைத்து, சுவைத்துப் பார்த்து, ஆராய்ச்சி செய்யும் காலம் இது. அவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். விளையாட்டுப் பொருளை குழந்தைகள் விழுங்கும் அபாயம் உள்ளது. குழந்தைக்கு கிருமித்தொற்று ஏற்படாமலிருக்க, விளையாட்டுப் பொருட்களை கழுவிப் பயன்படுத்த வேண்டும். 

6 மாதத்துக்கு மேல் குழந்தைகளை அடிக்கடி வெளியில் எடுத்து சென்றால் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புண்டு. வெளியில் செல்லும்போதே குழந்தைக்கான உணவையும் பாதுகாப்பான குடிநீரையும் எடுத்துச் செல்ல வேண்டும். வெயில், நெருக்கமான கூட்டத்தில் குழந்தையை நீண்ட நேரம் அழ விடுவது போன்ற செயலைத் தவிர்க்கலாம். மற்றவர்கள் கொஞ்சும் போது கிருமித் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வதிலும் தாய் கவனமாக இருக்க வேண்டும். 

வெயில், மழை, குளிர் என தட்பவெப்ப நிலைக்குத் தகுந்தாற்போல குழந்தைகளுக்கு நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முன் கூட்டியே யோசித்து உடை, உணவு முறை ஆகியவற்றில் தேவையான மாற்றத்தை செய்யலாம். குளிர், மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவுகள் வரலாம். வெயில் காலத்தில் அஜீரணம், வியர்க்குரு ஏற்படும். தொடர் அழுகை, உணவு மந்தம், இருமல், தும்மல், தூக்கமின்மை போன்ற சங்கடங்கள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை கேட்டு மருந்து தர வேண்டும். நாம் தரும் மருந்து காலாவதியாகிவிட்டதா என்பதை கொடுப்பதற்கு முன் சோதிக்க வேண்டும். காலாவதியான எந்த மருந்தையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது.  

தவழ ஆரம்பிக்கும் வயதில் குழந்தைகளை அதன் போக்கில் கீழே விட வேண்டும். நிலத்தில் முட்டியை வைத்து குழந்தைகள் தவழ்ந்தால் அந்த இடத்தின் தோல் பகுதி கருப்பாகி விடும் என்று சிலர் குழந்தைகளைத் தவழ விடாமல் தடுக்கின்றனர். இது தவறு. வீட்டில் குறைவான இடம் இருந்தால்கூட அவர்களைத் தவழ விட வேண்டும். அப்போதுதான் முட்டித் தசைகளில் இயக்கமும் எலும்பில் வலிமையும் உண்டாகும். முட்டியைப் பயன்படுத்தி தவழும்போது வயிறு, முதுகெலும்புக்கான பயிற்சியும் கிடைக்கும். 

குழந்தையின் மூளை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அதற்கான சின்னச் சின்ன பயிற்சிகளைத் தாய் தொடங்க வேண்டும். அடர் வண்ணங்கள் கொண்ட சிறிய அட்டைகளைக் காட்டி விளையாடலாம். உருவங்களைக் காட்டி அவற்றின் பெயர்களை சொல்வது, வெவ்வேறு சத்தங்களை எழுப்பி விளையாட்டுக் காட்டுவதையும் குழந்தைகள் ரசிப்பார்கள்.  

சாப்பாடு ஊட்டுவதை சுலபமாக்க குழந்தைகளை டிவிக்கு முன்னால் அமர வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு விஷயத்தில் சில நிமிடங்கள் மட்டுமே குழந்தைகள் ஈடுபாடு காட்டும். டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டால் குழந்தைகள் உணவின் சுவையை அறிந்து சாப்பிட மாட்டார்கள். அளவுக்கு அதிகமாகச் சாப்பிடவும் வாய்ப்புள்ளது. கார்ட்டூன் பாடல்களைக்கூட அதிகபட்சமாக அரை மணி நேரம் மட்டுமே பார்க்க அனுமதிக்கலாம். 

இசை கேட்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். 6 மாதங்களில் அவர்களுக்குப் புரியும்படி கைகள், முகபாவனைகள் மூலம் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லலாம். பொம்மைகளையும் பொருள்களையும் வைத்துக்கொண்டு கதை சொல்லி, நடித்துக் காட்டினால் குழந்தைகள் மகிழ்வார்கள். அவர்களது கற்பனை உலகமும் விரிவடையும். இரவு தூங்கப் போவதற்கு முன்னால், கதை சொல்வதை வழக்கப்படுத்தினால் அவர்களுடைய தூக்கம் இனிமையாகும். தாய், புத்தகம் படித்துக் கதைகள் சொல்லும் போது, அவர்களுக்கும் படிக்கும் பழக்கம் தானாக வந்து விடும். 

நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய காலம் இதுதான். வழக்கமாக குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் பாட்டியைப் பயன்படுத்தி குழந்தைகளை அதில் உட்கார வைத்து சிறுநீர் போக சொல்லித்தர வேண்டும். முதலில் அடம்பிடித்தாலும் பின்னர் பழகிக் கொள்வார்கள். பாட்டியில் அமர வைத்து பழக்கப்படுத்தும் போது படுக்கையை நனைக்கும் பழக்கமும் மாறும். மலம் கழிப்பதையும் பழக்கப்படுத்த வேண்டும். 

வாயில் விரல் சப்புவதைத் தடுக்க, அதற்கான கிளவுஸ் பயன்படுத்தலாம். விளையாடி முடித்தவுடன் அனைத்து பொருட்களையும் சேகரித்து பையில் போட்டு, அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். சாப்பிட வைக்க அம்மா தட்டுடன் சாலையில் நிற்பது தவறு. தினமும் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதைப் பழக்கப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் அடம் பிடித்தாலும் போகப் போகப் பழகுவார்கள். 

குழந்தைகள் துறுதுறுவென இருக்கும் காலம் இது. அதற்காக டென்ஷன் ஆகவேண்டியதில்லை. சுறுசுறுப்பாக விளையாடினால்தான் ‘மோட்டார் டெவலெப்மென்ட்’ நன்றாக இருக்கும். குறிப்பிட்ட மாதத்தில் பார்த்தல், கேட்டல், புரிந்து கொள்ளுதல்,  எதிர்வினையாற்றுவதில் தாமதம் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும். ‘குழந்தையின் மாமா ஒரு வயதில் நடந்தார்’, ‘அப்பா இரண்டு வயதில்தான் பேசினார்’ என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, மருத்துவரிடம் ஆலோசிப்பதைத் தள்ளிப்போடக் கூடாது.

ரெடிமேட் உணவுகள், கலர்ஃபுல் உணவுகள், மூளையை வளர்க்கும் உணவுகள் என விளம்பரங்களை முழுக்க நம்பிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு டம்ளர் பாலில் அத்தனை சத்துகளும் கிடைக்காது. குழந்தைகளுக்கு இரண்டு வேளை மட்டும் பால் கொடுத்தால் போதும். திட உணவு தராமல், பால் மட்டுமே குடித்துக் கொண்டிருந்தால் குழந்தைகளுக்கு சத்துக்குறைபாடு ஏற்படும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையவும் வாய்ப்புள்ளது. சத்துக்குறைபாடு, குழந்தைகளுக்கு நோய் வாய்ப்பை அதிகரிப்பதுடன் வளர்ச்சிக் குறைபாட்டையும் உண்டாக்கும். விளம்பரங்களைப் பார்த்து குழந்தையை சோதனை எலியாக பயன்படுத்தக்கூடாது’’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் உஷா. 

