Search This Blog

Sunday, September 13, 2015

குழந்தைப் பிறப்பு ரகசியங்கள்

ஒரு பெண் கருத்தரிக்க மாதத்தில் 3 நாட்கள் உகந்தவை. அவர்களுக்கு பொதுவாக 28 நாட்கள் மாத சுழற்சி [Monthly Period] வரும். இதில் முதல் 4 நாட்கள் மாத விலக்கு. 

5ம் நாளிலிருந்து 14ம் நாள் வரை சினைப் பையிலிருந்து [Ovary] ஒரு முட்டை வளரத் தொடங்கும். நன்கு வளர்ச்சியடைந்த முட்டை சினைபையிலிருந்து பெல்லொபியன் குழாய் [Fallopian Tube] வழியாக கருப்பைக்கு [Uterus] வரும். இவ்வாறு வரும் நாள்தான் Ovulation day எனப்படுகின்றது. [சிலருக்கு மாத சுழற்சி நாள் அதிகமாக இருப்பின் வளர்ச்சியடைந்த முட்டை கருப்பைக்கு வரும் நாள் மாறுபடும்]  

இம் முட்டை 2 / 3 நாட்களுக்கு கருத்தரிக்க ஏதுவாக இருக்கும். கருத்தரிக்க முடியாவிட்டால் முட்டை தளர்ச்சியடைந்து 28 நாட்களான பின் கலைந்து மாத விலக்காக வெளியேறி விடும். இம்மூன்று நாட்களில்  தந்தை தாயின் விந்து நாதத்தின் தூய்மை மற்றும் சக்தியைப் பொறுத்து நல்ல அறிவான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கிறது. மேலும் தாய், தந்தை எண்ணிய எண்ணங்கள், செயல்கள், அனுபவங்கள் அனைத்தும் வித்தின் மூலம் கருவுக்குச் செல்கிறது. இத்தருணத்தில்தான் உயிர் வாழ்க்கை தொடங்குகிறது; ஒரு செல் பல செல்களாக பரிணமிக்கிறது.

கருத்தரிக்கக்கூடிய அந்த 3 நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவரை அப்பெண் என்ன செய்திருந்தாலும் அம்மூன்று நாட்களின் செயல்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. கருப்பையில் விந்து நாதக் கலப்பு ஏற்பட்டு குழந்தை 10 மாதம் வளர்கிறது


  • முதல் மாதம் | போல் கம்பமாகவும்
  • 2வது மாதத்தில் தலையும்
  • 3வது மாதத்தில் கால்களும்
  • 4வது மாதத்தில் மூக்கு, முகம் மற்ற உறுப்புகளும்
  • 5வது மாத்தில் காது, நாக்கு கண்களும்
  • 6வது மாதத்தில் நகமும்
  • 7வது மாதத்தில் நரம்பு, எலும்பு, மூத்திரப்பை, சுவாசப்பை, இதயம் ஆகியவை உருவாகின்றன. மேலும் மூச்சும் விட ஆரம்பிக்கிறது
  • 8வது மாதத்தில் கரு முழுமையடைகிறது
  • 9வது மாதத்தில் குழந்தை வெளியேற வசதியாக திரும்பும்
  • 10வது மாதத்தில் குழந்தை வேறு, கருப்பை வேறாகப் பிரியும். பின்பு குழந்தை பிறக்கும்






No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...