நீங்கள் யானை. அவன் யானைப் பாகன். அவனுக்குத் தெரிந்த மொழியில் விரட்டுகிறான். அந்தக் கட்டிவெல்லத்தின் மந்திரக்கோலின் முன் வீட்டில் உள்ள அத்தனை பேரும் சொன்னதைச் செய்யும் சமர்த்து பொம்மைகள்தான். 6 மாதம் வரை குழந்தையை கையில் எடுப்பது, தூங்க வைப்பது என்று அனைத்தையும் அம்மாவே செய்து கொண்டிருப்பார். 6 மாதத்துக்குப் பிறகுதான் குழந்தைக்கும் தந்தைக்குமான நெருக்கம் அதிகரிக்கும். மடியில் கிடத்தி விளையாட்டுக் காட்டுவது, விரல் பிடித்து நடக்க வைப்பது... இப்படி குழந்தையின் மீது, தான் வைத்திருக்கும் அன்பை தந்தை வெளிப்படுத்தலாம். 
உங்கள் செல்லம் அவளாக இருந்தால் அம்மா. அவனாக இருப்பின் அப்பா. 

மனதளவில் மண்டியிட்டு அவர்களிடம் நிறைய கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்துக்கான அழகுகளை முதல் தொடுகை, முதல் வார்த்தை, அடம், அழுகை எல்லாவற்றையும் மறக்காமல் ஏதாவது ஒரு வடிவத்தில் பதிவு செய்யுங்கள். அவர்களின் விரல் பிடித்து நடக்க சம்மதியுங்கள்... உங்களது குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்வார்கள். ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியின் பிரதிநிதி. அத்தனை டென்ஷனும் அந்த குட்டிச் சிரிப்புக்கு முன் பனித்துளி. விளையாடி விளையாடி பறவையாகி, பட்டாம்பூச்சியாகி, கண்ணாடி மொட்டாகி காணாமல் போவீர்கள்! அட... கால் முளைத்த வானவில் இத்தனை ஜாலங்கள் செய்யுமா? செய்யும்! 

Saturday, September 01, 2012

CBSE (சிபிஎஸ்இ) பள்ளிகளுக்கான மாவட்ட வாரியான கட்டண விவரங்கள்


தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலு தலைமையில் தமிழக அரசு ஒரு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள 53 சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து, 31.08.12 அன்று வெளியிட்டது.

ஒவ்வொரு பள்ளியில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதி, ஆசிரியர்மாணவர்கள் விகிதாச்சாரம் உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, அதிகபட்சமாக எல்.கே.ஜி.க்கு ரூ.31,875ம், பிளஸ்-2வுக்கு ரூ.36000மும் நிர்ணயித்துள்ளார்கள். அதிகபட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ள பள்ளிகள் இரண்டும் சென்னையில் உள்ள பள்ளிகள் ஆகும். குறைந்தபட்ச கட்டணமாக எல்.கே.ஜி.க்கு ரூ.6 ஆயிரமும், பிளஸ்-2வுக்கு ரூ.7 ஆயிரமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது

மாவட்ட வாரியாக ஒவ்வொரு பள்ளிக்கான கல்விக்கட்டண விவரங்களை (வகுப்பு வாரியாக) தமிழக அரசின் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Tuesday, August 28, 2012

எளிய முறை உடற்பயிற்சி


மனிதன் இன்பத்தையும், துன்பத்தையும் உடலால் அனுபவிக்கிறான். அப்படியானால் இந்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக மிக அவசியம் இல்லையா? 

தினமும் வீட்டில் சமையல் செய்கிறோம். அடுத்த நாள் மீண்டும் சமையல் செய்ய வேண்டுமானால் அந்த பாத்திரங்களை சுத்தம் செய்தால்தானே மீண்டும் உபயோகிக்க முடியும். அது போலவே மனிதன் தினமும் இந்த உடலால் பலவற்றையும் அனுபவிக்கிறான். மீண்டும் அந்த உடலை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் உடற்பயிற்சி அவசியமாகிறது.  

உடற்பயிற்சி என்பது பாத்திரத்தை சுத்தப்படுத்துவது போல உடலை சுத்தப்படுத்துகிறது. எவ்வாறெனில்,  நமது உடலுக்கும் உயிருக்கும் இடையே ஒத்த உறவு , நன்முறையில் நீடித்திருப்பதற்கு ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சரியாக இருக்க வேண்டும். இதை உடற்பயிற்சி தருகிறது.

இவ்வாறான ஒரு உடற்பயிற்சி முறையை  8 வயது குழந்தை முதல் 80 வயதான பெரியவர்கள் வரை யாரும் செய்யும் வகையில் இயற்கையையொட்டி மனதோடு இணைந்த பயிற்சியாக மிக எளிமையாக வடிவமைத்துள்ளார் வேதாத்திரி மகரிஷி. இந்த உடற்பயிற்சியை அரை மணிநேரத்தில் எந்த ஒரு கருவிகளும் இல்லாமல் உடல் உறுப்புக்களை மட்டுமே வைத்து செய்யலாம்.  கடினமான ஆசனங்கள் எதுவும் இல்லாமல் முழுப்பலனையும் இந்த எளியமுறை உடற்பயிற்சியினால் அடைய முடியும் என்பது இதன் சிறப்பம்சம். 

உடலில் உள்ள உள்உறுப்புகளான குடல், சிறுநீரகம், வயிறு, நுறையீரல், இருதயம் என அனைத்துக்கும் இப்பயிற்சி உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள், பிரஷர் உள்ளவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் இப்பயிற்சியை முறையாக செய்து பெருமளவில் பயனடைந்துள்ளனர் என்பது கவனிக்க வேண்டிய மிக முக்கியமானதாகும். உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இந்த ஓட்டங்களை சரிப்படுத்திக் கொள்ளலாம். 

அருட்தந்தை  வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிய முறை உடற்பயிற்சியில்
  • கைப் பயிற்சி
  • கால் பயிற்சி
  • தசைநார், நுரையீரல் பயிற்சி
  • கண் பயிற்சி
  • கபாலபதி
  • மகராசனம்
  • அக்கு பிரஷர், மசாஜ் பயிற்சி
  • உடல் தளர்த்தல்
ஆகிய பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.

In English: 

The system of physical exercises developed by Shri Vethathiri Maharishi after years of intense research, fulfills the need of maintaining the proper circulation of blood, heat, air, energy and bio-magnetism, ensuring maintenance of health and prevention of disease in a gentle way. It develops the immunity system and thus acts as a preventive and as a curative to various diseases.

The exercises taught are

Hand Exercises:

* Hands and shoulders are strengthened.
* Arthritis, Numbness, Trembling of hands, Pain in the joints etc. are reduced and possibly cured.
* Improves the functioning of lungs.

Leg Exercises:

* Blood circulation gets regulated in all parts of the legs and abdomen.
* Is curative and preventive for sciatica and arthritis.
* By giving pressure to the toes and sole, important organs of the body such as heart, lungs, intestines and brain are activated.

Breathing Exercises:

* Strengthens the lower abdomen muscles.
* Ventilates the lungs and purifies the blood.
* Oxygenises all the glands and organs.
* Helps curing headache, insomnia, asthma and other bronchial troubles.
* Improves grasping power and memory power.

Eye Exercises:

* Helps to improve defective eyesight by toning the nerves and tissues around the eyes.
* Prevents eye strain, burning sensation and other eye diseases.

Kapalabhati:

* Clears the congestion in the nasal passage.
* Helps to cure sinusitis.

Makarasana:

* Regulates the endocrine system.
* Keeps the spine and spinal nerves flexible and healthy.
* Strengthens the backbone and the spinal cord.
* Reduces the excessive sugar in urine and blood.
* Removes unwanted flesh and strengthens the body.
* Regulates the menstrual system.

Acu pressure:

* Blocks due to short-circuit of electrical energy is removed.
* Is a preventive for heart ailments.
* Is helpful in alleviating insomnia.

Massaging:

* Removes tension in all the important organs (liver, spleen, intestines, kidneys, pancreas).
* Refreshes and tones the sense organs, facial nerves and vital organs.

Relaxation:

* Brings down blood pressure.
* Removes recurrence of heart trouble.
* Gives a wholesome rest to the entire system.

All these exercises do not harm any part. Do not take more time.

All exercises except a few, need to be done by closing the eye. Because, one has to take his mind to the part where his/her concentration should lie. Movements should be soft and gentle. There would not be any sweating. It is another form of meditation.

Contact / தொடர்புக்கு: http://www.vethathiri.edu.in/

Wednesday, August 22, 2012

உடற்பயிற்சி - சில உண்மைகள் - 2



உடற்பயிற்சி குறித்த சில உண்மைகள் பாகம்  ஒன்றைத் தொடர்ந்து பாகம் இரண்டு இதோ: 

கருத்து 1:  உடல் நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம்.

ஓட்டமும், மெல்லோட்டமும் (ஜாகிங்) நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால் அவை கால் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒருவர் நீச்சல், நடை, சைக்கிளிங் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவேண்டும். அதன் மூலம், தான் சாப்பிட்டதை விட அதிக கலோரிகளை எரிக்க முடிந்தால் அது சிறந்த உடற்பயிற்சிதான்.

கருத்து 2: அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதே நல்லது.

நேரத்தை விட பயிற்சிதான் முக்கியம். பகல் வேளையில் வசதியான எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம்.

கருத்து 3: உடம்பின் ஒரு பகுதிக்கு மட்டும் தொடர்ந்து பயிற்சி செய்தால் அந்த பகுதியில் வலிமை அதிகரிக்கும்.

மனித மனதுக்கு ஓய்வும், சவாலும் தேவை. அதுபோல் உடற்பயிற்சியிலும் ஓய்வும் தேவை. தொடர்ச்சியான செயல்பாடும் தேவை.

கருத்து 4: வயது முதிர்ந்தவர்களும், மிகவும் இள வயதினரும் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை.

உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு `ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ்' அறிகுறி குறையும். மூட்டு நிலைத்தன்மை அதிகரிக்கும். தவறி விழுந்தால் எலும்பு முறிவைத் தடுக்கும் வகையில் எலும்பு அடர்த்தி பராமரிக்கப்படும்.

மிக இளவயதினருக்கு, உடற்பயிற்சி அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கருத்து 5:  உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு, நாம் ரசித்துச் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் துறக்க வேண்டும்.

 சரியான உணவுமுறை என்பது உடலை சிறப்பாக்கும். பிடித்த உணவை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டியதில்லை. உணவில் கட்டுப்பாடும், அளவும்தான் முக்கியம். முறையாகவும், மிதமாகவும் சாப்பிட்டால் எந்த உணவும், யாரையும் குண்டாக்காது. விருப்பமற்ற உணவை கட்டாயமாக சாப்பிட்டால் மன ஆரோக்கியம் குறையும்.

கருத்து 6: கனமான பொருட்களைத் தூக்குவது தசைகளை வலுப்படுத்தும். எனவே ஒரு பெண், பெண்மையுடன் திகழ எடை குறைந்த எடையுள்ள பொருட்களையே தூக்க வேண்டும்.

கனமான பொருட்களைத் தூக்குவது ஒரு பெண்ணை, தசைகள் திரண்ட அழகி ஆக்கிவிடாது. மாறாக ஆரோக்கியமானவர்களாகவும், பலமானவர்களாகவும் மாற்றும்.

கருத்து 7: எல்லா உடற்பயிற்சிக் கருவிகளும் நம் உடம்புக்கு ஏற்றவைதான்.

வீட்டில் வைத்து உபயோகப்படுத்தும் சில உடற்பயிற்சிக் கருவிகள் நன்றாக அமைக்கப்பட்டிருக்கவில்லை. அதில் நீங்கள் பயிற்சி செய்தால், உங்களுக்கு ஏற்கனவே உடல்ரீதியான பாதிப்புகள் இருந்தால் அவை மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிக் கருவியில் பயிற்சி செய்யும்முன், உடற்பயிற்சி வல்லுநரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது

Thursday, August 09, 2012

உடற்பயிற்சி - சில உண்மைகள் - 1


நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தாறுமாறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது. மேலும், நாம் டி.வி.யில் காணும் சில விளம்பரங்கள் "பதினான்கு நாட்களில் கட்டுடலுக்கு உத்தரவாதம்" என்றும், மற்றும் சில விளம்பரங்கள் "தினமும் நான்கு நிமிடங்கள் செய்தாலே அழகான உடல்கட்டு கிடைக்கும்" என்று கூறுகின்றன. இந்தக் கட்டுரை உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு அவர்களது குழப்பங்களை அகற்றவும், தவறான கருத்துக்களை நீக்கி, தெளிவு பெற்று, நோயற்ற வாழ்வு என்னும் குறைவற்ற செல்வத்தை அடையவும் உதவும் சிறிய முயற்சியாகும்.

கருத்து:1 தொந்தியைக் குறைப்பதற்கு சிறந்த வழி நமது உடலின் நடுப்பாகத்திற்கு (வயிற்றுப் பகுதிக்கு) பயிற்சி கொடுக்க வேண்டும்.

இது ஒரு தவறான கருத்து. நம்மில் பலர் எந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை. இப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தால் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.

கருத்து:2 வாரத்துக்கு இரண்டு நாட்கள் உடற்பயிற்சி செய்தாலே நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு போதுமானது.

இதுவும் தவறான கருத்து. எப்படி விட்டமின்கள் நமது உடலுக்கு தினசரி தேவையோ, அதுபோல மிதமான உடற்பயிற்சியும், நமக்கு தினசரி தேவை. ஏனென்றால், உடற்பயிற்சிகளால் ஏற்படும் நல்ல மாற்றங்களை 48 முதல் 72 மணி நேரங்கள் வரைதான் நமது தசைகளால் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆகவே நமது தசைகளும், அவற்றுடன் தொடர்புடைய நமது இரத்த, சுவாச, செரிமான உறுப்புகளும் உறுதியாகவும், நல்ல நிலையில் இயங்க குறைந்தது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

கருத்து:3 எடையைக் குறைப்பதற்கு வியர்வை வெள்ளம் போல் கொட்டும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இதுவும் ஒரு தவறான கருத்து. வியர்வையானது உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதற்கு மட்டுமே உதவும். அது நமது எடையைக் குறைக்க உதவாது. வேர்வை பொங்க கடுமையான உடற்பயிற்சி செய்த பிறகு நமது உடல் எடை குறைந்தாலும் அது உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால் ஏற்படும் தற்காலிக எடை குறைவே ஆகும். இதை விடுத்து உடல் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கொடுக்காமல் மிதமாக பயிற்சிக் கொடுத்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

கருத்து:4 நடப்பது நல்ல உடற்பயிற்சிகளுள் ஒன்று

உண்மை. நடக்கும் போது இரத்த ஓட்டம் சீராக உடலில் எல்லா பாகங்களுக்கும் கிடைக்கிறது. இதனால் திசுக்களுக்குத் தேவையான சக்தி (கலோரிகள்) கிடைப்பதால் நமது உடல் நலம் நன்றாக இருக்கும்.

நாம் ஒரே இடத்தில் வெகுநேரம் உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ வேலை செய்பவராக இருந்தால், நமது கால்களில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு அங்குள்ள இரத்தத்தை திரும்பவும் இதயத்துக்கு அனுப்ப போதுமான அளவு அழுத்தம் கிடைப்பதில்லை. இதனால் இரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் சீராக இருப்பதில்லை. நடக்கும் போது நமது கால்களில் உள்ள தசைகள் இயங்கி, அருகிலுள்ள இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்தத்தை இதயத்துக்கு அனுப்பத் தேவையான சக்தியை அளிக்கின்றன. ஆகவே தினமும் 2 அல்லது 3 கி.மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிறந்த உடற்பயிற்சி ஆகும்.

கருத்து:5 ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோரிகளை எடுக்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது.

மிகத் தவறான கருத்து. நாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல. ஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன. எனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம்.

கருத்து:6 தசைகள் வி¡¢வுபடுத்த செய்யும் உடற்பயிற்சிகளை வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செய்தால் தசைகளுக்கு வலிவும், வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

இதுவும் தவறான கருத்து. இம்மாதிரியான பயிற்சிகளை மிகவும் மெதுவாக செய்யவேண்டும். உதாரணமாக குனிந்து நிமிர்வது, இடுப்பு தசைகளை முறுக்கும் (Twisting) பயிற்சிகள், மற்றும் குனிந்து விரல்களால் பாதங்களை தொடுவது முதலான பயிற்சிகளை வேகமாகச் செய்யும்போது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு வலியும், தசை நார்கிழிதல் முதலான மோசமான விளைவுகள் ஏற்படும். ஆகவே தசைகளை தளர்வாக வைத்துக் கொண்டு மெதுவாக ஆனால் திரும்ப, திரும்ப செய்யும்போது தசைகளுக்கு வலிவும், பொலிவும் வளைந்து கொடுக்கும் தன்மையும் கிடைக்கும்.

கருத்து:7 நமது சுவாசமும், இதயத் துடிப்பும், உடற்பயிற்சி செய்து முடித்த 3-5 நிமிடங்களுக்குள் சீராக வேண்டும்.

சரியான கருத்து. உடற்பயிற்சி முடிந்து 5 நிமிடங்களுக்கு மேலாகியும், சீரான மூச்சு திரும்பவில்லை என்றால் நாம் மிக அதிகமாக தசைகளுக்கு பயிற்சி கொடுத்து விட்டோம் என்று பொருள். அளவுக்கதிகமான உடற்பயிற்சியானது நமது தூக்கத்தை கெடுப்பதுடன், அடுத்த நாள் களைப்பையும், சோர்வையும் உண்டாக்கிவிடும். ஆகவே உடற்பயிற்சியை மிதமாகவும், குதூகல உணர்வுடனும் செய்வது அவசியம்.

கருத்து:8 ஒரு நாளில் குறைந்த பட்சம் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்?

20 நிமிடங்களாவது நாம் ஒரு நாளில் உடற்பயிற்சி செய்வது அவசியம் கழிவு மண்டலங்களின் இயக்கம், செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம், முதலிய அனைத்து இயக்கங்களுக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தசைகள் காரணமாக உள்ளன. நாம் செய்யும் உடற்பயிற்சி இந்த 400 தசைகளுக்கும் நீட்டவும், மடக்கவும் பயிற்சி கொடுப்பதாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 20 நிமிடங்களாவது இந்த தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் தான் நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் "14 நாட்களில் கட்டுடல் நிச்சயம்" போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். வனப்பான உடல் பொலிவைப் பெறுவது என்பது, நாம் உடற்பயிற்சி ஆரம்பித்த போது நமது ஆரோக்கியம், உடல் தகுதி முதலியவை (Physical Fitnes) எப்படி இருந்தது என்பதைப் பொறுத்து அமையும். சிலருக்கு சில வாரங்களோ வேறு சிலருக்கு சில மாதங்களோ கூட ஆகலாம். ஆனால் ஒன்று நிச்சயம். எவராக இருப்பினும், நாளை, நாளை மறுநாள் என்று தள்ளிப் போடாமல் உடற்பயிற்சியை மிதமாகவும், தவறாமலும், ஒழுங்காகவும் செய்து வந்தால் வாழ்நாள் முழுவதும் கட்டுடலுடனும், முழு உடல் தகுதியுடனும், ஆரோக்யமாக வாழலாம்.

Thanks:  Rtn.Dr.S.முரளி M.D.S.,


Monday, July 30, 2012

நலமுடன் வாழ சித்தர் அருளிய எளிய 10 வழிகள்


உணவு:
1) சாப்பிடும் போது காய்ச்சிய நீரை அருந்துவது கூடுதல் நன்மை பயக்கும்.
2) பசுவின் பால், மோரையே அருந்த வேண்டும்; புளித்த தயிரை உண்ணலாம்
3) நெய்யை உருக்கி பின் சாப்பிட வேண்டும்
4) முதல் நாள் சமைத்த கறியை உண்ண வேண்டாம்
5) சாயங்கால நேரங்களில் உணவு உண்ண வேண்டாம்

பிற:
6) மலசலங்களை அடக்க வேண்டாம்
7) அடிக்கடியில்லாமல் மாதமொரு முறை மட்டுமே சுக்கிலத்தினை வெளியேற்றுவது நன்மை தரும்.
8) உணவு உட்கொண்ட உடனே உறவு கொள்ள வேண்டாம்
9) எண்ணெய் பதார்த்தங்களைச் சாப்பிட்டால் அந்நாளில் வெந்நீரில் குளிக்கவும்
10) இடது கையை தலைக்கு கீழாக வைத்து வடக்கு திசையைத் தவிர்த்து ஒருக்களித்து உறங்கவும்


Saturday, July 21, 2012

Universe is only empty space?

Answer is: Vast empty space around us that consists of stars, solar system, galaxies etc is called Universe.

Major components are:

1.Solar system- Basically the name solar system is describing the sun’s family. The sun occupies the centered place. Around the sun the remaining nine planets revolve around in different orbits.  As the planets came near to the sun their rotation speed goes on increasing. The motion of all the planets is controlled by the sun’s gravitational pull.

Ordered list of all 9 planets is given below:

1. Mercury

2. Venus
3. Earth
4. Mars
5. Jupiter
6. Saturn
7. Uranus
8. Neptune
9. Pluto


Above list of planets is arranged according to the increasing distances of the planets from sun.

How to recall the list of planets? Remember this:



My Very Educated Mother Just Served Us Nine Pizzas


Lots of other satellites are present in the universe which usually revolves around the planets of the solar system. Moon is also a satellite. It is the natural satellite of earth. Meteors, Asteroids and comets are also part of the solar system.

2. Galaxies: Galaxies are formed by group of starts, gases, and dust particles all are together by strong gravitational forces. Milky Way is one of the galaxies of the universe in which we live. It is also called Akashganga. It appears like an unclear white strip of light elongated across the sky.  

A Milky Way galaxy contains billions of stars, near about -1011. Like Milky Way lots of other galaxies exist in the Universe. The galaxy count is approximately 1011.

3. Stars: Stars are glowing heavenly bodies. Stars emit light due to their high temperatures. The nearest star to us the sun. Stars can be seen on a clear night.   On a clear night at a single time the number of stars we can see is near about 2500. The second brightest star is Alpha Centauri. The approximate distance of the star Alpha Centauri from earth is near about 4.3 light years.

The universe is keep on expanding at the speed of 26.71 lakhs kilometer per hour

Friday, July 20, 2012

வேல செய்றீங்களா? உடம்பு நல்லாருக்கா?



எப்ப பாத்தாலும் வேல வேலன்னே இருக்கீங்களா?  ஜாக்கிரத! வேலை சார்ந்த வியாதிகள்  அதிகரித்து வருகின்றன அப்டீன்னு  ஓர் ஆய்வு சொல்லுது

அது என்ன?

சுமாராக 2 கோடி இந்தியர்கள் வேலையால் ஆரோக்கியமிழந்து இருக்கிறார்களாம். அவர்களில் 1.20 லட்சம் பேர் இறந்து போகிறார்கள் என்கிறது, `பணியிட வியாதிச் சிகிச்சை மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின்' புள்ளிவிவரம். இது உலக அளவில் 17 சதவீதம்.

அதாவது பணியிடப் பாதிப்பு என்பது:

* கோழிப்பண்ணைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் `பேரட் பீவர்'   

* ஆழ்கடலில் மூழ்கி ஆய்வு செய்வோருக்கு ஏற்படும் காயங்கள், 

*சுரங்கங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் இவற்றுடன்,

ஒயிட்காலர் ஜாப்' எனப்படும் அலுவலகப் பணிபுரிபவர்களுக்கு ஏற்படும் நோய்கள்:

* உங்களின் இருக்கை முறைப்படி வடிவமைக்கப்படாததாக இருந்து,  6 முதல் 8 மணி நேரம் இருக்கையில் அமர்ந்து வேலை செய்கிறீர்களென்றால் உங்களுக்கு முதுகுவலி, மணிக்கட்டு வலி உள்ளிட்ட பிரச்சினைகள்  வரும்.

* நாள் முழுவதும் உட்கார்ந்து செய்யும் வேலை, புகைப் பழக்கத்துக்கு இணையானது என்கிறார்கள் மருத்துவர்கள். அது, 
       * `டைப் 2' சர்க்கரை நோய், 
       * இதய நோய், 
       * உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கு இட்டுச் செல்லலாம்.

ஒரு நாளைக்கு 6 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, ஓடியாடி வேலை செய்யும் மற்றவர்களை விட அதிக எடை போடும் வாய்ப்பு இரண்டு மடங்கு. 

சரி, வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்தியர்களில் 43 சதவீதம் பேர் பணிபுரிபவர்கள். எனவே அலுவலக பாதிப்புகளை நாம் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டும் - 
பி.கே. நாக், இயக்குனர், 
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஆக்குபேஷனல் ஹெல்த் 

என்னிடம் வரும் நோயாளிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் இருக்கையில் 
அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள 
இளம் அலுவலர்கள் -  
மருத்துவர் சஞ்சய் போருடே, பிரீச் கேண்டி மருத்துவமனை, மும்பை 
.
சரி என்ன தீர்வு?
 
`இருக்கைப் பணி' புரிபவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 10 நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். 




இந்தப் படங்களிலுள்ளது போல் எப்போதெல்லாம் இடைவெளி கிடைக்கிறதோ அப்போதெல்லாம் படங்களில் உள்ளது போல் செய்யவும். 

இவையெல்லாம் ஒரு ரிலாக்சுக்காகத்தான். ஆனால் தினமும் ஒரு 30 நிமிடங்கள் முறையான உடற்பயிற்சி செய்ய தவறாதீர்கள்.

Above technics are meant for office going peoples. Thanks for doctors, books, internet magazines for their  input. 


அமெரிக்க கார்பொரேட் கம்பனிகளின் இந்திய தாகம்

ஒபாமா இந்தியாவைப் பற்றியும் நம்  அன்னிய மூதலீட்டுக் கொள்கையைப் பற்றியும் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அதில் முக்கியமானது  நம் நாட்டின் முதலீட்டுச் சூழல் நன்றாக இல்லையென்றும் மிகவும் கவலையளிப்பதாகவும் உள்ளது என்பதே.

அமெரிக்க வறட்சியைப் பற்றியும், அதிபர் தேர்தலில் எப்படி ஜெயிக்கலாம், அந் நாட்டின் நிதிப்பற்றாக்குறையை, வேலையின்மையை எப்படி சரிசெய்யலாம் என்பதைப் பற்றியும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டிய நேரத்தில்  இந்தியாவைப் பற்றிப் பேச நேரமிருக்கிறதென்றால் அமெரிக்க கார்ப்பொரேட் கம்பனிகள் எப்படி  அந்நாட்டை ஆள்கிறது என்பதைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.

அந் நாட்டின் கம்பெனிகள் இங்கு நுழைந்து நம் பணத்தை வாரிச்செல்ல சில்லறை வணிகத்திலும்  இன்ஸூரன்சிலும் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்பதே அவற்றின் கோரிக்கை. ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி வென்றுவிட்டால் அடுத்து வரும் நிதி அமைச்சர் அமெரிக்காவின் இந்தக் கொள்கைகளை செயல் படுத்த வேண்டும் என்பதே ஒபாமவின் (வேறு வகையில் சொல்வதென்றால் அமெரிக்கா கார்பொரேட் கம்பனிகளின்) விருப்பம். அதற்காகத்தான் ஒரு நினைவூட்டல் கடிதம் போல முதலிலிலேயே சொல்லிவிட்டார். 

ஆனால் ஒபாமா நம் நாட்டு கம்ப்யூட்டர் கம்பனிகளுக்கு அவுட் சோர்சிங் செய்வதை எதிர்க்கிறார். ஏனெனில் அங்கு வேலை வாய்ப்பு குறைந்து விடுமாம். 

இந்தச் சூழ்நிலையில் நாம் நம் அரசியல் வாதிகளை நம்பாமல் (பெட்டி வாங்கிக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்வர்)  எச்சரிக்கையுடன் இருந்து அமெரிக்காவுக்கு அடிமையாவதைத் தடுக்க வேண்டும். 

Wednesday, July 18, 2012

I know how Sachin got his MP seat!


--I guess you must have heard this from someone you know. Also, try this – “Oh! She? We all know how she got her promotions. After all she is pretty enough to impress the boss..” Sounds familiar?

Now, if the above said is from someone in your close circle, keep a distance then. If it is you who have mouthed it – go on, read further..  


Ask yourself, how do you want to be remembered? A well-wisher? Or a best critic?
If your criticism is intended to help someone to improve, well then. But if you simply drop your words and go, you are filled with nothing more than jealousy! And the payment would come sooner or later. 

The more and more you throw your negativity, more people would be moving away from you. You will invariably end up being the last person to know about your close one’s success. Now, that would be a bitter medicine to swallow (but, who wants to be judged in real life anyway?)

We can try and give our best in whatever we do. But there are no tailor-made situations.. If someone could get better output, let’s learn to accept that too. 

After all, no book is judged by its cover. What we call “lucky” may be the other person’s preparedness in grabbing the right opportunity!

For me, success lies in living a “content” life. Being content doesn’t mean being happy with yourself alone. But being happy for others too..

So, let’s be the first one to appreciate and
Last one to criticize !!

Keep Smiling and make others smile too.. :)
With love,
Vigna

Sunday, July 15, 2012

வள்ளலாரின் வாழ்க்கை

அருட்பெருஞ்சோதி - வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை படம் பிடித்து காட்டுகிறது. ஞான வழியை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த படம் ஒரு வழிக்காட்டியாக இருக்கும். எனக்கு இந்தப்படம் மிகவும் பிடித்திருந்தது. படம் பார்க்கும் நண்பர்களே! படம் பார்த்துவிட்டு உங்களின் விமர்சனத்தையும் எழுதுங்களேன். உங்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

Thanks to  வசந்த்

Tuesday, July 10, 2012

வாங்க நீங்களும்...

This is bilingual portal. Tamil and English are being used to share the knowledge among people. Now you can also write on this blog within a boundary of knowledge sharing. If you are interested please do mail to sarawanan@skygroups.org

து ஒரு இரு மொழி வலைத்தளம், தமிழிலும் ஆங்கிலத்திலும் மக்களிடத்தில் கருத்துகளை எடுத்துச்செல்ல இந்த வலைத்தளம் முனைகிறது. நீங்களும் இம்முயற்சியில் பங்கேற்க விரும்பினால்  sarawanan@skygroups.org என்ற முகவரியில் உங்கள் விருப்பத்தினைத் தெரிவிக்கவும். 

Monday, July 09, 2012

புகைப்பழக்கத்தை நிறுத்த, தொடர்ச்சி...

சென்ற பதிவின்  தொடர்ச்சி...

புகைப்பழக்கத்தினை நிறுத்த என்னென்னவெல்லாம் செய்யலாம் என்ற லிஸ்டில் நிக்கோடின் கலக்காத சிகரட்டும் உள்ளது. இதைப் பற்றி விசாரித்துச் சொல்லுங்கள் என்று நண்பர் சொன்னார். சரியென்று இந்தியாவில் உள்ள நிக்கோடின் கலக்காத சிகரட்டை விசாரித்த போது ஈ சிகரட்டைச் சொன்னார்கள். இந்தியாவில் கிடைக்குமா என்று விசாரித்த போது   இந்த இணையத்தளம் கண்ணில் பட்டது. 

எந்தெந்த வகையில் ஈ சிகரட் புகைபிடிப்பதை நிறுத்த(?) உதவுகிறது என்று கீழே வரிசைப்படுத்தி இருக்கிறேன்
  • ஒரே வரியில் சொன்னால் இந்த ஈ சிகரட் பெரிய அளவில் நிக்கோடின் இல்லாதது. ஆனால் புகைக்கும் பழக்கத்தினை நிறுத்தும் கருவியல்ல...
  • பின் எதற்கு என்றால், தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கத்தினால் ஏற்படும் பெரிய அளவிலான உடல் நலக்குறைவை இது சிறிது குறைக்கும்.
  • இது பேட்டரியில் இயங்கும்; சிறு அளவிலான  நிக்கோடினை  கொண்டிருக்கும்.  ஆகவே இதுவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுதான். 
  • மேலும் ஒரு செய்தி என்னவென்றால்  கனடாவிலும், யு கே விலும் ஈ சிகரட் தடை செய்யப்பட்டுள்ளது
சரி வேறு என்ன சிகரட் உள்ளது இந்தியாவில்? இதோ இன்னொரு வகையான இயற்கை முறையிலான சிகரட்:
  • நிர்டோஷ் ஹெர்பல் சிகரெட் - இது இயற்கை முறையிலானது
    • புகையிலை, நிக்கோடின் மற்றும் தாரில்லாது
  • ஹூக்காவும் உள்ளது
  • பேப்பரில் இல்லாததால் தீங்கு விளைவிக்கக்கூடியதல்ல
  • நல்ல மணம் வருகிறது
  • சுவாசம் நாற்றமடிக்காது
எனக்கு புகைக்கும் பழக்கமில்லை எனவே இந்தத் தகவல்கள் நண்பரிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் போதோ அல்லது இணையத்தில் 
உலாவிக்கொண்டிருக்கும் போதோ கண்டறிந்து பதிப்பிக்கப்பட்டது.

Sunday, July 08, 2012

புகைப்பழக்கத்தை நிறுத்த...



புகைப்பழக்கத்தை நிறுத்த சில டிப்ஸ்...

- சிகரெட்டை நிறுத்த நினைப்பவர்களுக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்காத சிகரெட் என்று ஒன்று உள்ளது. எப்படியென்றால் அந்த சிகரெட்டில் புகையிலை அல்லது நிக்கோட்டினுக்கு பதிலாக, ஒரு சில ஃப்ளேவரான புதினா அல்லது ஆசையைக் கட்டுப்படுத்தும் மெத்தனால் என்பவை இருக்கின்றன. இதனால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, மனநிறைவு அடையும் வகையில் இருக்கும்.

- டார்க் சாக்லேட் மிகவும் சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. எப்போது புகைப்பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சாக்லேட்டை சாப்பிட்டால் பசியானது அதிகரிப்பதோடு அதன் சுவையால் சிகரெட்டை மறக்கச் செய்துவிடும்.

- சோம்பு, நட்ஸ் போன்றவற்றை வாயில் போட்டு மெல்லுதல் மிகவும் சிறந்த, ஆரோக்கியமான ஒன்று. நட்ஸில் பாதாம் கொட்டையை வாயில் போட்டு மென்றால் உடலுக்கு மிகவும் சிறந்தது.

- எப்போதெல்லாம் புகைபிடிக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறதொ, அப்போதெல்லாம் 2-3 வாழைப்பழங்களை சாப்பிடலாம். இது புகைப்பழக்கத்தை நிறுத்த ஒரு சிறந்த வழி.

இவற்றையெல்லாம் செய்தால் புகைப்பழக்கம் போவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

Thursday, July 05, 2012

திகைக்க வைக்கும் செக்ஸ் கொடுமைகள்!


அதிர்ச்சியானது.. கவலைக்குரியது.. அனைவரும் அறிந்துகொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டியது.. என்ன விஷயம் தெரியுமா?

- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்ற கொடுமை!

* 53 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

* பாதிக்கப்படுபவைகளில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளின் சதவீதம் அதிகம்.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப குழந்தைகளைவிட மேல்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம்.

* ஒன்று முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இந்த பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள்.

* 5 முதல் 12 வயது வரை பாதிப்பின் உச்சம். பாதிக்கப்பட்டவைகளில் 40 சதவீதம் இந்த வயதுதான். 30 சதவீதம் பேர் 13-14 வயதினர்.

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்கிற வர்கள், பீடோபீலியா (Peadophilea) என்ற வக்கிர புத்தி கொண்டவர்கள். இது ஒரு மனநோயாகவும் கருதப்படுகிறது. 

சிறுவர்- சிறுமியர்கள் மூலம் இன்பமடையும் வக்கிரவாதிகள் மேலைநாடுகளில் அதிகம். `சைல்டு செக்ஸ் டூரிசம்' என்ற பெயரில் அவர்களை சில சமூக விரோத அமைப்புகள் ஆசிய நாடுகளுக்கு அழைத்து வருகின்றன. முன்பு தாய்லாந்து போன்ற நாடுகளில் கால்பாதித்த இந்த பாதகர்கள் இப்போது இந்தியாவில் ஒடிசா, கோவா, மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு ரகசி யமாக வந்து `ஆசைகளை' தீர்த்துவிட்டு போகி றார்கள்.

இது தொடர்பான சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்களில் 15 சதவீதத்தினர் 15 வயதிற்கும் குறைவானவர்களாக இருக்கி றார்கள். 25 சதவீதத்தினர் 16 முதல் 18 வயதிற்கு உள்பட்டவர்கள். 2005-ம் ஆண்டு இந்தியாவில் 44,476 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார் கள். அவைகளில் 11,008 குழந்தைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவர்கள் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

- குழந்தைகளை எளிதாக ஏமாற்ற முடியும்.

- குழந்தைகள் காட்டிக்கொடுக்காது.

- குழந்தைகளுக்கு விளைவுகளை புரியத்தெரியாது. எதிர்ப்பு தெரிவிக்காது.

- தனக்கு ஏற்பட்ட பாதிப்பை குழந்தைகளுக்கு விளக்கத் தெரியாது. விளக்கினாலும் பெற்றோர் அதை நம்பமாட்டார்கள்.

- வயதானவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சும் பாவனையில் வக்கிர செயலில் ஈடுபடும் போது, பெற்றோருக்கு சந்தேகம் வராது.

இப்படிப்பட்ட பல காரணங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித் துக்கொண்டே போகிறது. கற்பனைக்கு எட்டாதவிதத்தில்கூட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள் அல்லது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், வேலைக்காரர்கள், அம்மாவின்- அப்பாவின் நண்பர்களாக வந்து போகிறவர்கள்.... போன்றவர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். புதிய நபர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு.

பயணங்கள், திருவிழா, திருமணவிழாக்களில் உருவாகும் மக்கள் நெருக்கடியை பயன் படுத்தி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தருபவர்கள் உண்டு. குழந்தை தொழி லாளர்கள், தெருவோரக் குழந்தைகள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவது சாதாரண விஷய மாக மாறிக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள், ஒருசில பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பாலியல் பலாத்காரத்தால் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலா வதாக அவர்களுக்கு பால்வினை நோய்கள் உண்டாவதை குறிப்பிடலாம். குழந்தைகளின் `உறுப்பு' பகுதியில் புண்களோ, கட்டிகளோ, சீழ் வடிதலோ இருந்தாலும் குழந்தையின் தாய்க்கு அது பால்வினை நோயின் அடையாளம் என்ற சந்தேகம் வருவதில்லை. ஒருசில மருத்துவர்களும் அது பால்வினை நோயின் அறிகுறி என்பதை உணராமல், வேறு விதமான சிகிச்சைகள் கொடுத்துவிடுவதும் உண்டு.

நன்றாக தெரிந்தவர்களால் குழந்தைகளுக்கு பாலியல் பாதிப்பு ஏற்படும்போது, அவை களின் உடலில் காயங்களோ, சிராய்ப்புகளோ இருப்பதில்லை. அதனால் பெற்றோரோ, மருத் துவர் றகளோ குழந்தை பலாத்காரத்திற்கு உட்பட்டிருக்கிறது என்று முதலில் நினைப்ப தில்லை. அப்படியே நினைத்து விசாரித்தாலும் குழந்தையால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறமுடியாது.

வெளிநபர்களால் பாதிப்பு ஏற்படும்போது காயம், சிராய்ப்பு, உறுப்பு பகுதியில் ரத்தம் வடிதல் போன்றவை காணப்படும். அவசரத்திலும், பயத்துடனும் அந்த பாதகர்கள் செயல்படுவதால் குழந்தைகள் காயம் அடைந்துவிடுகின்றன.

பலாத்காரத்திற்கு உள்பட்ட குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றன. பால்வினை நோய் மற்றும் காயங்களை சிகிச்சையால் குணப்படுத்திவிடலாம். ஆனால் மனநிலை பாதிப்பால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். வயதுக்கு மீறிய பாலியல் மாற்றங்கள், மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, எதைக் கண்டாலும்- யாரைக் கண்டாலும் பயம், தனிமை மீது விருப்பம், உணவில் நாட்டமின்மை, போதை மருந்துகளுக்கு அடிமையாகுதல், வீட்டை விட்டு ஓடுதல், படிப்பில் ஆர்வமின்மை, பாலியல் தொழில் ஆர்வம் போன்றவை முக்கியமான எதிர்கால பாதிப்புகளாகும்.

மக்கள் விழிப்புணர்வு கொண்டால் மட்டுமே இந்த பாதகத்தை தடுக்கவோ, குறைக்கவோ முடியும். சமூகத்தின் அடிப்படையில் இருந்து இந்த பணியை தொடங்கவேண்டும். பள்ளி கள், கல்லூரிகள், மருத்துவ துறை, தன்னார்வ அமைப்புகள், அரசு அமைப்புகள் ஆகிய அனைத்தும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும். தங்கள் தம்பி, தங்கை களை காத்து கண்காணிக்க மூத்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். குழந்தைகளின் உடலில் எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது நல்ல தொடுதல் என்றும்- எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது தவறான அணுகுமுறை என்றும் சொல்லித்தர வேண்டும். இதை சரியாக சொல்லித்தர அம்மாக்களாலே முடியும்.

மற்றவர்களின் பிரச்சினைக்குரிய செயல்கள் பற்றியோ, பிரச்சினைக்குரிய நபர்கள் பற்றியோ குழந்தைகள் கூறினால் அதை அலட்சியப்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். யாரையும் நம்பி குழந்தைகளை விட்டுச்செல்லக்கூடாது. பொது இடங்களில் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த பாதகத்தில் ஈடுபடு கிறவர்கள் நீதியின் முன்னே நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஒரு தனிநபர் பிரச்சினையோ, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்து பிரச்சினையோ இல்லை. இது சமூக பிரச்சினை. அதனால் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒத்துழைத்து இதை தடுக்கவேண்டும்.

நன்றி: டாக்டர் என்.உஸ்மான் M.D., D.V., Ph.D., 
(பாலியல் நோய் நிபுணர் மற்றும்
உலக சுகாதார நிறுவன ஆலோசகர்) சென்னை.

Tuesday, July 03, 2012

என்றும் இளமை - திருமூலர்



ன்றும் இளமையுடன் வாழ கடுக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

கடுக்காயின் தாயகம் இந்தியா. இது மிகவும் பழமையான மரம். புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென நமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை முறையே அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி, திருவிருதுதம் என்பதாகும். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.

அறு சுவையில் ஒரு சுவையான உப்பு தவிர்த்து துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, எரிப்பு ஆகிய ஐந்து சுவை நிறைந்த கடுக்காயில் வாத-பித்த-கப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது.  இதன் ஓங்கி நிற்கும்சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு 5 கிராம் கடுக்காய் தூள் எடுத்து சூடான நீரில் கலந்து பருகவேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மேலே குறிப்பிட்டதுபோல் உட்கொண்டால் நன்றாக ஜீரணமாகும். ஜீரணம் ஆன பின்பு மலமும் நன்றாக வெளியேறும்.

கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால் அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.

காலையில் இஞ்சி...
நண்பகல் சுக்கு...
மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண
கோலை ஊன்றி குழைந்து நடந்தவர்
கோலை வீசி குலாவி நடப்பரே..
                                    - சித்த மருத்துவ பாடல்

இதன் பயன்கள் :

ஜீரண சக்தி அதிகரிப்பு, இளமை பாதுகாப்பு, புத்தி சக்தி மேம்பாடு, ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல் ஆகியவை உள்ளன. கனமான தொடைப்பகுதியை சுருக்குதல், தோல்வியாதியை குணப்படுத்துதல், மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல், உடல் வீக்கங்களை போக்குதல், சுவாசநோய்களை கட்டுப்படுத்துதல், ரத்த நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களை கடுக்காய் தருகிறது.

நன்றி: சில பகுதிகள் சித்தர்களைப் பற்றிய வலைத்தளங்களிலிருந்தும், தினமலர் பத்திரிக்கையிலிருந்தும் எடுத்தாளப்பட்டுள்ளன 


Monday, July 02, 2012

மாமியார் ராஜ்ஜியம்


மாமியார் ராஜ்ஜியம் எனப்படும் சர்வாதிகாரப்போக்கு பெண்களிடம் இன்னும் இருக்கவே செய்கிறது. புகுந்த வீட்டிற்கு வரும் மருமகள்கள் என்னதான் சிறப்பாக செயல்பட்டாலும் இப்படிப்பட்ட மாமியார்களிடம் சிக்கிக்கொண்டு தவிக்கவே செய்கிறார்கள். மருமகள்கள், எப்படித்தான் தலைகீழாக நின்றாலும், மாமியாரிடம் மகள் என்ற அந்தஸ்தை பெற முடிவதில்லை.
மாமியார்கள் இப்படி ராஜாங்கம் செய்ய என்ன காரணம்?
மருமகள்களை மாமியார்கள் அன்னிய பெண்ணாக பார்க்கிறார்கள். அவர்களால் தங்கள் அதிகாரம் பறிபோய்விடுமோ என்று அஞ்சுகிறார்கள். தன் மகனை, மருமகள் தன்னிடம் இருந்து பிரித்து-தனக்கு எதிரியாக மாற்றிவிடுவாளோ என்றும் அவர்கள் பதற்றம் அடைகிறார்கள்.
மகன் மீது ஒவ்வொரு அம்மாவும் அலாதியான அன்பு வைத்திருக்கிறார்கள். தன் எதிர்காலமே மகனை நம்பித்தான் இருக்கிறது என்றும் கருதுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு மகன் மாறிவிடுவானோ என்று பயந்து, தன்னுடைய எதிர்காலத்தை நிலைநாட்டி கொள்ளவும், மகன் மீது உள்ள உரிமையை நிலைநிறுத்தி கொள்ளவும் கடுமையான முயற்சிகளை எடுக் கிறார்கள். அந்த முயற்சியில் மருமகள் என்ற உறவு நசுக்கப்படுகிறது.
தன்னுடைய மகன் எப்போதும் தன்னையே பிரதானமாக நினைக்கவேண்டும், தனக்கே முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எண்ணம் எல்லா அம்மாக்கள் மனதிலும் விடாப்பிடியாக இடம் பெற்று இருக்கிறது. அதற்கு தடையாக இருக்கும் ஒரே எதிரி தங்கள் மருமகள்தான் என்று நினைக்கிறார்கள். அப்போது அவர் களை அறியாமலே அவர்களுக்குள் ஒரு மனப் போராட்டம் உருவாகிவிடுகிறது. அதை முறை யாக கையாளத் தெரியாத பெண்கள் மாமி யார்- மருமகள் என்ற புனித உறவை காயப்படுத்திவிடுகிறார்கள்.
உண்மையில் யாரையும் கஷ்டப் படுத்தவேண்டும் என்ற எண்ணம் மாமியார்களுக்கு இல்லை. ஆனால் மகன் மீதுள்ள உரிமை போராட்டத்தால், தங்கள் வீட்டிற்கு வாழ வந்த மருமகள்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர் கள் உணர்வதில்லை. இந்த பாதிப்பு கள் மாமியார்- மருமகள் இடையே உறவு சிக்கல்களை உருவாக்கி, பகையாளிகள் போல் ஆக்கிவிடுகிறது. அப்போது அந்த குடும்பத்தின் வளர்ச்சியும், மகிழ்ச்சியும், எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடுகிறது.
`அனுபவம் என்ற பள்ளியில் மூடன் கற்றுக்கொள்ள மாட்டான்' என்பது பழமொழி. இது சிந்தித்து செயல்படத் தெரியாத மாமியார்களுக்கும் பொருந்தும். மனிதர்கள் தன்னைத்தானே உணர்ந்தாலே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.
ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்தில் தனக்கு தரப்பட்டிருக்கும் இடம் என்ன, புதிதாக வந்திருக்கும் மருமகளுக்கு தரப்பட்டிருக்கும் இடம் என்ன என்பதை புரிந்துகொண்டு செயல்பட்டால் அவர்கள் மனதில் தேவையற்ற அகங்காரம் தலைதூக்காது. இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு போராடும் நிலையும் மகனுக்கு ஏற்படாது. மகனுடன் தேவை யற்ற வாக்குவாதம், மருமகளை பற்றி குறை கூறி வெட்டி பஞ்சாயத்து செய்வது இதை யெல்லாம் தவிர்த்தால் அது மன அமைதிக்கும், மகனுடைய நல்வாழ்வுக்கும் வழிவகுக்கும். மகன் மீது வைத்திருக்கும் அன்பை விஷமாக மாற்றி எதிர்காலத்தை இருட்டாக்கும் செயல்களில் அவர்களுக்கே தெரியாமல் சில அம்மாக்கள் இறங்கி விடுகிறார்கள்.
இதற்கு அவர்கள் சொல்லும் பதில் மிக விசித்திரமாக இருக்கும். `திருமணத்திற்கு முன் இருந்த மகன் இப்போது இல்லை. வெகுவாக மாறிவிட்டான் அல்லது மருமகள் மாற்றிவிட்டாள்` என்று சொல்வார்கள்.
அந்த மகனின் மனநிலையை நினைத்துப்பாருங்கள். அவன் என்ன நினைப்பான் என்றால், `நமது திருமணத்திற்கு பின்பு அம்மா மாறிவிட்டார். நமது வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்கு பதில் தம் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கிறார்' என்று நினைத்து தன் அமைதியை தொலைத்து அம்மாவை எதிரிபோல் பாவித்துக்கொண்டிருப்பார் என்பதை பல அம்மாக்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை.
திருமணம் ஆன புதிதில் வாழ்க்கையை அனுபவிப்பது என்பது மிக அற்புதமான விஷயம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் விஷயம். ஆனால் அதை தொடக்கத்திலே அனுபவிக்க விடாமல் ஆக்கி, காலம் முழுக்க கசப்பை உருவாக்கிவிடுகிறார்கள் சில மாமியார்கள்.
மாமியார் அந்தஸ்து என்பது மரியாதைக்குரிய ஒரு கவுரவமான உறவு. அந்த மரியாதைக்கு தகுதியானவராக அவர் தன்னை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அன்பான அணுகு முறை, பரிவான பேச்சு, விட்டுக்கொடுக்கும் பண்பு, `எதற்கும் கவலைப்படாதே நான் இருக்கிறேன்' என்று மருமகளிடம் காட்டும் நேசம் இவைகள் இருந்தால் போதும் எல்லா மருமகள்களும் வசப்பட்டுவிடுவார்கள். இதுவே வாழ்க்கையின் வெற்றி. இதற்கு பொறுமையும், சகிப்புத்தன்மையும் வேண்டும். இதை மனோபலத்தால் மட்டுமே பெறமுடியும்.
மகனுக்கு சரியான துணையை தேர்ந்தெடுத்து கொடுத்து அவனது வாழ்க்கையை பிரகா சிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒவ்வொரு அம்மாவும் மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் அதற்கு தான் செய்யவேண்டியதை செய்ய மறந்துவிடுகிறார்கள். புதிதாக வந்த பெண்ணுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து குடும்ப வாழ்க்கை நன்றாக செல்ல உதவாமல், உபத்திரவம் செய்பவர்களாக மாறிவிடு கிறார்கள்.
ஒரு மாமியார், தனது மருமகளிடம் நல்லுறவை பேண வேண்டும் என்றால், அவர் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அந்த ஒரு விஷயம் அவர், அந்த மருமகளுக்கு தான் மாமியார் என்று கருதாமல் அவளுக்கும் தான் ஒரு தாய் என்ற சிந்தனை இருந்தால் போதும். அதற்கு அவர் செயல்வடிவம் கொடுத்தால் நல்ல மாமியார் ஆகிவிடுவார்.
குற்றங்குறை என்பது மனிதர்களின் இயல்பு. அதனால் அதை ஏற்றுக்கொண்டு பக்குவப்பட முன்வர வேண்டுமே தவிர, அதை மற்றவர்களிடம் சொல்லி பெரிதுபடுத்தி அதற்கு ஒரு பூதாகரமான வடிவத்தை கொடுக்கக்கூடாது.
குடும்பத்தில் தனது முடிவுகள் மதிக்கப்படவேண்டும் என்று மாமியார்கள் விரும்புவது நியாயம் தான். அதற்கு அவர்கள் மருமகளும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பரந்தமனப் பான்மையுடன் முடிவுகளை எடுக்கவேண்டும். அப்படியானால் அந்த முடிவுகளை எல்லோ ருமே ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். மற்றவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத் தும் முடிவுகளை கைவிடவேண்டும்.
ராஜ்ஜியம் செய்யவேண்டும் என்ற மனப்போக்குடன் மருமகள்களுக்கு வேண்டாத கட்டளை கள் இடுவது, வில்லங்கமாக பேசுவது, அவர்களது விருப்பங்களுக்கு இடையூறாக இருப் பது போன்றவைகளை மாமியார்கள் தவிர்க்கவேண்டும். நல்ல வார்த்தைகளை பேசி, நயமான அறிவுரைகளை வழங்கி, அன்போடும், அனுசரணையோடும், ஆதரவோடும் இருந் தால் மருமகள்கள் மனதிலும் மாமியார்கள் நிரந்தரமாக ராஜ்ஜியம் செய்யலாம்.
நன்றி: மெயில் அனுப்பியவர்க்கு..
Related Posts Plugin for WordPress, Blogger...